Wednesday, 19 March 2014

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்!

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்…


தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.


தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.


சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.


முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?


கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன்
தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.


நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.


கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.


ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.


சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.


பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்
சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.


ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும். 

வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்!

வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்ற…த்தை விரட்டி அடித்துவிடலாம்.

ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை.. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்.

மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.

மருத்துவ ரீதியான காரணங்கள்:

தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் infection ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும் இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள். அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவுமண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:

1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.

3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.

5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.

8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை

வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.
சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.

கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.

குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. !

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஜீத் நடிக்க ஷாலினி எதிர்ப்பு.!


அஜீத்தின் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன ஏ.ஆர்.முருகதாஸ் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அஜீத்துடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்துக்கு முருகதாஸ் ‘தல’ என்று பெயர் கூட வைத்துவிட்டாராம்.



அஜீத் தற்போது கவுதம் மேனனின் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் அவருடைய கால்ஷீட்டுக்காக கே.வி.ஆனந்த், விஷ்ணுவர்தன், ஆகியோர்கள் ஏற்கனவே காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டார் ஏ.ஆர் முருகதாஸ்.



தீனா படத்தில்தான் முதன்முதலாக அஜீத்தை ‘தல’ என்று கூப்பிட வைத்தது. அதன்பின்னர் மீண்டும் இருவரும் கஜினி படத்தில் இணைந்தனர். ஆனால் ஒருவாரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. அந்த படத்தில் இருந்து அஜீத் திடீரென விலகினார். அதன்பின்னர் சூர்யா நடிப்பில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.



தற்போது ஒருஆக்ஷன் கதையின் திரைக்கதை முழுவதையும் முடித்து கையில் வைத்துள்ள முருகதாஸ் இந்த படத்தில் அஜீத் நடித்தால் மிகவ்ம் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரை நேரில் சந்தித்து கதையையும் கூறிவிட்டார். ஆனால் அஜீத்திடம் இருந்து இன்னும் முடிவு கிடைக்கவில்லை.



கவுதம் மேனனின் படத்தை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்யவேண்டும் என ஷாலினி வற்புறுத்தி வருவதால், மனைவியின் பேச்சுக்குத்தான் அவர் முதலிடம் கொடுப்பார் என கூறப்படுகிறது. மனைவி ஷாலினிகாக ஆபரேஷனுக்கு நேரம் ஒதுக்கிவிட்டு முருகதாஸ் படத்தை அஜீத் மறுத்துவிடுவார் என்றுதான் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

கோச்சடையான் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை. வி.ஐ.பி வெளியிட்ட ஆதாரபூர்வ அதிர்ச்சி தகவல்.!


கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதையடுத்து இந்த படம் ரிலீஸ் ஆகும் தேதியை ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர் என்பது போல செய்திகள் தெரிவித்தன.


 இந்நிலையில் கோச்சடையான் படம் வெளிவரும் தேதி குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் கோலிவுட்டின் மிகப்பிரபலமான ஒரு வி.ஐ.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால் கோச்சடையான் படம் வெளிவர வாய்ப்பே இல்லை என்பதுதான்.


கோச்சடையான் படத்தை முதலில் தயாரிப்பதாக ஒப்புக்கொண்ட நிறுவனம் EROS என்ற நிறுவனம்தான். ஆனால் அதன்பின்னர் EROS நிறுவனத்துடன் ரஜினியின் சார்பில் மீடியா ஒன் என்ற நிறுவனம் கோச்சடையானின் உரிமையை வாங்கியது.



 ரிலீஸுக்கு முன்பாக ரூ.50 கோடியை ரஜினியின் மீடியா ஒன் EROS நிறுவனத்திற்கு திருப்பிக்கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். ஆனால் ரஜினி தற்போதைய நிலையில் ரூ.50 கோடியை திருப்பித்தரும் சூழ்நிலையில் இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். அனிமேஷன் செலவுகள் அளவுக்கு அதிகமாக ஆகிவிட்டபடியால் தற்போது பணச்சிக்கலில் இருக்கின்றாராம் ரஜினிகாந்த்.



எனவே தியேட்டர் அதிபர்களிடம் இருந்து கோச்சடையான் படத்துக்காக அட்வான்ஸ் வாங்கி, அந்த பணத்தில் இருந்து ரூ.50 கோடியை திருப்பித்தந்துவிடலாம் என ரஜினி நினைத்தார். ஆனால் வழக்கமான ரஜினி படமாக கோச்சடையான் இல்லை என்றும், இது ஒரு பொம்மை படம் என்றும் பரவலாக செய்தி பரவி வருவதால் இந்த படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்க தியேட்டர் அதிபர்கள் தயங்கி வருகின்றனர்.



