Thursday, 20 March 2014

மணமகள் அலங்காரம் எப்படி இருக்க வேண்டும்!


மணமகள், "மேக்கப்’ இயற்கையாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருப்பதுடன், முகத்தில் உள்ள புள்ளிகள், பருக்களின் வடு, தோலில் இருக்கும் சுருக்கங்கள் தெரியாதவாறு மறைத்து விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது, முகம் பளபளப்பாகவும், மிகுந்த பொலிவுடனும் காணப்படும். அதே நேரம், அழகுப் பொருட்கள் தோலில் அதிக நேரம் இருப்பதால், அலர்ஜி மற்றும் பாதிப்பு வராமல் இருப்பதற்கு, தரமான அழகுப் பொருட்களையே உபயோகிக்க வேண்டும். மேலும், முகத்தில் உள்ள மேடு, பள்ளங்களை கவனித்து மேக்கப் போடுவது மிகவும் அவசியம்.


மணப்பெண் சிகை அலங்காரம், மற்றொரு முக்கியமான பகுதி. மணப்பெண்ணுக்கு ஹேர் ஸ்டைல் செய்யும் முன், முன் பகுதியை அழகுபடுத்துவது மிக முக்கியம். பெண்களில் சிலருக்கு நீண்ட தடிமனான முடி இருக்கும். அவர்களுடைய முக வடிவத்துக்கு ஏற்ப, சிகை அலங்காரம் செய்திட வேண்டும். சிலருக்கோ முடி குறைவாக இருக்கும். அவர்களுக்கு தகுந்தபடி முன் பகுதியை சரி செய்யும் விதமாக, ஹேர்ஸ்டைல் செய்வது மிக முக்கியம். மணப்பெண்ணின் உயரம், பருமன் ஆகியவற்றை கணக்கிட்டு, முடி அலங்காரம் செய்ய வேண்டும்.


குட்டையான கழுத்துள்ள பெண்களுக்கு, சற்றே தூக்கியவாறு உள்ள கொண்டையும்,


நீளமான கழுத்துள்ள பெண்களுக்கு, கழுத்தை மூடிய அளவுக்கு இறங்கும் கொண்டையும் போடுவது அழகாக இருக்கும்.


முகம் நீளமாக இருந்தால், காதுகளை மூடியும், இரண்டு பக்கத்திலும் சிறிது முடியை, சுருள் செய்து தொங்கவிடலாம். இது, முகத்தை அகலமாக காட்டும். அகலமான முகம் உடையவர்களுக்கு, முகத்தின் முன் பக்க முடியை தூக்கி காட்டுவதன் மூலம், முகத்தை உருண்டையாக காட்ட முடியும். இதில், முகத்தின் முன்பகுதி அமைப்புக்கு ஏற்ப, மொத்த முடியையும், பின் நோக்கி இருப்பது போல், பின்பக்கமாக சீவுவதோ அல்லது நடு வகிடு எடுத்து, இரண்டு புறமும் பின்புறமாக சீவி, முகத்தின் வடிவத்துக்கேற்றாற் போல் உயர்த்தி காட்டலாம்.


நடுவில் வகிடு இருக்கும் இடத்தில், அழகிய நெற்றிச் சுட்டியை வைக்கலாம். இதில், இன்னொரு முறையும் உள்ளது. அது, காதின் ஒரு பக்கத்தில் இருந்து, மறு பக்கத்துக்கு பின்புறமாக தலை சீவ வேண்டும். இதில், நெற்றிச்சுட்டி வைக்க முடியாது. இந்த மாதிரி முன்புறம் சரி செய்யும் போது, முன் நெற்றியில் ஒட்டிக் கொள்ளும் சுட்டி கிடைக்கிறது. அவற்றை வைத்தும் பொருத்திக் கொள்ளலாம்.


மாலை, ரிசப்ஷன் அலங்காரத்தில், கொண்டை விரும்பாதவர்கள், பின்னல் வேண்டும் என்பவர்கள் பிரெஞ்ச் பிளேட் போட்டு, பின்னலை பின்னி விட வேண்டும். அக்காலத்தில், மணப் பெண்ணிற்கு, பூக்கள் மூலம் ஜடை செய்வர். ஆனால், இப்போதோ, பின்னலின் மேல் ஜரிகை, முத்து, பூக்கள் மற்றும் கற்களால் செய்யப்பட்ட மோடிவ் ஆகியவைகளை கொண்டு அலங்கரிக்கலாம்.

