Saturday, 8 March 2014

எப்படி நீங்கள் உங்கள் அம்மாவின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தலாம் ?

தன் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக ஒரு தாய் செய்யும் சேவைகளுக்கு ஈடு இணையே கிடையாது. காலையில் எழுந்தது முதல், இரவு தூங்கும் வரை தாயானவள் தன் குடும்பத்துக்காக தன்னையே அர்பணிக்கிறாள். ஒரு தாய் தன் பிள்ளைகளையும், கணவனையும் எப்போதுமே கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாலும், அவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரத்தை கொடுப்பதில்லை.

நம் தாய் தானே என்ற உரிமை இருப்பதால், அவர்களின் மீது பெரிதாக நாம் தனிப்பட்ட அக்கறை காட்டுவதில்லை. ஆகவே சிறிது நேரம் எடுத்து கொண்டு தாயை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுங்கள். அவர்கள் செய்வதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, நன்றி பாராட்ட மறக்காதீர்கள். இத்தகைய அன்னையை மகிழ்விக்கவும் , ஆச்சரியப்படுத்தவும் சில வழிகள் உள்ளன.

01-ரகசியமான பரிசு

தாய் காலை எழுவதற்கு முன், விடியற்காலையே எழுந்து தாய்க்கு அருகில் ஒரு சின்ன பரிசை வைக்கலாம். இதனால் அவர் எழுந்து பார்க்கும் போது, அது அவருக்கு ஆச்சரியமான சந்தோஷத்தை கொடுக்கும். அது ஒரு சின்ன கவரிங் மோதிரம் அல்லது ஒரு சின்ன கப் கேக் அல்லது ஒரு புகைப்பட ஃப்ரேம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அன்பை வெளிக்காட்டுவது மட்டும் முக்கியமே தவி,ர விலை ஒரு பொருட்டு இல்லை
ஒரு பாட்டு அல்லது கவிதை

தாயின் மேல் வைத்திருக்கும் அன்பை சிறு வார்த்தைகளாக எழுத பெரிய கவிஞராகவோ, புலவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. குடும்ப நிகழ்ச்சியில் அல்லது வீட்டில் குடும்பத்தாருடன் உணவருந்தும் போது, திடீரென்று எழுதிய கவிதையை அவர் முன் உரக்கப் படித்து காட்டி, அவர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டலாம். உரக்க படிக்க கூச்சமாக இருந்தால், எழுத்து வடிவில் அவர்களுக்கு கொடுக்கலாம்.

02-பேஸ்புக்

பேஸ்புக் நண்பர்களின் பட்டியலில் தாயை சேர்க்கவில்லை என்றால் வாழ்க்கையில் இருந்து அவரை பிரித்து பார்க்கிறீர்கள் என்ற எண்ணம் அவருக்கு தோன்றலாம். நீங்கள் குழந்தையாக இருக்கும் போது, உங்கள் ஜட்டியை மாற்ற உங்கள் தாய் யோசித்தாரா? அல்லது பல பேர் முன்னிலையில் குழந்தை பருவத்தில் அவரை அடிக்கும் போது அதற்காக அவர் சங்கடப்பட்டாரா? யோசித்துப் பாருங்கள். அதனால் ஃபேஸ்புக் மூலம் அவருடன் உரையாடி, அவருக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதை உணர்த்துங்கள்.

03-சமையல்

தினமும் முகம் சுழிக்காமல் சமைப்பவர் தான் அன்னை. அப்படிப்பட்ட அவருக்கு ஒரு மாலை வேளையில் ஓய்வு கொடுத்து ,அவருக்காக நல்ல ருசியான உணவை சமைத்து கொடுத்தால், அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமையும்.

04-சுற்றுலா

வார இறுதியில் ஒரு சின்ன சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து அழைத்து சென்றால், அது அவருக்கு மகிழ்ச்சியை அளித்து, தினசரி பார்க்கும் வேலையில் இருந்து ஒரு மாறுதல் கிடைக்கும். உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை எடுத்துக் கொண்டு உரையாடிக் கொண்டே சுற்றுலாவை கொண்டாடுங்கள். மேலும் காரில் இசையை ஒலிக்கச் செய்து, அவரை ஒரு இளவட்டம் போல் மாற்றுங்கள்.

05-திரைப்படம்

பள்ளி பருவத்திலும், வாலிப வயதிலும் கண்டு களித்த படங்களை திரும்பி அவருடன் சேர்ந்து பார்த்தோமானால், அவருடைய பழைய நினைவுகள் திரும்பி மகிழ்ச்சி அடைவார் இல்லையா? அந்த நினைவுகளுக்கு அவரை எடுத்துச் செல்ல, அவர்களுக்கு பிடித்த படங்களை வாங்கி பாருங்கள். அவருடன் சேர்ந்து படங்களை பார்த்தால், அவர் மீது இருக்கும் அக்கறையை எடுத்துச் சொல்லும்.

06-ஷாப்பிங்

பரிசளிப்பது ஒரு இன்பம் என்றால் அவரை கடைக்கு அழைத்து சென்று அவருடன் பொழுதை கழிப்பது இன்னொரு வகையான இன்பம். அதிலும் தாயை குழந்தை போல் பாவித்து, எது பிடிக்கும் பிடிக்காதென்று கேட்டு கடை வீதியில் சுற்றுங்கள். இந்த நாள் கண்டிப்பாக விலை மதிப்பில்லா நாளாக அமைவது உறுதி. மேலும் இது அன்பை வெளிக்காட்டும் வழியாகவும் அமையும்.

07-குளியல் அறை

எந்த தாய்க்கு தான் குளியலறை அலங்கரிக்கப்பட்டு வாசனை திரவியங்களை மணக்க செய்தால் பிடிக்காமல் போகும். எனவே தாயின் ரசனைக்கேற்ப அவருடைய குளியலறையை அலங்காரம் செய்யுங்கள். குளிக்கும் டப்பில் நுரை நிறைந்த தண்ணீரை நிரப்பி அமைதியான பாட்டை இசைக்க செய்யுங்கள்.