 மேலும் இந்த படத்துக்கு பெரிய தொகை எதையும் அட்வான்ஸாக கொடுக்க முடியாது என்றும், படத்தின் வசூலை பொறுத்துதான் பணம் கொடுக்க முடியும் என்றும் தியேட்டர் அதிபர்கள் வெளிப்படையாக தெரிவித்து வருவதால் தற்போது EROS நிறுவனத்திற்கு எப்படி பணம் கொடுப்பது என தெரியாமல் ரஜினி பெருங்கவலையில் இருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது - ‌விள‌க்க‌ம்


ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்றொரு பழமொழி இருக்கிறது.


ஆவாரம் பூவினுடைய மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பழமொழி இது. இந்த ஆவாரம் பூவில் அத்தனை விசேஷங்கள் உள்ளது.


ஆவாரம் பூ, அதன் கொழுந்து இலைகளைப் பறித்து காயவைத்து, உரலில் இடித்து தூளாக்கி அதனை டீ போல குடிக்கலாம்.


தேநீர் போன்று ஆவாரம்பூ நீர் போட்டு குடித்தால் எல்லா விதமான நோய்களும் விலகுகிறது.


இதே ஆவாரம் பூவை புங்கை மர நிழலில் உலர்த்தி பதப்படுத்தும் தே‌நீ‌ர் போ‌‌ன்று அரு‌ந்து‌ம் போது‌ம் எல்லா நோய்களும் நீங்கிவிடும்.


 அதனால், ஆவாரம் பூவை தேநீர் போன்று போட்டுக் குடித்தால் சாவே வராது என்று சொல்கிறார்கள்.


 அதானால்தான், ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்ற பழமொழி வந்தது.

ஆரம்பிக்கும் முன்பே விலைபோன ஆர்யா படம் !



ஆர்யா தனி ஹீரோவா நடித்து கடைசியாக வெற்றி பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன். அதிலும் சந்தானத்தின் பங்கு சரிபாதி. ஆர்யாவுக்கான வியாபார எல்லை சிவ கார்த்திகேயன் அளவுக்கும் இல்லை. அப்படியிருக்க ஆர்யாவின் படம் ஒன்றை ஆரம்பிக்கும் முன்பே விலை பேசியுள்ளதாம் ஒரு நிறுவனம்.



புறம்போக்கு, மீகாமன் படங்களில் நடித்துவரும் ஆர்யா விரைவில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அறிந்தும் அறியாமலும், சர்வம், பட்டியல், ஆரம்பம் என்று விஷ்ணுவர்தனின் அதிக படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஆர்யா. விஷ்ணுவின் புதிய படத்தில் ஆர்யாவும், விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் நடிக்கின்றனர்.


படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நடிகர்கள் தேர்வு நடைபெறவில்லை. தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவாகவில்லை. இத்தனை இல்லைகளுக்கு நடுவில் விஷ்ணுவர்தனின் புதிய படநிறுவனமான விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.


எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதே அறியாத நிலையில் மிகப்பெரிய நிறுவனம் ஒன்று இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை வாங்க முன்வந்துள்ளது. அந்த நிறுவனம் யுடிவியாக இருக்கும் என்பது கோடம்பாக்க பேச்சு.


புறம்போக்கு படத்தை அப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுடன் இணைந்து யுடிவி தயாரித்து வருகிறது. அதேபோல் அஞ்சான் படத்தை அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமியுடனும், நான் சிகப்பு மனிதனை விஷாலுடனும் இணைந்து யுடிவி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சக்களத்தி சண்டை போட்ட சினேகா-ஓவியா. அதிர்ச்சியில் பிரசன்னா !


ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் பிரசன்னாவிற்கும், உடன் வேலை செய்யும் ஓவியாவிற்கும் காதல். இருவரின் ஒருவர் திடீரென வேலை மாற்றலாகி வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் வேலையை விட காதல் பெரிது என எண்ணி ஒரு அதிரடி முடிவை எடுக்கிறார் பிரசன்னா.


அதனால் ஏற்படும் விளைவுகளை காமெடியுடன் கூறியுள்ள கூறியிருக்கிறாராம் “புலிவால்” படத்தின் இயக்குனர் மாரிமுத்து.