நயன்தாராவுடன் இணையும் தமன்னா..அக்கா?


ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா உட்பட பலர் நடித்த படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.


இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் வெற்றி இயக்குநர் ராஜேஷையும் கவனிக்கத்தக்க வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.


இப்பட வெற்றி காரணமாக படத்தின் தயாரிப்பாளாரான உதயநிதி, தன்னை வைத்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி' இயக்கும் வாய்ப்பை இயக்குநர் ராஜேஷுக்கு அளித்தார்.


தற்போது 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ராஜேஷ். முந்தைய பாகத்தில் நடித்த ஆர்யா, நயன்தாரா உடன் இரண்டாம் பாகத்தில் தமன்னாவும் இணைகிறார்.


மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் த்ரிஷா..!


பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவின் கனவுக்கன்னிகளில் ஒருவர் த்ரிஷா. “என்றென்றும் புன்னகை’ மூலம் இளைஞர்களின் மனதை மறுபடியும் ஒரு முறை கொள்ளையடித்த திரிஷாவுடன் ஒரு சந்திப்பு.

பத்து வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமான ஹீரோயின். எப்படி உணர்கிறீர்கள்?

நேற்று நடிக்க வந்தவள் போலவே உணர்கிறேன். “மெüனம் பேசியதே’யில் நாயகியாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து பதினோரு வருடங்கள் முடித்து பன்னிரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். நேற்றுதான் “மெüனம் பேசியதே’யில் நடித்தது போலிருக்கிறது. பதினோரு வருடங்கள் சீக்கிரமாகக் கடந்துவிட்டதை நம்பமுடியவில்லை. எந்த ஒரு படம் நடிக்கும் போதும் முதல் படம் போலவே உணர்ந்து நடிப்பது எனது ஸ்பெஷல் என நினைக்கிறேன். பெரிதாக சாதித்த உணர்வு, வீண் பெருமிதம் எல்லாம் இல்லை. ஆனால், சந்தோஷமாக உணர்கிறேன். நடிகையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

தமிழ் சினிமாவில் உங்களுக்கு ஒரு சிறு இடைவெளி விழுந்து விட்டதே… தமிழ் சினிமாவை வேண்டுமென்றே நீங்கள் தவிர்ப்பதாக சில வதந்திகள் உங்களைச் சுற்றி இருப்பது தெரியுமா?

தமிழ் சினிமாவை நான் நேசிக்கிறேன். இந்த இடைவெளி எதேச்சையாக விழுந்த ஒன்று. “சமர்’ “என்றென்றும் புன்னகை’ இடையேயான ஒரு வருடம் பெரிய இடைவெளி போல என் ரசிகர்களை உணரவைத்திருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். நான் தமிழ் சினிமாவைத் தவிர்ப்பதாகவோ, தமிழ் சினிமாவில் எனக்கு வாய்ப்புக்கள் இல்லை என்று வருகின்ற செய்திகள் எல்லாம் வெறும் வதந்திகள். ரசிகர்கள் என்னை நம்பத்தயாராக உள்ளனர். ஆனால், மீடியா என்னை நம்பத் தயாராக இல்லை.

இளம் ஹீரோக்களுடனும், வயதான ஹீரோக்களுடனும் பெருமளவில் நடித்துள்ளீர்கள். இவர்களிடையே ஏதாவது வித்தியாசத்தை உணர்கின்றீர்களா?

வித்தியாசம் பெரிதாக இல்லை. ஆனால், ஒற்றுமை என்னவென்றால் அனைவருமே கடின உழைப்பாளிகள். செய்யும் தொழிலுக்கு நேர்மையானவர்கள். ஒரே ஒரு வேறுபாடு, வயதான நடிகர்களுக்கு அனுபவம் அதிகம். அவர்களுக்கு சினிமா சார்ந்த புரிதல் அதிகம். அதற்காக இளைய நடிகர்கள் வயதான நடிகர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்களல்ல. நான் எந்த நடிகருடனும் நடிக்கத் தயாராக உள்ளேன். வயதிற்கும் நடிப்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இவர்களின் வளர்ச்சியை ஒரு அனுபவ நடிகையாக எப்படிப்பார்க்கிறீர்கள்?