08-பெடிக்யூர்

வீட்டிலேயே பெடிக்யூர் (கால்களுக்கான மசாஜ்) மற்றும் தலை மசாஜ் போன்றவற்றை செய்துவிட்டால், அவருடன் அலுப்புத் தட்டாமல் நேரத்தை செலவழிக்கும் ஒரு வழியாக இது அமையும். தாயை அழகு நிலையங்களுக்கு செல்லவிடாமல், நீங்களே இந்த பணியை செய்யவும். அவரின் நகத்திற்கு நெயில் பாலிஷ் பூசுங்கள், பாதத்தில் அழுக்கெடுங்கள் அல்லது தலை மசாஜ் செய்யுங்கள். இது அவருடைய மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

09-செல்லப்பிராணி

இன்றைய வாழ்க்கை முறையில் விட்டில் அனைவரும் வேலைக்கு செல்கின்றனர். அதனால் அன்னை தனிமையில் வாடுவது உறுதி. எனவே தாய்க்கு துணையாக பூனை குட்டி, நாய் குட்டி அல்லது பறவைகளை பரிசளியுங்கள். இது அவரின் தனிமையை போக்கும் விதமாக எடுத்துக் கொள்வதோடு, அவர்கள் மீது அக்கறை காட்டும் விதமாகவும் இருக்கும். குறிப்பாக தாய்க்கு செல்லப் பிராணிகளை பிடித்தால் மட்டுமே, இந்த வழியை கையாள வேண்டும்.

உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!

சிலர் எப்போது பார்த்தாலும், ஒருவித டென்சனுடன் காணப்படுவார்கள். அத்தகைய டென்சன் ஏற்படும் போது, அதனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளைக் கையாள்வார்கள். சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது,


வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள். அந்த ஒரு பிரச்சனையால் மட்டும் அனைவரும் பாதிக்கப்படவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பலர்


பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகையவற்றிற்கு ஒருவகையான தீர்வு என்னவென்று பார்த்தால், அது ஒருசிலப் பொருட்களின் நறுமணங்கள் தான். மேலும் அனைத்து நறுமணங்களும் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்ல


முடியாது. உதாரணமாக, பெட்ரோல் வாசனை சிலருக்கு பிடிக்கும், சிலர் அதனை வெறுப்பார்கள். ஆனால் ஒருசில பொருட்களின் வாசனையை பிடிக்காது என்று யாரும் சொல்லமுடியாது. அவ்வாறு உள்ள பொருட்களின் வாசனை,


சோர்வு, மயக்கம், மனஅழுத்தம், தூக்கமின்மை, இரத்த அழுத்தம், தெளிவற்ற மனம் போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்யும்.

பெண்களுக்கு எப்படிபட்ட ஆண்களை பிடிக்கும் தெரியுமா?

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான்........

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது.

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

கற்றாழை ஜெல்லின் சரும நன்மைகள்!

வீட்டில் வளர்க்கும் செடிகளில் ஒன்றான கற்றாழையில் சருமத்திற்கான நன்மைகள் நிறைய அடங்கியுள்ளன. மேலும் இவை சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் உதவும்.          

குறிப்பாக முகப்பருவை நீக்க சிறந்த பொருள் என்றால் அது கற்றாழை தான். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அவை முகப்பரு மற்றும் பிம்பிளை நீக்குகின்றன.

மேலும் இந்த கற்றாழையை வைத்து நிறைய அழகுப் பொருட்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கற்றாழையை வீட்டிலேயே வளர்த்து, தினமும் முகத்திற்கு தடவி வந்தால், முகம் நன்கு பட்டுப் போன்று மாறிவிடும்.

இப்போது அதன் மற்ற நன்மைகளைப் பார்ப்போமா!!! * முகப்பருவை குறைக்க வேண்டுமென்பவர்கள், இதனை தினமும் தடவி வந்தால், பருக்களை குறைக்க முடியும்.

ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன.

இதனால் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா அழிவதோடு, பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும். * வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால், அவை சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, சருமத்தை மென்மையாக்கும்.

குறிப்பாக பெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து, கழுவி பின் மேக்-கப் போட்டால், நன்றாக இருக்கும். * ஆண்கள் ஷேவிங் செய்த பின்னர், முகத்திற்கு லோசனை தடவுவார்கள்.

ஏனெனில் ஷேவிங் செய்த பின்னர், அந்த இடத்தில் அரிப்புகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமென்று தடவி மசாஜ் செய்வார்கள்.

அவ்வாறு கெமிக்கல் கலந்த லோசனை தடவுவதற்கு பதிலாக கற்றாழை ஜெல்லை தடவினால், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம். * உடலில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல்.

ஆனால் கற்றாழையை வைத்து, மார்க்குகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், மார்க்குகள் லேசாக மறைய ஆரம்பிக்கும்.

பொதுவாக இந்த மார்க்குகள் உடல் எடை அதிகரிப்பது அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும். * முதுமை தோற்றம் சிலருக்கு இளமையிலேயே ஏற்படுகிறது.

எனவே இத்தகைய தோற்றத்தை தடுக்க கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி உடலில் செய்து வர, தளர்ந்து இருக்கும் சருமம் நன்கு இறுக்கமடைந்து, இளமை தோற்றதை வைக்கும்.

அதுமட்டுமின்றி கற்றாழை ஜெல்லில் வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளது. இதனால் சருமம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும். * சூரிய கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், சருமம் கருமையான நிறத்தில் காணப்படும்.

அதுமட்டுமின்றி சில நேரங்களில் கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவை ஏற்படும். இவ்வாறு தொடர்ந்து சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டால், தோல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

எனவே எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும், ஏதேனும் மாய்ச்சுரைசரை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சருமத்தை பாதிப்பிலிருந்து தடுக்கலாம். இதற்கு கற்றாழை ஜெல் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

ஆண்களால் பெண்களுக்கு அளிக்கப்படும் சில கஸ்டமான விடயங்கள் !!

காதலும், மூர்க்கத்தனமும் ஒரு சேர நிறைந்த ஆண்கள், தாங்கள் பெரிதும் விரும்பும் பெண்களுக்கே கூட தங்களுக்கே தெரியாமல் பலவகைகளில் தொல்லைகள்  புரிவதில் வல்லவர்கள். அப்படி ஆண்கள், பெண்களுக்குச் செய்யக்கூடிய சில கூடாதா விடயங்களை என்னவென்று பட்டியல் இட்டுள்ளர்கள்


01-ஆண்கள் அனைவருமே பெண்களை  கடைக்கண்ணில் பார்க்கும் வழக்கமுடையவர்கள் என உலகெங்கிலும் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஆனால் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து, ‘ஜொள்' வடிக்கும் போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாவது, அவர்கள் பார்க்கும் பெண் மட்டுமல்லாது, அவர்கள் அருகில் இருக்கும் பெண்ணும் தான்! காதலியுடன் வெளியில் செல்லும் தருணங்களில் கூட, ஆண்கள் பிற பெண்களை பார்க்காமல் விடுவதில்லை!