இந்த படத்தில் காதலர்களாக நடித்த பிரசன்னாவிற்கும் ஓவியாவிற்கு நிஜமாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாக படக்குழுவினர் கிசுகிசுத்தனர்.


ஷாட் முடிந்ததும் இருவரும் கேரவனில் மணிக்கணக்கில் கடலை போடுகிறார்களாம். இந்த செய்தி சினேகாவில் காதில் விழுந்தவுடன் கொதித்து எழுந்துவிட்டாராம்.


பிரசன்னாவை உலுக்கி எடுத்ததோடு அல்லாமல் நேராக ஓவியா தங்கியிருக்கும் வீட்டிற்கே சென்று அசிங்கப்படுத்திவிட்டாராம்.


அந்த தெரு முழுக்க இதே பேச்சுதான். பின்னர் சினேகாவின் குடும்ப நண்பர் ஒருவர் வந்து சினேகாவை சமாதானப்படுத்தி அழைத்து சென்றிருக்கிறார்.


அந்த தெருவில் உள்ளவர்கள் இந்த சக்களத்தி சண்டையை பார்த்து வெறுத்து போய்விட்டார்களாம்.


பார்க்கத்தான் டீஸண்டாக இருக்கிறார்கள். ஆனால் சண்டை என்று வரும்போது இவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் சேரியைவிட மிக கேவலமாக இருந்ததாக புலம்பி வருகின்றனர் அந்த ஏரியாவாசிகள்.

ஊருக்கெல்லாம் 'தலைவர்'னா ரஜினி: ஆனால் தனுஷுக்கோ...



தலைவா படம் ரிலீஸானதில் இருந்து ரசிகர்கள் விஜய்யை தலைவா என்று அழைக்கிறார்கள்.



 அதே சமயம் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ளவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தான் தலைவர் என்று அன்போடு அழைக்கிறார்கள்.



ஆங்கில பத்திரிக்கைகளும் ரஜினியை தலைவர் என்றே குறிப்பிடுகின்றன.



இப்படி ஊருக்கெல்லாம் 'தலைவர்' ரஜினியாக இருக்க அவரது மருமகன் தனுஷுக்கோ தலைவர் என்றால் அது கவுண்டமணியாம்.



கவுண்டமணியின் பிறந்தநாளையொட்டி தனுஷ் ட்விட்டரில் நேற்று தெரிவித்துள்ளதாவது,


எனது ஆல் டைம் பிடித்த நடிகர், என் தலைவர், தி ஒன் அன்ட் ஒன்லி கவுண்டமணி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

அப்ப ஆர்யா இப்ப விஜய்….


கோலிவுட்டில் அன்றும் சரி, இன்றும் சரி ஈவ்னிங் பார்ட்டில் என்றாலே அதில் இருக்கும் கிக்கே தனி தான்.


 இந்த பார்ட்டி கோஷ்ட்டியில் சமீபகாலமாக ஒரு பெரிய நடிகரின் தலை அடிக்கடி தென்படுகிறதாம்… ஆம் அந்த பெரிய நடிகர் வேற யாரும் இல்ல இளைய தளபதி விஜய் தான்.


நீங்க நினைக்கிற மாதிரி அந்த விஷயத்துக்கு இல்லீங்க, அவருடைய சகாக்களுடனும், இளம் தலைமுறை நடிகர்களுடன் ஜாலியாக பேசி பழக தான் இந்த திடீர் விசிட் என்கிறார்கள்…


இதேபோல் ஆர்யாவும் இந்த மாதிரி பார்ட்டிகளில் சுற்றிக் கொண்டிருந்தார்.


தற்போது பார்ட்டியே வேண்டாம்பா என்று கூறிவருகிறாராம், இந்த திடீர் திருந்தலுக்கு என்ன காரணம் என்று விசாரித்தால் “அங்கெ போனா குடிக்க கூப்பிட்றானுங்க” என்கிறாராம்…


காரணம் இதுமட்டுமல்ல வீட்டில் இவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம் தான்.


விஜய்யின் இந்த வருகையால் ஆனந்தத்திலும், குதூகலத்திலும் இன்னும் ரெண்டு ரவுண்ட் எக்ஸ்ட்ராவே போகிறதாம் எல்லோருக்கும் விஜயை தவிர…

அவர மாதிரி என்னையும் வீட்லையே உட்கார வைச்சிருவாரோ…?