ரொம்ப பிரமிப்பா இருக்கு. இவர்களின் அனைத்துப் படங்களையும் பார்த்தேன். அற்புதமா பண்றாங்க. அவர்களின் கதைத்தேர்வு, நடிப்பு என அனைத்துமே அற்புதம். ஒரு நடிகனின் பலமே தனக்கு தகுந்த கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதிலும், தனக்கு எது சரியாக வரும், எது சரியாக வராது என அறிந்து கொள்வதிலும் தான் உள்ளது. விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் இந்த விஷயத்தில் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன்.

சினிமா வாழ்க்கையில் உங்களின் நிறைவேறாத ஆசை ஏதாவது உண்டா?

சில வாய்ப்புகளை நான் பயன்படுத்தியுள்ளேன். சில வாய்ப்புகளை நான் பயன்படுத்தவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. சில நிறைவேறாத ஆசைகள் உண்டு. அதை வெளியில் சொல்ல விரும்பவில்லை.

இன்னும் எத்தனை வருடங்கள் சினிமாவில் இருப்பதாக உத்தேசம்?

நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் சில பரீட்சார்த்தமான படங்கள் செய்ய விரும்புகிறேன். மசாலாப்படங்கள் போதும் போதும் என்கிற அளவிற்கு செய்தாகிவிட்டது. நடிப்பிற்குத் தீனி போடக் கூடிய சிறந்த படங்களை எதிர்பார்த்திருக்கிறேன். எது எப்படியோ நடித்துக்கொண்டிருப்பேன் என்பது மட்டும் உண்மை.

இப்போதுள்ள நடிகைகளில் உங்களுக்குப் பிடித்தவர்?

எல்லோருமே அற்புதமான பெண்கள். இப்போதுள்ள இளம் நடிகைகள் யாருக்குமே வெட்டிபந்தாவோ, வீண் பேச்சுக்களோ இல்லை. தமது கிரீடங்களை கழற்றி வைத்துவிட்டு மிக இயல்பாக இருக்கிறார்கள். நாங்கள் எப்போதாவது தான் சந்திப்போம். சந்திக்கும் வேளைகளில் ஜாலியாக இருப்போம். தமன்னா, காஜல், அனுஷ்கா, நயன் ஆகியோர் என் நெருங்கிய தோழிகள். என்னால் எல்லோருடனும் பழக முடியும் என்பதால் அனைவருமே என்னை நேசிக்கிறார்கள் என நினைக்கிறேன். நானும் அவர்களை நேசிக்கிறேன். எந்த ஈகோவும் இல்லாமல் சகோதரிகள் போலப் பழகுவோம். சந்திக்கும் வேளைகளில் சினிமா பற்றி பேச மாட்டோம். ஜாலியாகவும் கேலியாகவும் கல்லூரி மாணவிகள் சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வதுபோலத்தான் பேசுவோம்.

உங்களைச் சுற்றியுள்ள இந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டுத்தான் ஆக வேண்டும். கல்யாணம் எப்போது?

கல்யாண நேரம் வரும் போது கண்டிப்பாக நடக்கும்

சிவகார்த்திகேயன் – ஆண்ட்ரியா நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2.!


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் குறிப்பிட்டு சொல்லும்படியான நடிகராக வளர்ந்துவிட்டார்.


ஒரு முன்னணி நடிகருக்கு உண்டான மரியாதை இப்போது சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர்கள் கொடுத்து வருகின்றனர்.


இவர் நடித்த மான் கராத்தே ரூ.18 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ‘தாணா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனர் பொன்ராம் அவர்களின் அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயனே நடிக்கிறார்.


இந்த படத்திற்கு ரஜினி முருகன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


 இந்த படத்திலும் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


இந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 என்றும் கூறப்படுகிறது.


ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர்கள் நடிக்கிறார்கள்.