02-அநேகமாக ஆண்கள், பெறாமை குணம் இருக்கும். பெண்கள் மிகுந்த பொறாமைக் குணம் உடையவர்கள் என குற்றம் சொல்லும் ஆண்கள், தங்கள் காதலி வேறொரு ஆணைப் பற்றி பேசினால் கூட உச்சக்கட்ட பொறாமை கொள்கிறார்கள்.


03-மிகவும் சுதந்திரமான, நவநாகரீகமான பெண்ணுடன் பழகுவதே பெரும்பாலான ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தாய்க்கு அறிமுகம் செய்யும் சமயங்களில் அடக்கமான பெண்களையே விரும்புவார்கள். ஊர் சுற்றும் போது நவநாகரீகமான உடைகளை அணிவதையும், வித்தியாசமான சிகையலங்காரத்தையும் விரும்பியவர்கள், திருமணத்தின் போது மட்டும் நேர்மாறான பெண்களைத் தேடுவது தான் ஆண்களின் மோசமான செயல்களிலேயே முதன்மையானது!


04-மனைவி வீட்டை விட்டு வெளியே கால் வைத்ததிலிருந்து, "எங்கே இருக்கிறாய்?" என நச்சரித்துக் கொண்டே இருக்கும் கணவனின் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் வரும். ஆண்களின் இந்த அளவுக்கு அதிகமான அக்கறை பெண்களுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலாக மாறிவிடுகிறது.


05-பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் வருவதற்கு முன்பும், இந்த உலகில் பெண்கள் கவனமாகத் தான் வாழ்ந்தார்கள் என்பதை ஆண்கள் உணருவதே கிடையாது. இதைப் படிக்கும் போதாவது சில ஆண்கள் திருந்தினால் சரி.


06 பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றாலும், ஆண்களைப் போல் அல்லாது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் விஷயங்களை செய்வதில் வல்லவர்கள்.


ஆண்கள் பெண்களின் உணர்வுகளை கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால், வாழ்வில் சிறப்பாக வாழ்வது நிச்சயம்

மொறுமொறு... முந்திரி ப்ரை!

நட்ஸ் உடலுக்கு மிகவும் சிறந்தது. அத்தகைய நட்ஸில் முந்திரி பெரும்பாலானோருக்கு மிகவும் பிடிக்கும்.

எனவே மாலை நேரத்தில் டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அப்போது முந்திரியை ப்ரை செய்து சாப்பிடலாம்.

அந்த முந்திரி ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்:

முந்திரி - 1

கப் கடலை மாவு - 1/2

கப் அரிசி மாவு - 2

டீஸ்பூன் மிளகாய் தூள் - 1

டீஸ்பூன் நெய் - 2

டீஸ்பூன் (விரும்பினால்) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:

முதலில் முந்திரியை முழுமையாகவோ அல்லது இரண்டாகவோ உடைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், நெய் ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல் சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் காய்ந்ததும், அதில் முந்திரியை, கலந்து வைத்துள்ள கலவையில் நனைத்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முந்திரி ப்ரை ரெடி!!!

சாப்பிடும் முன் சூப்!

சாப்பிடுவதற்கு முன் சூப் சாப்பிடுவதை சிலர் ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பணக்காரர்களின் விருந்தில் இது ஒரு கவுரவ கலாசாரமாக பின்பற்றப்படுகிறது. 16- நூற்றாண்டின் ஐரோப்பியர்கள் இரவு சாப்பாட்டுக்கு முன் சூப் சாப்பிடுவதை ஒரு வழக்கமாக உருவாக்கினார்கள். இதை அறிவியல் ரீதியாக சொல்லும் போது அப்பிடைசர் ஸ்டார்ட்டர் வகையைச் சேர்ந்தது என்கிறார்கள்.                                                          

அதாவது அதிகம் பசி இல்லாமல் இருக்கையில் இந்த சூப் வயிற்றுக்குள் சென்று ஜீரணத்துக்கு உண்டான என்சைம்களைத் தயார் நிலையில் வைத்திருக்க முடியும். வசதி படைத்தவர்களுக்கு பெரும்பாலும் பசி எடுப்பதில்லை. அந்த பசியைத் தூண்டி விடுவதற்காக இப்படி சூப் கொடுக்கப்டுகிறது. சூப் மட்டும்ல்ல மசாலா வாசனைகளும் பசியை தூண்டிவிடுகின்றன என்கிறார்கள்.


ஒட்டலுக்கு அருகில் குடியிருப்பவர்கள் எப்போதும் மசாலா வாசனையை நுகர்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தொடர்ந்து மசாலா வாசனையை மட்டும் நுகர்வதால் கல்லீரல் பிரச்சனை, பித்தம் முதலியவை ஏற்படலாம்.


நமக்கு உணவு வாசனை மூக்கை எட்டியவுடன் நமது வயிறு உணவை எதிர்பார்த்து காத்துடக் கொண்டிருக்கும். வாசனை வரும் போது எல்லா சுரப்பிகளும் தயாராகி விடுகின்றன. மூக்குக்கு எட்டியது வாய்க்கும் எட்ட வேண்டும் என்பது இயற்கை நியதி. அதை மீறி  வெறும் வாசனையை மட்டுமே தொடர்ந்து சுவாசிக்கம் போது சுரப்பிகள் பலவீனம் அடைகின்றன. அதனால் ஓட்டல் அருகே குடியிருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?

பெற்றோராக இருப்பவர்கள், தங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தவாறு இருப்பதற்கு, புத்தகங்கள் பலவற்றை படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்வார்கள்.          

குறிப்பாக அப்பாக்களை விட, சில மாறுபட்ட சவால்களை அம்மாக்களே எதிர்கொள்கின்றனர். இப்போது அம்மாவாக இருப்பவர்கள், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும், குழந்தைகளை எப்படி நன்றாக வளர்ப்பது என்பது பற்றியும் கீழே சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. தாயாக இருப்பது சில நேரங்களில் சற்று சவாலானதாகவே இருக்கும். அதனால் எப்போதும் அமைதியாகவும் மற்றும் பொறுமையாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் அவர்கள் ஏதாவது குறும்பு செய்தால், அதை ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.