தேர்தல் நேரம் வந்தாலே திரையுலகை சேர்ந்தவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படித்தான் போன சட்டமன்றத் தேர்தலில் காமெடி நடிகர் வடிவேலுவை அரசியலில் இறக்கி விட்டு அவரது திரையுலக வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள்.


இதனால் கடந்த மூன்று வருடங்களாக தமிழ்சினிமா அவரை ஓரங்கட்டி விட்டது.


இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வடிவேலு இடத்தில் இருக்கும் சந்தானத்தை வைத்து ஒரு முழு நீள னகாமெடிப்படம் எடுக்க ஆசைப்பட்டாராம் உதயநிதி ஸ்டாலின்.


முதலில் அவசரப்பட்டு ஒப்பு கொண்ட சந்தானம் பிறகு எங்கே தேர்தல் சமயத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாக இதை பெரிய பிரச்சனையாக்கி விடுவார்களோ?


என்ற பயத்தில் பின் வாங்கி விட்டார். முதலில் என்ன ஜி உங்ககிட்ட எல்லாம் பேமண்ட் பேச முடியுமா? குடுக்குறதைக் குடுங்க என்று சொன்ன சந்தானம் இப்போது இந்த தொகையை கொடுங்க என்று கழற்றி விடும் எண்ணத்தில் ஒரு பெரிய தொகையை கேட்கிறாராம்.


ஆதலால் சந்தானத்தை வைத்து படம் பண்ணும் யோசனையை பின்னுக்குத் தள்ளி விட்டாராம் உதயநிதி.

பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நான் நடிப்பதா..? பொங்கியெழுந்த நடிகை!


அவருக்கு தபு நினைவுக்கு வரவே அவரை அணுகினார். ஆனால் அவரோ பிரியங்காவுக்கு அம்மாவாக நடிக்க மறுத்துவிட்டார்.


அந்த கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்காது என்று கூறி அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.


 பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க மறுத்த தபு இந்நிலையில் தபு குயீன் இயக்குனர் விகாஷ் பெஹ்ல் ஷாஹித் கபூரை வைத்து எடுக்கவிருக்கும் படத்தில் அவரது காதலியாக நடிக்கிறார்.


ஷாஹித் கபூர் பிரியங்காவின் முன்னாள் காதலர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


42 வயதாகும் தபுவை தன்னைவிட 11 வயதே குறைவான பிரியங்காவுக்கு அம்மாவாக அதுவும் வயதானவராக நடிக்க கேட்டால் எப்படி ஏற்றுக்கொள்வார்.


சிவகார்த்திகேயனுக்கு விட்டுக்கொடுத்த ஜெயம்ரவி, ஜீவா!

எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி என்ற படத்திலேயே குத்துச்சண்டை வீரராக நடித்தவர் ஜெயம்ரவி. அதையடுத்து இப்போது பூலோகம் படத்தில் வடசென்னையைச்சேர்ந்த குத்துச்சண்டை வீரராக நடித்துக்கொண்டிருக்கிறார்.



 இப்படத்திற்காக கடும் சிரத்தை எடுத்து உடல்கட்டை மாற்றி ஹாலிவுட் வில்லனுடனும் மோதியிருக்கிறார் ஜெயம்ரவி.



இதேபோல், யான் படத்தில் ஜீவாவும் குத்துச்சண்டை வீரராகத்தான் நடிக்கிறாராம். இவர்களைத் தொடர்ந்து மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனும் குத்துச்சண்டை வீரராகத்தான் நடித்துள்ளாராம்.



ஆக, ஒரே நேரத்தில் மூன்று படங்கள் குத்துச்சண்டையை மையமாகக்கொண்டு கதையில் உருவாகியிருக்கிறது.



அதனால் இந்த படங்களில் யார் நடித்த படம் முந்திக்கொண்டு வருகிறதோ? என்பதை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க இப்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள மான்கராத்தே தான் முதலில் வருகிறது.



ஆக, ஜெயம்ரவி, ஜீவா இருவரும் பின்வாங்கி நின்றபோதும், தங்கள் படங்களின் சாயலில் இல்லாமல் வேறு மாதிரியான கோணத்தில் கதை இருந்தால் தங்களை எந்த வகையிலும் அது பாதிக்காது என்று சொல்லிக்கொண்டு மான்கராத்தேயின் வரவை எதிர்நோக்கியுள்ளனர்.