முந்தைய படம் போல முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாக்க உள்ளனர். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

ஹன்சிகா படம் பணால்..!


ஹன்சிகா நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டது. சமீபத்தில் ட்ராப்பான இரண்டாவது படம் இது.


சிம்பு, ஜெய், தீக்சா சேத்துடன் ஹன்சிகா நடித்த படம் வேட்டை மன்னன். நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்த இந்தப் படம் படப்பிடிப்பு சில வாரங்கள் நடந்த பின் கைவிடப்பட்டது. மீண்டும் வேட்டை மன்னனை தூசு தட்டும் எண்ணம் யாருக்கும் இல்லை.


தற்போது தெலுங்கிலும் ஹன்சிகா நடிப்பதாக இருந்த ஒரு படம் கைவிடப்பட்டுள்ளது.


தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் துர்கா படத்தில் ஹன்சிகா ஒப்பந்தமானார். படத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாச ரெட்டி.


படப்பிடிப்புக்கு கிளம்ப இருந்த நேரம் இயக்குனருக்கும், நாக சைதன்யாவுக்கும் முட்டிக் கொண்டது. இயக்குனரை மாற்றினால்தான் படத்தில் நடிப்பேன் என்று அடம்பிடித்தார் நாக சைதன்யா.


தயாரிப்பாளருக்கு ஸ்ரீனிசார ரெட்டியின் கதையும் முக்கியம் ஹீரோ நாக சைதன்யாவின் கால்ஷீட்டும் முக்கியம்.


இந்த இருவரும் சமாதானத்துக்கு உடன்பட மறுக்க படத்தையே ட்ராப் செய்துவிட்டார் தயாரிப்பாளர். ஹன்சிகாவுக்கு இது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அமீர் ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா...!

யோகி படத்துக்குப் பிறகு அமீர் ஹீரோவாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.


இயக்குனர்களின் நடிப்பாசை அவர்களை எப்படி பாதாளத்துக்கு இழுக்கும் என்பதற்கு உதாரணம் அமீர்.


பருத்திவீரன் போன்ற ஒரு படத்தை தந்துவிட்டு ஹீரோ ஆசையில் ட்ராக் மாறியவர் அடுத்து தந்தது ஆதிபகவன் என்ற படுசுமார் படத்தை.


இன்னொரு படத்தை உடனே இயக்கும் தெம்பு அமீருக்கு இல்லை போலிருக்கிறது. மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.


இந்தமுறை அமீரை இயக்குகிறவர் சரணிடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்திக்.


அமீர் ஜோடியாக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஸ்கிரிப்ட் தயாராக இருந்தாலும் படப்பிடிப்புக்கு ஜுனுக்கு பிறகே கிளம்புகிறார்கள்.


ஏப்ரல் அல்லது மேயில் பெப்சிக்கு தேர்தல் நடைபெறுகிறது.


இப்போது பெப்சி தலைவராக அமீர் உள்ளார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என தெரிகிறது. அ


தனால் பெப்சி தேர்தல் முடிந்த பிறகு படப்பிடிப்புக்கு கிளம்புவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ராஜா ராணி சக்சஸ்மீட் - எக்ஸ்க்ளுசிவ் தகவல்கள்!


சில படங்கள் ஏன் எதற்கு ஓடுகின்றன என்ற ரகசியத்தை கண்டுபிடிப்பது கடினம். சென்ற வருடம் வெளியாகி கண்டபடி ஓடி வசூல் செய்தது அட்லீ இயக்கிய ராஜா ராணி. படம் தமிழில் பம்பர்ஹிட்.


அதனை தெலுங்கில் டப் செய்து சென்ற வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.


முதல் மூன்று தினங்களில் நான்கு கோடியை வசூலித்து ஆந்திர நடிகர்களுக்கு ஜெர்க் தந்துள்ளது படம்.


 டப்பிங் படம் என்ற அளவில் இது அபாரமான வசூல்.



முதல்நாளே படத்தின் வெற்றியை அறிந்த தயாரிப்பாளர் முருகதாஸ், ஆர்யா, அட்லீ, ஜீ.வி.பிரகாஷ் அனைவரும் நேற்று ஹைதராபாத் பறந்தனர்.