2. உங்கள் குழந்தைகளின் விருப்பங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு இசையில் விருப்பமிருந்தால், அவனுக்காக ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாங்கிக் கொடுத்து, அவர்கள் வாசிப்பதை கவனியுங்கள். குழந்தை கோபமாக இருந்தால், அப்போது அவர்களிடம் மனம் விட்டு பேசி, அவர்களுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்க வேண்டும்.

3. பணவிஷயத்தில் மிகவும் சரியாக இருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் பணத்தை கொடுப்பது சரியில்லைதான், அதற்காக உங்கள் குழந்தை கேட்கும் எந்தவொரு விருப்பத்தையும் உடனே முடியாது என்று நிராகரிக்க வேண்டாம். எதைக்கேட்டாலும் முடியாதென்றும், எப்போதும் பணத்தை சேமிப்பது பற்றிய அறிவுரைகளை சொல்லி, எந்த ஒரு பொருளையும் வாங்கிக் கொடுக்காமல் இருந்தால், பின் அவர்கள் மனதில் உங்கள் மீது இருக்கும் அன்பு குறைய நேரிடும். எனவே அவ்வப்போது ஏதேனும் விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

4. உங்களை எப்பொழுதும் அவர்களுடன் பேசுவதற்கு ஏற்ற நபராக வைத்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள். எப்பொழுதும் புரிந்துகொள்ளக் கூடியவராகவும் மற்றும் அவர்கள் பேசுவதை செவிகொடுத்து கேட்பவராகவும் இருப்பதற்கு, உங்களால் முடிந்தவரை கடினமான முயற்சிகளை எடுங்கள். அம்மாவிடம் நட்புடன் ஆலோசனை கேட்பதும், வயதுக்கு வருவது பற்றிய சந்தேகங்களை கேட்கவும், வீட்டுவேலைகளில் உதவி செய்யவும், அல்லது சாதாரணமாக அம்மாவை கட்டிப்பிடிப்பதும் அவர்களுக்கு தெரியும். தங்களிடம் பேசுவதற்கு யாரும் இல்லாமலிருந்தால், பின் குழந்தைகள் தனிமையிலேயே இருப்பார்கள். எனவே அவ்வப்போது அவர்களிடம் பேசும் வழக்கத்தை கொள்ள வேண்டும்.

5. குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு மருத்துவம் படிப்பதிலோ அல்லது மருத்துவராக ஆவதிலோ விருப்பம் இல்லையென்றால், அப்போது கோபப்பட வேண்டாம். உங்கள் மகளின் எண்ணம் உங்களுடையதிலிருந்து மாறுபடுவதை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளை எப்போதுமே குழந்தையாக எண்ணாமல், அவர்களின் வயதிற்கு ஏற்றவாறு மாறுங்கள். ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்கனவே பெரியளவில் பங்கேற்றிருக்கிறீர்கள். அதனால் அதனையே திரும்பவும் செய்ய வேண்டாமே!

6. தவறு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் மன்னிப்பு கேட்க பயப்படாதீர்கள். இது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் தவறை நீங்கள் ஒப்புக் கொள்வதும் மன்னிப்பு கேட்பதும் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். நீங்கள் பிடிவாதமாக இல்லாமலிருந்தால் அது மற்றவர்கள் உங்கள் மேல் கோபப்படுவதை தடுக்கும். மேலும் குழந்தைகளுக்கு மன்னிப்பு கேட்பதன் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுங்கள்.

7. குழந்தை தனது தந்தையை நேசிப்பதற்கு மதிப்பளித்திடுங்கள். உங்கள் குழந்தை, அவர்களது தந்தையை அளவுக்கு அதிகமாக நேசிப்பதைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது.

8. இறுதியாக, மற்ற எல்லாவற்யையும் விட உங்கள் குழந்தைகளை அதிகமாக நேசியுங்கள். அவர்களை நேசிக்காமல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் அர்த்தம் தராது. எந்த நேரத்திலும் குழந்தைகளை நேசித்தால், அவர்களது மனதில் எக்காலத்திலும் பெற்றோர்களை மறக்காமல் நேசிப்பார்கள்.

ஓட்ஸ் உப்புமா ஓட்ஸ் உப்புமா !

தேவையானப் பொருள்கள்:                                                                  

ஓட்ஸ்- 2 கப்
சின்ன வெங்காயம்- 10
இஞ்சி-ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய்-2
கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
எலுமிச்சை சாறு உப்பு-தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு உளுந்து
கடலைப் பருப்பு
காய்ந்த மிளகாய்-2
பெருங்காயம்-சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

• வெறும் வாணலியில் ஓட்ஸை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்

•  வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

• பிறகு நறுக்கி வைத்துள்ள் வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி 4 கப்புகள் (ஒன்றுக்கு இரண்டு என) தண்ணீர் ஊற்றி கலக்கி உப்பு சேர்த்து மூடி கொதி வரும் வரை வேக விடவும்.

• கொதி வந்ததும் திறந்து ஓட்ஸை சிறிது சிறிதாக சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

• முழுவதும் சேர்த்த பிறகு நன்றாகக் கிளறி விட்டு மிதமானத் தீயில் மூடி வேக விடவும்.

• வேகும் வரையில் இடையிடையே அடிப் பிடிக்காதவாறு அடிக்கடி கிளறிவிடவும்.

• நன்றாக வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் கொத்துமல்லி தூவி,எலுமிச்சை சாறு விட்டு இறக்கவும். 

புரட்சிகரமான கதை -வசனம்: பரபரப்பை உண்டாக்கிய 'அரங்கேற்றம்'

புரட்சிகரமான கதையைக் கொண்ட 'அரங்கேற்றம்' படத்தின் மூலம், பாலசந்தர் பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.

1972-ல் 'வெள்ளி விழா' படம் வாகினி ஸ்டூடியோவில் படமாகிக் கொண்டிருந்த சமயத்தில், பாலசந்தருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு காரில் புறப்பட்டார்.

அதன்பின் நடந்தது பற்றி பாலசந்தர் கூறுகிறார்:-

'ஜெமினி அருகே கார் நின்றது. தனிமையில் இருந்த நான், என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தேன். அப்போது, 'கண்ணா நலமா' பேனர் கண்ணில் பட்டது. `இத்தனை ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து என்ன சாதித்து விட்டோம்' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இதற்குக் கிடைத்த பதில் `ஒன்றுமில்லை' என்பதுதான். `இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை. ஏதும் சாதிக்காமலேயே போய்விடுவோமா?' என்று எண்ணியபோது, கண்களில் நீர்த்துளிகள் மல்கின.