அமீர்கானுக்கு தேர்தல் கமிஷன் அளித்த கவுரவம்!

2014 லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய சின்னங்கள் என்ற பட்டியலில் பாலிவுட் நடிகர் அமீர்கானையும் தேர்தல் கமிஷன் இணைத்துள்ளது.


தேர்தல் கமிஷன் தனது வாக்காளர் விழிப்புணர்வு பணியில் அமிர்கானையும் இணைத்துக் கொள்ள உள்ளது. இதற்காக, சிறப்பு குறும்படம் ஒன்றையும் அமீர்கான் தயாரித்து, நடித்து வருகிறார்.


பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானவர்களை ஓட்டளிக்க செய்வதற்காக தேசிய சின்னங்கள் என்ற கவுரத்தை தேர்தல் கமிஷன் அளித்து வருகிறது.


இதுவரை இந்த கவுரவம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, குத்துச் சண்டை வீராங்கணை மேரி கோம், பாட்மிட்டன் வீராங்கணை சானியா மிர்சா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோருக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.


இவர்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு, எவ்வாறு ஒட்டளிப்பது என்பது குறித்தும் மக்களுக்கு புரிய வைக்கும் விளம்பரங்களில், தேர்தல் கமிஷனுக்காக நடித்துக் கொண்டுகின்றனர்.

பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீதேவி!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்னர் சில காலம் காணாமல் போன அவரை, தனது முதல் படமான 16 வயதினிலே படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க தேடிப்பிடித்துக் கொண்டு வந்தார் பாரதிராஜா. ஆக, அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் அதன்பிறகு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார் ஸ்ரீதேவி.


தென்னிந்திய சினிமாவில் புகழ் கொடி நாட்டியவர், பின்னர் பாலிவுட்டிற்கும் சென்று கனவுக்கன்னியாக திகழ்ந்தார். அதையடுத்து, தன்னை இந்திக்கு அழைத்து சென்ற தயாரிப்பாளர் போனி கபூரையே திருமணம் செய்து கொண்டு சிவகாசி ஸ்ரீதேவி மும்பைவாசியாகி விட்டார். இப்போது அவருக்கு அர்ஜூன், ஜானவி, குஷி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


இந்நிலையில், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார் ஸ்ரீதேவி. அப்படத்தில் சவாலான வேடம் என்பதால் சிறப்பாக நடித்து மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்கவில்லை என்பதை மீண்டும் நிரூபித்தார்.


ஆனால் அடுத்து உடனடியாக படம் கிடைக்காதநிலையில், தமிழில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கயிருக்கும், த்ரிஷா இல்லேனா நயன்தாரா என்ற படத்தில் நடிக்கயிருக்கிறார்.


இப்படத்தில் தன்னை கதாநாயகியாக்கிய இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்கிறார். கதைப்படி கதாநாயகனின் பெற்றோராக நடிக்கும் இவர்களுக்கும் கதையில் பெரும்பங்கு உள்ளதாம்.


ஆக,. பாண்டியநாடு படத்திற்கு பிறகு பாரதிராஜாவும், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு ஸ்ரீதேவியும் மீண்டும் இப்படத்தில் நடிக்கயிருக்கிறார்கள்.

ஐஸ்வர்யாராய்க்கு கெட்அவுட்! அசினுக்கு கட்அவுட்!!

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக அசின் நடிப்பதாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடல் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படம் தெலுங்கில் உருவாக உள்ளது. இதில் மகேஷ்பாபு நடிக்க உள்ளார்.


இப்படம் மூலம் ஐஸ்வர்யாராய் மீண்டும் ரீ என்ட்ரி ஆகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் மீண்டும் ஐஸ்வர்யா நடிப்பதற்கு மாமியார் ஜெயா பச்சன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதையும் மீறி மணிரத்னம் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா சம்மதம் தெரிவித்திருந்தார்.


இதனால் குடும்பத்தில் பிரச்னை வெடிக்கும் சூழல் எழுந்துள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி அவர் மணிரத்னத்திடம் ஆலோசனை செய்தார். கடைசிவரை கால்ஷீட்டுக்காக காத்திருக்க தயாராக இருப்பதாக கூறினார்.


மணிரத்னம். இதற்கிடையில் ஷூட்டிங் தொடங்கப்பட்டால் அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என்று ஆலோசனை செய்தார் மணிரத்னம்.