சூட்டோடு சூடாக சக்சஸ்மீட்டும் நடத்தினர்.


சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்ட படங்களில் இதுதான் டாப் கிராஸர். வரும் வெள்ளிக்கிழமை வீரம் வீரு டொக்கடே என்ற பெயரிலும், இவன் வேற மாதிரி சிட்டிசன் என்ற பெயரிலும் ஆந்திராவில் வெளியாகின்றன.

முக்கியப் புள்ளிகளுக்கு பினாமியாக மாறிய இயக்குநர் லிங்குசாமி...?

ஒரே நேரத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்து வருகிறார் இயக்குநர் லிங்குசாமி.


அதோடு, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன் உட்பட அரை டஜன் இயக்குநர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஆளுக்கொரு ஆபீஸ் போட்டுக்கொடுத்து ஸ்டோரி டிஸ்கஷனில் உட்கார வைத்திருக்கிறார்.



இதை எல்லாம் பார்த்துவிட்டு லிங்குசாமிக்கு ஏதுய்யா இவ்வளவு பணம்? என்ற கேள்வி படத்துறையில் பரவலாக அடிபடுகிறது. அதற்கான பதிலாக இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள்.


லிங்குசாமி படம் எடுப்பது அவரது சொந்தப்பணம் இல்லை, அவரது பெயரில் திரையுலகில் புழங்கும் மொத்தப் பணமும் அழகிரியின் மகன் துரைதயாநிதியின் பணம். சுமார் 200 கோடியை லிங்குசாமியிடம் கொடுத்திருக்கிறார் துரை தயாநிதி என்கிறார்கள் கிசுகிசுப்பாக.


 இன்னொரு தரப்போ, இத்தகவலை அடியோடு மறுப்பதோடு லிங்குசாமியின் பணப்புழக்கத்துக்கான காரணமாக மதுரை அன்புவை சுட்டிக் காட்டுகிறார்கள்.


ஏறக்குறைய 50 கோடிக்கு மேல் மதுரை அன்புவிடம் கடன் வாங்கியுள்ளாராம் லிங்குசாமி. மாதத்தின் முதல் தேதி அன்று வாங்கிய கடனுக்கான வட்டியை கரெக்டாகக் கொடுத்துவிடுகிறாராம்.


அந்த நம்பிக்கையின் பேரில்தான் லிங்குசாமி எந்த நேரத்தில், எத்தனை கோடிகள் கேட்டாலும் அடுத்த அரை மணி நேரத்தில் ரெடி பண்ணி கொடுத்துவிடுகிறாராம் மதுரை அன்பு.

சினிமாவில் நாணயமாக நடந்து கொள்வது மிகப்பெரிய விஷயம்தான்..!

அசினு ரொம்ப நல்லவங்க..! கேரள அரசு விருது கொடுத்தாங்க..!


கேரளத்து பெண்குட்டியான அசின், ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் தமிழுக்கு வந்தவர், குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வந்தவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படம் மூலம் இந்திக்கு சென்று அங்கேயும் முன்னணி நடிகையாகி விட்டார்.


அங்குள்ள பிரபல ஹீரோக்களே அசினுக்கு பிரத்யேக சிபாரிசு செய்து வந்ததால், இப்போது வரை நீடித்துக்கொண்டிருக்கிறார்.


அவ்வப்போது மார்க்கெட் சரிந்தபோதும், யாராவது நடிகர்கள் புகுந்து அசினுக்கு கைகொடுத்ததால் இப்போதும் தாக்கு பிடித்துக்கொண்டிருக்கிறார்.


இதற்கிடையே தமிழ், தெலுங்கு, இநதியில் தான் இயக்கும் படத்தின் நாயகியாகவும் அசினை புக் பண்ணியிருக்கிறார் மணிரத்னம்.


இப்படி பரவலாக நடித்துக்கொண்டிருக்கும் அசின், சினிமாவில் தான் சம்பாதிக்கிற பணத்தின் ஒரு கணிசமான தொகையை சமூக சேவையில் செலவிட்டு வருகிறார். குறிப்பாக, அனாதை பிள்ளைகளை அவர் படிக்க வைத்து வருகிறார்.