கார் நகரத் தொடங்கியது. என் சிந்தனைகளும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அப்போது, கதீட்ரல் ரோட்டில் என் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்த 'புன்னகை' பேனர்களைப் பார்த்தேன். சிறிது ஆறுதல். `ஏதும் செய்யாமல் இல்லை. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்துதான் இருக்கிறோம்' என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் மனச்சுமை சிறிது இறங்கியது போல் இருந்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எனக்கு புதிய வேகமும், தெம்பும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டன. `எதையாவது புதுமையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் சினிமா துறையில் நான் நின்றாலும் சரி, வீழ்ந்தாலும் சரி' என்று முடிவு எடுத்தேன்.

'வெள்ளி விழா' படத்தை முடித்து திரையிட்டவுடன், அரங்கேற்றம் படத்தை எடுத்தேன்.'

இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

பாலசந்தரின் திரை உலக வாழ்க்கையில், 'தெய்வத்தாய்' முதல் 'வெள்ளி விழா' வரை முதல் பாகம். இரண்டாம் பாகம் 'அரங்கேற்ற'த்தில் தொடங்குகிறது.

இதை இரண்டாம் பாகம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. 'ஒரு நல்ல படத்தைத் தயாரிக்க வேண்டும்' என்பதே, இதற்குமுன் பாலசந்தரின் நோக்கமாக இருந்தது. ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றபோது, தான் அதுவரை நடந்து வந்த பாதையையும், தன் படைப்புகள் பற்றியும் சிந்தித்துப் பார்க்க அவகாசம் கிடைத்தது.

'இனி நல்ல படங்களை எடுத்தால் மட்டும் போதாது. சமுதாயத்துக்கு உதவக்கூடிய கருத்துக்களை எடுத்துக் கூறும் படங்களை தயாரிக்க வேண்டும். பிறர் தொடத்தயங்கும் கதைகளை துணிந்து படமாக்க வேண்டும்' என்று முடிவு எடுத்தார். அதன் தொடக்கமே 'அரங்கேற்றம்.'

வறுமையினாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் வழி தவறிச் செல்லும் ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை. வழுக்கி விழுந்த பெண்ணாக பிரமிளா நடித்தார். அவருக்கு வாழ்வு கொடுக்க முன்வரும் இளைஞனாக சிவகுமார் நடித்தார்.

'களத்தூர் கண்ணம்மா'வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், வாலிபனாக இப்படத்தில் முதன் முதலாகத் தோன்றினார். 'கலாகேந்திரா' தயாரிப்பான `அரங்கேற்றம்' 1973-ல் வெளிவந்தது.

இந்தப்படம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கதையை சில பத்திரிகைகள் பாராட்டின; சில பத்திரிகைகள் தாக்கின. படம் பார்த்த பலர் படத்தை ஓகோ என்று புகழ்ந்தனர்; சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

கதாநாயகி ஒரு பிராமணப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பிராமணர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

'சூழ்நிலை காரணமான தவறான பாதைக்குப் போனவர்கள் எந்த ஜாதியிலும் இல்லாமல் இல்லை.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக்காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக பிராமணக் குடும்பம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதை கருவாகக் கொண்டு, கற்பனையில் கதையை உருவாக்கினேன்.

திரைப்படத்துறை ஒரு தொழில்தான். மறுக்கவில்லை. ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருக்கவேண்டும்.

ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் அமையும்போதுதான், திரைப்படத் தொழில் சமுதாயத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்ததாக கருதமுடியும்.

ஏற்கனவே சில திரைப்படங்களில் ஆங்காங்கே `குடும்பக் கட்டுப்பாடு' மென்மையாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. என்றாலும், முழுத் திரைக்கதை அமைப்பிலும் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், `இல்லை' என்ற பதில்தான் என் நினைவுக்கு எட்டியவரை தோன்றியது.

எனவே, அரங்கேற்றத்தின் மூலக் கருத்தாக அதை வைத்தேன்.

எந்த ஒரு விஷயத்தை மேலெழுந்த வாரியாகவும் சொல்ல முடியும். ஆனால் அரங்கேற்றம் கதையைப் பொறுத்தவரை மேலெழுந்த வாரியாகச் சொல்ல நான் விரும்பவில்லை.

கற்பனையை விட உண்மை சில நேரங்களில் விசித்திரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஏன், பயங்கரமான உண்மைகளும் உண்டு. சில உண்மைகளைச் சொல்வதற்கு நாம் அஞ்சுகிறோம். ஆனால் அரங்கேற்றத்தில் அதைச் சொல்ல நான் அஞ்சவில்லை.'

இவ்வாறு பாலசந்தர் கூறியுள்ளார்.

'அரங்கேற்றம்' படத்தின் கதை பற்றி வாதப் பிரதிவாதங்களும், பட்டிமன்றங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், படம் மக்கள் ஆதரவுடன் வெற்றிநடைபோட்டது.

தமிழ்த்திரை உலக வரலாற்றில் 'அரங்கேற்றம்' ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.

ஆட்டத்திலும் குறியீடு பாஸ்! இங்கே பாருங்க பாஸ்!

நம்ம சினிமாவில் ஹீரோக்கள் தொடங்கி இயக்குநர்கள் வரைக்கும் யார் யாரோ என்னென்னமோ குறியீடெல்லாம் காட்டிட்டுப் போறாங்க. ஆனா, நம்ம டான்ஸ் மாஸ்டர்ஸ் பல படங்கள்ல மிக முக்கியமான விஷயங்களை எல்லாம் குறியீடாக் காட்டிட்டுப் போறாங்க. அதையெல்லாம் நாம என்னைக்குத்தான் கவனிச்சிருக்கோம். சரி அப்படி என்னதான் காட்டுறாங்கனு சில சாம்பிள்ஸ் பார்ப்போம் வாங்க...


'சரோஜா’ படத்துல 'கோடானகோடி’ னு ஒரு பாட்டு. அதில் பார்த்தீங்கனா, டான்ஸ் ஆடற எல்லோரும் ரெண்டு கையையும் எடுத்து முன்னாலேயும் பின்னாலேயும் துடைச்சிக்கிற மாதிரியான ஒரு ஸ்டெப். சாதாரணமாப் பாத்தா அது நமக்குப் புரியாது. ஆனா அதில் சொல்ல வருகிற மேட்டரே வேற... நாட்டில்  குடிநீர்ப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. வருங்காலத்தில் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவக்கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்படலாம். எனவே அதற்கான முன் நடவடிக்கைகளை எல்லாம் நாம் எடுத்தாக வேண்டும் என்பதைத்தான் சிம்பாலிக்காகச் சொல்லியிருக்கிறார்கள்.