ஐஸ்வர்யாவுக்கு பதிலாக அந்த வேடத்தில் அசினை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். இதுபற்றி அதிகாரப்பூர்வமாக மணிரத்னம் இன்னும் அறிவிக்கவில்லை. 

குமுதா ஹேப்பியோ ஹேப்பி!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிப்பில் உருவாகிவரும் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தில் ”இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தின் நாயகியான நந்திதா ஒப்பந்தமாகியுள்ளார்.


தென்மேற்குப் பருவக்காற்று படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணையும் புதிய படம் இடம் பொருள் ஏவல்.


கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக வழக்கு எண் 18/9 படத்தில் நாயகியாக நடித்த மனிஷா யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.


ஆனால் முதல் இரண்டு நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு அவருக்கு சரியாக நடிக்க வரவில்லை என்ற காரணம் காட்டி படத்திலிருந்து நீக்கப்பட்டார்.


இதனால் மனிஷாவிற்குப் பதிலாக விஜய் சேதுபதியின் ஜோடியாக நந்திதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்புக்கள் தற்பொழுது கொடைக்கானலில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதி - நந்திதா ஜோடி மக்களிடையே மிகவும் பிரபலமாகியிருந்தது நினைவுகூறத்தக்கது.


சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார்.

நடிப்பிலிருந்து ஓய்வு பெறுகிறார் அமீர்கான்!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், மிகச் சிறந்த படங்களில் நடித்ததன் மூலம் இந்திய சினிமாவை உலகறியச் செய்தவருமான அமீர்கான் நடிப்பிலிருந்து ஒருவருடம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


நேற்று தனது 49 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அமீர்கான் இவ்வருடம் முழுவதும் தான் புதிய படங்கள் எதுவும் நடிக்கப்போவதில்லை என்றும், சமூக சேவையை மையப்படுத்தி தான் தொகுத்துவரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை மென்மேலும் பிரபலமாக்க இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும் அறிவித்துள்ளார்.


அமீர்கான் தொகுத்துவழங்கும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி இந்தியாவெங்கிலும் பிரபலமாக விளங்கிவருகிறது. இந்நிகழ்ச்சியின் பிரபலத்தால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பவுள்ளனர்.


சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி சமூக அவலங்கள் குறித்த உரையாடல் நிகழ்ச்சியாகும். குறிப்பாக பெண் சிசுக்கொலை, குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது, வரதட்சணைக் கொடுமை போன்ற கொடுமைகளைப் பற்றிய உண்மைகளைத் தோலுரித்துக் காட்டும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது.


கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் துவங்கிய இதன் முதல் சீசன் ஆகஸ்டில் நிறைவடைந்தது. இதன் இரண்டாவது சீசன் இம்மாதம் 2 ஆம் தேதி துவங்கி மூன்று எபிசோடுகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

30 கார்களை நொறுக்கித் தள்ளிய அஞ்சான் படக்குழு!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா இணைந்து நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சுமார் 30 கார்கள் நொறுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யூ.டி.வி.மோசன்பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிவருகிறது.


ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக, சுமார் 500 கார்கள் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்சி சமீபமாகப் படம்பிடிக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30 கார்கள் நொறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


மாபெரும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் படமாக்கப்பட்ட ஒரு காட்சியில் சுமார் 80 லட்சம் செலவில் ஒரு மாபெரும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


அஞ்சான் படம் குறித்து எழுந்துவரும் எதிர்பார்ப்புக்களை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யும் தகவல்கள் பரவிவருகின்றன. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம், சுதந்திரத் திருநாளன்று வெளியாகவுள்ளது.

பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு இறங்கிய சிவகார்த்திகேயன்!

எந்த ஒரு படம் என்றாலும் அதற்கான இசைவெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் சத்யம் திரையரங்கில் நடைபெறுவது வழக்கமான ஒன்று .சமீபத்தில் பிரம்மாண்டமாக கோச்சடையான் இசைவெளியீடும் அங்கு தான் நடைபெற்றது

.
இதில் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் பாலிவுட் ஸ்டார்ஸ் ஷாரூக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் கலந்துகொண்டபோது கூட எந்த ஒரு சச்சரவும் இல்லை .



ஆனால் நேற்று முன்தினம் சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்திற்கு அவ்வளவு கூட்டம் சற்று பவர் ஸ்டார் நிகழ்ச்சி தான் ஏதோ அங்கு நடைபெறுகிறதோ என எண்ணும் அளவிற்கு கூட்டம்.