 அவர்களது படிப்பு முடிகிற வரை மொத்த செலவையும் தானே ஏற்று வருகிறார். அதனால் அசினின் இந்த சமூக சேவையை உற்சாகப்படுத்தும் விதமாக சமீபத்தில் கேரளா அரசு, அசினை கெளரவித்துள்ளது.


இதையடுத்து, இன்னும் நிறைய சமூக சேவையை செய்ய தூண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அசின்.

நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் அலையும் அமிதாப் பச்சன்! என்ன கொடுமை சார்....!


பாலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகர் என கூறப்படும் நடிகர் அமிதாப் பச்சன்.


ஆனால் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இந்த வயதில் எனக்கு அதிக வாய்ப்பு வருவதில்லை; நிறைய வாய்ப்புகள் தன்னை விட்டு போய்விட்டதாக கூறி உள்ளார்.


பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இமெயில் மூலம் அமிதாப் பேட்டி அளித்துள்ளார்.


 அதில், திரையுலகில் உங்களுக்கு வயதாகி விட்டால், உங்களுக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்காது.


 அவ்வாறு வாய்ப்பு கிடைக்காத போது உங்களைத் தேடி எது வருகிறதோ அதனை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.


எப்போதும் இளம் எழுத்தாளர்களின் கதைகளில் வயதானவர்கள் நடிக்க வேண்டி உள்ளது.


அதனால் அவர்கள் தங்கள் வயதை ஒத்த நடிகர்களையே கதைக்கு தேர்வு செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

தலைவலி அதிகம் வரமல் தவிர்ப்பது எப்படி?

தலைவலி! இதனால் அவதிப்படாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். சிலருக்கு எப்போதாவது ஏற்படுவதுண்டு. ஆனால் சிலருக்கு அதுவே அன்றாட இம்சையாக இருக்கும்.

இதில், அதிகமாக சிக்கி அல்லல்படுபவர்கள். உலகின் பணக்கார நாடான அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான்.

*இதுபற்றி அமெரிக்காவில் உள்ள தேசிய தலைவலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அமெரிக்காவில் தினமும் தலைவலியால் 4.5 கோடிப் பேர் அவதிப்படுகிறார்கள். இதில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 2 கோடியே 80 லட்சம் பேர்.

*தலைவலிக்கு பொதுவான காரணம் பதற்றம்தான். பிரச்னைகளை வெளியில் சொல்லாமல் மனதிலேயே வைத்திருப்பவர்களுக்கு தலைவலியால் பாதிப்பு ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு தலையின் இரண்டு பக்கமும் கழுத்தின் அடிப்பகுதியிலும் வலி இருக்கும்.

*இதைவிட ஒற்றை தலைவலியின் பாதிப்பு மிகவும் அதிகம். இவர்களுக்கு குமட்டல், வாந்தி மற்றும் தலை சுற்றல் போன்றவை அதிகம் இருக்கும், வலியும் அதிகமாக இருக்கும். மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமான தூக்கம், ஏமாற்றம், பசி, உணவுக் கோளாறுகளால் இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்.

எளிய முறையில் கையாண்டால் :

1. பொதுவாக இப்படிப்பட்ட தலைவலியால் தவிப்பவர்கள், சில எளிய முறைகளை கையாண்டால் இதுபோன்ற பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

2. தலைவலி ஏற்படுவதற்கு முன் அவர்களின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். தலைவலியின்போது அதிகமாக தண்ணீர் குடிக்க தோன்றுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

3. ஏனெனில் உடலில் நீர்சத்து குறைவு ஏற்பட்டாலும் தலைவலி வருவதுண்டு. சில உடற்பயிற்சி செய்வது நல்லது. இரவு நன்கு தூங்க வேண்டும்.

4. அதிக தூக்கமும் ஆபத்தைத் தரும். தலைவலி வரும்போது இருட்டு அறைக்குள் தனியாக அமர்ந்து இருக்கலாம்.

5. இப்படி ஏதாவது ஒரு முறையை கையாண்டால் ஒற்றை தலைவலியை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.