'சூது கவ்வும்' படத்தில் 'காசு பணம் துட்டு மணி’ பாடலின் ஒட்டுமொத்த நடன அமைப்பும் தவறான வழியில் பணம் சேர்த்துவைத்திருக்கும் இன்றைய பணக்கார வர்க்கத்தின் ஆணவத்தையும், தகிடுதத்தங்களையும், திடீர் ஆடம்பரங்களையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள் நம்ம நடன இயக்குநர்கள்.


கடைசியாக 'மங்காத்தா’ படத்தில் வரும் 'விளையாடு மங்காத்தா’ பாடலில் டான்ஸ் மாஸ்டர் பஜ்ஜிக்கு வாழைக்காய் சீவுவதைப் போல் அஜித்துக்கு ஒரு ஸ்டெப் கொடுத்திருப்பார். இது எதைக் காட்டுகிறது என்றால், ஆணும் பெண்ணும் சரிசமமாக வேலைக்குச் செல்லும் வளர்ந்துவிட்ட சமூகத்தில் வாழும் நாம் ஆண் குழந்தைகளுக்கும் சமையலைக் கற்றுக்கொடுக்க வேண்டும், அப்போதுதான் குடும்ப சுமையைப் பங்கிட்டுக்கொள்ளலாம் என்ற மிக மிக முக்கியமான விஷயத்தை மேம்போக்காகக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்.




இதையெல்லாம் படிச்சிட்டு ஏன்யா இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குனு உங்க மைண்ட் வாய்ஸ்ல ஓடுறது கேட்குது. அடுத்த தடவை இந்தப் பாட்டையெல்லாம் பாக்கும்போது அட, ஒருவேளை உண்மையாதான் இருக்குமோனு உங்களுக்கே மண்டையில் பல்பு எரியும் பாருங்களேன்!

டைட்டானிக்கில் அலைகள் ஓய்வதில்லை! பாரதிராஜா ஹாலிவுட் படம்!

பாரதிராஜா ஹாலிவுட் படம் எடுக்கப்போறார்னு செய்தி வந்ததுக்கு அப்புறம் எனக்கு ரெண்டு பிறந்தநாள் வந்துட்டுப் போயிடுச்சு. அதுதான் 'டைட்டானிக்’ படத்தை பாரதிராஜா ரீமேக் பண்ணினா எப்படி இருக்கும்னு நானே ஒரு கற்பனைப் படம் ஓட்டிப் பார்த்தேன். ஃபாலோ மீ.

அந்தக் கரகர குரலின் அறிமுகத்துடன் ஆரம்பிப்போமா?

என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா மீண்டும் ஒரு காதல் காவியத்தோடு வருகிறேன். இந்த முறை உங்களுக்குக் கடல் வாசனையை அறிமுகம் செய்யப்போகிறது இந்த கிராமத்துக் குயில். வாருங்கள் இந்தக் கடல் கரைத்த கண்ணீர்க் கவிதையைக் காதலால்  வாசிப்போம்.

மாயனுக்கும் (மனோஜ்), ரோசாவுக்கும் நிச்சயம் முடிஞ்சுது. அவங்க கல்யாணத்துக்காக ரோசாவோட அப்பனும் சின்னாத்தாளும் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக்கிட்டு குலதெய்வக் கோயிலுக்கு கப்பல்ல (அட குலதெய்வக் கோயிலு மலேசியா முருகன் கோயிலுப்பு!) போறாக. மாட்டுவண்டியில் வந்து இறங்கி கப்பல்ல ஏறுது ரோசாவோட  குடும்பம். அப்படியே பிளாட்ஃபாரத்துல இருக்கிற முறுக்கு, அதிரசக் கடை, சாராயக் கடை, பீடிக் கடை எல்லாத்தையும் காட்டிட்டு ஹீரோ இருக்கிற இடத்தை நோக்கி கேமரா போகுது. அங்கே ஆடு, மாட்டைப் பேரம் பேசிட்டிருக்காரே... அதான் நம்ப ஹீரோ விருமண்.


ஆட்டை வித்தக் காசுல அமெரிக்காவுக்கு டிக்கெட் வாங்கிட்டு கப்பல் நோக்கிப் போறான். கப்பல்ல அவனுடைய பக்கத்து ரூம்ல இருக்கிற ரோசாவைப் பாத்ததும் தந்தனன தந்தனானானு வெள்ளை டிரெஸ் போட்டுட்டு அவளைச் சுத்தி நாலைஞ்சு பொண்ணுக பாடுற மாதிரி தெரியுது. அட புரியலையா... தட் இஸ் லவ்!


அடுத்த நாள் காலையில் அவங்க அப்பா காபித்தண்ணி குடிக்க, சின்னாத்தா வெத்தலை போட, மாமன் மாயன் சீட்டாடப் போனதுக்கப்புறம் அவளைப் பார்த்துக் காதலைச் சொல்றான் விருமண். ஆனா, அவளுக்கு நிச்சயமாயிடுச்சுனு சொன்னதும் பயலுக்கு மனசொடிஞ்சு போய்டுது. மறுநா காலையில அவ மாமன் அவளுக்குத் தங்கத்துல தந்தட்டி வாங்கித் தர்றான். அதைப் பல்ல இளிச்சிக்கிட்டே வாங்குறா. அதை அப்பா கருத்தமாயிகிட்ட காட்டப் போகும் வழியில் மாமா வேற ஒருத்தியைக் கொஞ்சுறதைப் பார்க்கிறா. அவுக சின்னாத்தாகிட்ட சொல்லி அழுவுறா. ஆனா, அவுக அடியேய் சிறுக்கி அவன் நெறையா சீர் தாறேன்னு சொல்லிருக்கான். கல்யாணத்தை நிறுத்த முடியாதுனு சொல்லிட்டு  சீரியல் பார்க்கப் போயிருது.