பின்பு தான் தெரிந்தது சிவகார்த்திகேயன், பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு இறங்கியிருக்கிறார் என்பதுதான்.



சொந்த ஊரான திருச்சியில் இருந்து கூட்டம் கூட்டமாக கல்லூரி மாணவர்களை இவ்விழாவில் சீன் போடுவதற்காக வண்டி வைத்து இறக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.



கூட்டம் கூட்டமாக தன் சொந்த ஊர் காரர்களையே இறக்கிவிட்டு பாதுகாப்பிற்கு 10 குண்டர்களுடன் வந்து இறங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.


எல்லாம் ஒரு விளம்பரம் தான்!!!!!!!!!!!!!

குக்கூ எனது கனவு படம் - மனம் திறக்கிறார் .. இயக்குனர் ராஜுமுருகன்

‘வழக்கு எண்18/9’ படத்தின் மலையாள ரீமேக்கில் நடித்துள்ள நாயகி மாளவிகா முதன் முதலில் தமிழில் நடித்து வருகிறார்.


ராஜு முருகன் இயக்கிய குக்கூ  படத்தில் அட்டகத்தி தினேஷ்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மாளவிகா.


இந்த படத்தை பற்றி மாளவிகா கூறுகையில், நான் இந்த படத்தில் நடித்ததில் மிகவும் சந்தோஷப்படுவதாகவும், முதலில் ராஜு சார் கதையை கூறும் போது நான் அந்த அளவுக்கு திறமையானவல் இல்லை என்று நினைத்தேன்.


பின் இப்படத்தில் நடிப்பது ஒரு சவாலாக கருதி இக் கதாபாத்திரத்திற்காக பார்வையற்றோர் இல்லத்திற்கு சென்றேன், அவர்களிடம் இருந்து என் நடிப்பிற்கான சிலவற்றை நான் கற்றுக்கொண்டேன் என கூறினார் மாளவிகா.


தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றுள்ளார்.


இப் படம் வருகிற வெளிக்கிழமை (மார்ச் 21) தமிழ் நாடு முழவதும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்படத்தக்கது.

புதிய படத்தின் பெயர் "த்ரிஷா- நயன்தாரா" ! தலைப்புக்கு எதிர்ப்பு வருமா?

த்ரிஷா, நயன்தாரா பெயரில் படம் உருவாகிறது. இதற்கு எதிர்ப்பு வருமா என்று கேட்டதற்கு ஹீரோ பதில் அளித்தார். நதியா, குஷ்பு என ஹீரோயின்கள் பெயரில் பாடல்கள் வந்திருக்கிறது.


சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கும் படத்திற்காக த்ரிஷாவும் வேணாம், நயன்தாராவும் வேணாம் ஹன்சிகாவே போதும் என்று சிம்பு பாடல் எழுதி பாடினார்.


இந்நிலையில் த்ரிஷா, நயன்தாரா தலைப்பில் புதிய படம் உருவாகிறது. மேஜர் ரவியிடம் உதவி இயக்குனராக இருந்த ஆதிக் இயக்குகிறார்.


ஏற்கனவே பென்சில் படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் இதில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.நடிகைகள் பெயரில் தலைப்பு வைத்தால் எதிர்ப்பு வருமே? என்று பிரகாஷிடம் கேட்டபோது,இப்படத்திற்கு த்ரிஷா அல்லது நயன்தாரா என இருவரில் ஒரு பெயரை வைக்க எண்ணி உள்ளோம்.


இவர்களில் ஒருவரிடம் அனுமதி கேட்டுவிட்டேன். இன்னொருவரிடம் அனுமதி கேட்க உள்ளேன்.


இருவரில் ஒருவரை கவுரவ வேடத்தில் நடிக்கவும் கேட்க உள்ளேன். இப்படத்துக்கு இசை அமைக்கும் பொறுப்பையும் நான் ஏற்கிறேன் என்றார். 

'டைரக்டர் சுந்தர் சி முதலியாரா... வேளாளரா? உங்களுக்குத் தெரியுமாண்ணே?'

நேற்று முழுக்க சினிமா பத்திரிகையாளர்கள் மற்றும் பிஆர்ஓக்களிடையே கேட்கப்பட்ட கேள்விதான் இது.


கேட்டவர்கள்... தமிழக போலீசின் உளவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்.