சின்னாத்தாளை எதிர்த்து எதுவும் பண்ண முடியாதுனு அவ தற்கொலை பண்ணிக்க கப்பலோட முன் பக்கத்துக்குப் போறா. அங்கே இருந்த ஹீரோ விருமண், ''இந்தா புள்ள நான் உன் மாமன்கிட்டேயிருந்து காப்பாத்துறேன்''னு சொல்லிட்டிருக்கும்போது கால் நழுவி கம்பியில் எலுமிச்சம்பழம் கட்டியிருந்த கயித்தைப் புடிச்சித் தொங்கிட்டிருக்கா. அப்போ விருமண்தான் அவளைக் காப்பாத்துறான். உடனே, ரோசாவும் விருமணைக் காதலிக்க ஆரம்பிச்சிடுறா. ரெண்டு பேரும் கப்பலைச் சுத்திச் சுத்தி டூயட் பாடி லவ் பண்றாங்க. பாட்டுல ஒரு சீன்ல விருமண்ணுக்கு கால்ல கம்பி குத்தி ரத்தம் வடியுது. ரோசாதான் எச்சியைத் துப்பி சரிபண்றா (டைரக்டர் டச்).


அப்போ சாராயம் குடிச்சிட்டு வர்ற மாயன் இவுக லவ்வுறதைப் பார்த்துடறான். கப்பலுக்குள்ளே பஞ்சாயத்து நடக்குது. அந்த நேரத்துல கப்பலோட கேப்டன் பிரபுவுக்கு ஹார்ட் அட்டாக் வருது. தனக்குப் பிறகு யாரும் இந்தக் கப்பலை ஓட்டக் கூடாதுனு முடிவு பண்ற பிரபு கப்பலை ஒரு பாறையை நோக்கித் திருப்புறாரு. தடுக்க வர்றவன்கிட்ட 'என் கப்பல்! என் உரிமை! புரட்சிப் போராட்டம்’ னு டயலாக் விட்டுட்டு டாப் கியர்ல கப்பலை ஓட்டுறாரு. பஞ்சாயத்துல இருக்கிறவங்களுக்கு விஷயம் தெரிஞ்சு ஆளுக்கு ஒரு பக்கம் ஓடுறாய்ங்க.


மாயன் டவுசர்லயே உச்சா போறான். விருமண், ரோசாவைக் கூட்டிக்கிட்டு தப்பிக்க முயற்சி பண்றான். கடைசியில பாறையில மோதி கப்பல் முங்குது. ஆனா, விருமண் ரோசாவைக் காப்பாத்திடுறான். அவ மயங்கிக்கிடக்கிறப்போ அவளோட தண்டட்டியைச் சுட்டுட்டு ஓடிடறான். இப்போ கிளைமாக்ஸ், திருடிட்டுப் போன தன்னோட தண்டட்டியையும், மனசையும் என்னைக்காவது ஒருநாள் கொண்டுவந்து குடுப்பான்னு உசிலம்பட்டி சந்தையில் வயசாகிப்போன ரோசா உக்காந்திருக்கா.

'எ ஃபிலிம்  பை பாரதிராஜா’ னு போட்டு முடிக்கிறோம்!

அஜித் - கௌதம் மேனன் திரைப்படம் கிரைம் திரில்லரா?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள அவரது 55 ஆவது படம் கிரைம் திரில்லராக உருவாகலாம் எனத் தெரிகிறது.


இம்மாத இறுதியில் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகவுள்ள இப்படத்திற்காக அஜித் கடுமையாக உழைத்துவருகிறார். இப்படத்தின் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், எய்ட் பேக்ஸ் உடற்கட்டுடன் தோன்றவுள்ளதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன.


தற்பொழுது இப்படத்தின் மற்றொரு முக்கியத் தகவலாக பாலிவுட் க்ரைம் திரில்லர் படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றிவரும் பிரபல எழுத்தாளரான ஸ்ரீதர் ராகவன் இப்படத்தில் இணையவிருப்பதுதான். பல வருடங்களாக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் டி.வி தொடரான சி.ஐ.டி. தொடரின் பல எபிசோடுகளுக்கு இவர் எழுதியுள்ள ஸ்ரீதர் ராகவன், பாலிவுட் படங்களிலும் பணியாற்றிப் புகழ் பெற்றுள்ளார்.


பாலிவுட்டின் ஏக் ஹசீனா தீ, ஏஜெண்ட் வினோத் முதலான க்ரைம் திரில்லர் படங்களில் பணியாற்றியுள்ள ஸ்ரீதர் ராகவன், அஜித் - கௌதம் மேனன் படத்திலும் பணியாற்றவிருப்பதால் இப்படமும் க்ரைம் திரில்லர் வகையாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


கௌதம் மேனன் - அஜித் இணையும் இப்படத்தின் ஹீரோயின் யாரென்பது இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. மேலும் இப்படம் வருகிற செப்டம்பர் அல்லது தீபாவளி ரிலீசாக வெளியிடப்படலாம் எனவும் பேசப்படுகிறது.

‘வீரன் முத்துராக்கு’ வாகை சூடும். - திரைவிமர்சனம்!


நரேனும், சண்முக சுந்தரமும் பக்கத்து பக்கத்து கிராமத்தின் தலைவர்கள். 30 வருஷத்துக்கு முன்னால் நடந்த சண்டையில் சண்முக சுந்தரத்தின் ஒரு காலை நரேன் உடைத்துவிடுகிறார். அன்றிலிருந்து இருவருக்குள்ளும் பகை உண்டாகிறது.

இவர்களது மகன்கள் வளர்ந்து பெரியவர்களானதும், இவர்களுக்குள் நடக்கும் சிலம்பு சண்டையில் நரேனின் மகனான நாயகன் கதிர் வெற்றி பெறுகிறார். இதனால் மேலும் கோபமடைந்த சண்முக சுந்தரம் நரேனை பழிதீர்க்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

நரேனின் ஊரில் ஏதாவது கலவரத்தை தூண்டி நரேனை பழிதீர்க்க பார்க்கிறார். ஆனால், அது நடக்காமல் போகிறது. ஒருநாள் நரேன் இவர்கள் ஊர் வழியாக செல்லும் பேருந்தை வழிமறிக்கும் நாயகன், அந்த பேருந்தில் பயணம் செய்யும் நாயகி லியா ஸ்ரீயை பார்த்ததும் காதல்வயப்பட்டு விடுகிறார். நாளடைவில் நாயகியும் நாயகனை காதலிக்க ஆரம்பிக்கிறார். லியாஸ்ரீ சண்முக சுந்தரத்தின் தங்கையின் மகள்.

இந்நிலையில், நரேன் கொலை செய்யப்படுகிறார். மாடு முட்டிதான் அவர் இறந்தார் என போலீஸ் அந்த கொலையை மூடி மறைக்கிறது. தனது தந்தை இறந்த சோகத்தில் ஊரில் வாழப் பிடிக்காத நாயகன் காட்டுக்குள் சென்று வாழ்ந்து வருகிறார்.