சிலர் தங்களுக்குத் தெரிந்ததை சொல்லி வைத்தார்கள். சிலர் அவர் முதலியார்தான் என்றார்கள். இன்னும் சிலர் இல்லையில்லை வேளாளர்தான், நல்லா தெரியும் என்றார்கள்.


'டைரக்டர் சுந்தர் சி முதலியாரா... வேளாளரா? உங்களுக்குத் தெரியுமாண்ணே?'


ஆனால் யாருமே எதற்காக இந்தக் கேள்வி என திருப்பிக் கேட்கவில்லை. அந்தக் கேள்வியை தங்கள் நண்பர்கள் குழுவுக்குள் கேட்டுக் கொண்டார்கள்.


எதுவுக்கு இயக்குநர் சுந்தர் சி சாதி பத்தி கேட்கிறார்கள் போலீசார்? திமுகவுல சீட் கிடைக்காத கோபத்துல குஷ்பு அதிமுக பக்கம் போகப் போறாங்களா... அல்லது சுந்தர் சி வேற ஏதாவது கட்சிக்காக பிரச்சாரம் பண்ணப் போறாரா?


-இப்படியெல்லாம் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. நமக்குத் தெரிந்த ஒரு போலீஸ் அதிகாரியிடம் இதுகுறித்து விசாரித்தபோது, 'எங்களுக்கும் என்ன காரணம்னு தெரியாதுங்க. மேலிடத்துல விசாரிச்சு ரிப்போர் தரச் சொன்னாங்க.. பத்திரிகைகாரங்களுக்கு நல்லா அவரைப் பத்தி தெரியுமேன்னு விசாரிச்சோம், அவ்வளவுதான்,' என்றார்.

இளையராஜாவின் இசையில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் 20 புதிய படங்கள்!!


ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இளையராஜா எனும் வயதை வென்ற 'இளைஞரி'ன் வேகத்தைப் பார்க்கும்போது.

எண்பதுகளில் நாம் பார்த்த அதே வேகத்தோடு இந்த 2014லிலும் இசையைத் தந்து கொண்டிருக்கிறார் மனிதர். அதுவும் ஐந்து மொழிகளில்...


இந்த ஆண்டு மட்டும் அவரது இசையில் வரவிருக்கும் படங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா... 20!


இளையராஜாவின் இசையில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் 20 புதிய படங்கள்!!


ஒரு ஊர்ல, நாடி துடிக்குதடி போன்றவை கடந்த ஆண்டு வந்திருக்க வேண்டியவை. அவற்றையும் சேர்த்தால் 22 படங்கள்.


பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் விரைவில் வரவிருக்கும் 'உன் சமையல் அறையில்' படத்துக்கு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் இசையமைக்கிறார் ராஜா. பாடல்களை மூன்று படங்களுக்கும் ஒரே மாதிரி போடாமல், மூன்றுக்கும் தனித் தனியாகவே இசையமைத்துத் தந்திருக்கிறார் இளையராஜா என்கிறார் பிரகாஷ் ராஜ்.


தெலுங்கில் பாபா சத்ய சாய் மற்றும் ருத்ரமாதேவி என இரண்டு மெகா படங்கள் ராஜாவின் இசையில் வரவிருக்கின்றன. மேலும் இரு படங்களுக்கு இசையமைக்க சம்மதித்துள்ளார், இவை 2015 கணக்கு!


எம்சும் பெண்குட்டியும், மார்த்தாண்ட வர்மா, காதா, சாம்ராஜ்யம் 2 போன்றவை ராஜாவின் இசையில் வரும் மலையாளப் படங்கள். சத்யன் அந்திக்காட்டின் அடுத்த படத்துக்கும் ராஜாதான் இசை.


கன்னடத்தில் பிரகாஷ் ராஜ் படம் தவிர, மைத்ரி மற்றும் இன்னொரு பெயரிடப்படாத படத்துக்கும் ராஜா இசையமைக்கிறார்.


தமிழில் ராஜராஜ சோழனின் போர்வாள், வேலு பிரபாகரனின் கலைஞனின் காதல், ஸ்ரீ ராமாநுஜர், மேகா, திறக்கப்படாத கதவு, மூங்கில் காடு, பாலா இயக்கும் படம், பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் படம், மகேந்திரனின் புதிய படம் போன்றவை ராஜாவின் இசையில் உருவாகி வருகின்றன.


இந்தியில் பால்கியின் புதிய படத்துக்கும் ராஜாதான் இசை என்பது நினைவிருக்கலாம்.