நாயகிக்கும் சண்முகசுந்தரத்தின் மகனுக்கும் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கின்றனர். இதுபிடிக்காத நாயகி, நாயகனைத் தேடி காட்டுக்குள் செல்கிறாள். இதை அறிந்த சண்முகசுந்தரம் அவளை பின்தொடர்ந்து சென்று நாயகியை கொன்று விடுகிறார்.

சித்தப்பா நமோ நாராயணனும், சண்முக சுந்தரமும் சேர்ந்துதான் தனது தந்தையை கொன்ற விஷயம் நாயகனுக்கு தெரிய வருகிறது. தன் தந்தை மற்றும் காதலி சாவுக்கு காரணமானவர்களை நாயகன் பழிதீர்த்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் கதிர் சண்டைக் காட்சிகளிலும், தந்தையையும், காதலியையும் பறிகொடுத்து சோகத்தை காட்டும்போதும் சிறப்பாக நடித்திருக்கிறார். எதார்த்தமான நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார். நாயகி லியாஸ்ரீக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. இருந்தாலும், குறைவான காட்சிகளில் நிறைவாக நடித்திருக்கிறார்.

நரேனும், சண்முக சுந்தரமும் ஊர் தலைவர்களாக பளிச்சிடுகிறார்கள். நரேன் நடிப்பில் சிகரம் தொடுகிறார். சண்முக சுந்தரம் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். நரேனின் தம்பியாக வரும் நமோ நாராயணனும் நடிப்பில் மிளிர்கிறார்.

இரண்டு தலைமுறை கதைகளை படத்தில் காட்டியிருக்கும் இயக்குனர், வன்முறையை ரொம்பவும் கொடுமையாக காட்டாமல் திரைக்கதையில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இன்றைய தலைமுறைகளை இந்த படம் திருப்திபடுத்துமா? என்பது சந்தேகமே.

கோபாலகிருஷ்ணன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசைக்கு மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. ஜி.எஸ்.பாஸ்கர் ஒளிப்பதிவில் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அருமை.

காதலை உணர்ந்தேன் - திரைவிமர்சனம்!

வறுமையில் இருக்கும் நாயகிக்கு படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசை. ஆனால், குடிகார அப்பாவால் தனக்கு எதுவும் வாங்கித்தர முடியவில்லை என நினைத்து வருந்துகிறாள்.

அப்போது, அவளது தோழி நாயகிக்கு பெரிய பணக்கார பையனாக பார்த்து காதலித்தால், அவன் உனக்கு வேண்டியதெல்லாம் வாங்கித் தருவான் என்று அறிவுரை கூறுகிறாள்.

முதலில் இதற்கு மறுக்கும் நாயகியை, தான் காதலிப்பதால் தனக்கு என்னென்ன நன்மை உண்டாகிறது என்பதை எடுத்துக்கூறி அவளை காதல் செய்ய வைக்க ஒப்புக்க வைக்கிறாள் தோழி.

அதன்படி, அதே ஊரில் இருக்கும் நாயகனை காதலிக்குமாறும் தோழி யோசனை கூறுகிறாள். நாயகியும் அவனிடம் வலியபோய் தன் காதலை சொல்கிறாள். ஆனால், அவனோ இவளை வெறுத்து ஒதுக்குகிறான். இறுதியில், அவனை தனது காதல் வலையில் விழ வைத்துவிடுகிறாள்.

காதலிக்க ஆரம்பித்தால் தனக்கு தேவையானதை அவனிடமிருந்து எல்லாம் வாங்கிக் கொள்ளலாம் என்ற நாயகியின் ஆசை நிறைவேறாமல் போகிறது. தான் கேட்ட எதையும் தனது காதலனால் வாங்கித்தர முடிவதில்லை.

இந்நிலையில், ஒருநாள் நாயகன் அவனது தாத்தாவை பார்க்க 3 நாள் பயணமாக வெளியூர் செல்கிறான். அந்த நேரத்தில் நாயகியின் தோழி வீட்டுக்கு வரும் அவளது முறைமாமன் நாயகியை பார்க்கிறான். பார்த்ததும் அவள்மீது காதலில் விழுகிறான். அவளுக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறான். அவளும் எதையும் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறாள். ஒருநாள் தோழியின் முறைமாமன் நாயகியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவளிடம் கூறுகிறான்.

இறுதியில் நாயகி தனக்கு காதல்தான் முக்கியம் என்பதை உணர்ந்து தோழியின் முறைமாமனை உதறித் தள்ளினாளா? அல்லது தான் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித் தருபவன்தான் முக்கியம் என்று தோழியின் முறைமாமனை ஏற்றுக் கொண்டாளா? என்பதே மீதிக்கதை.

கொஞ்சம் பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் நடிகர், நடிகை, இயக்குனர் ஆகிவிடலாம் என்பதற்கு இதுமாதிரியான படங்கள் ஒரு சிறு உதாரணம். சிறு பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியிருக்கும் தயாரிப்பு சங்கங்கள் இதுபோன்ற சிறுபட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வந்தால் கண்டிப்பாக இப்போது தியேட்டருக்கு வரும் ரசிகர்கள்கூட இனிமேல் தியேட்டருக்கு வர தயங்குவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

இப்படத்தின் லொக்கேஷன்களுக்கு இயக்குனர் ரொம்பவும் கஷ்டப்படவில்லை. வீட்டு மொட்டை மாடி, முற்றம், ஒற்றையடி பாதை என மாறி மாறி மூன்று லொக்கேஷன்களிலேயே படம் முழுவதையும் எடுத்திருக்கிறார்.

அதேபோல், நாயகன், நாயகியைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் ஒரே உடையிலேயே வந்து போகிறார்கள். காதலிக்காக நாயகன் திருடும் காட்சியில், அவர் திருடவேண்டும் என்பதற்காகவே அனைவரும் பணத்தை அவருக்கு முன்னால் வைத்துவிட்டுப் போவதுபோல் காட்சிப்படுத்திய விதம் கொடுமையிலும் கொடுமை.

நாயகன், நாயகி முகங்களை பார்த்து இவர்களுக்கு எதற்கு டூயட் என்று இயக்குனர் நினைத்திருப்பார்போல. பாடல் வைத்தால் இசைமைப்பாளருக்கு தனியாக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘சித்தாட கட்டிக்கிட்டு’ ‘வெண்ணிலா ஓ வெண்ணிலா’ போன்ற அழகான பழைய பாடல்களுக்கு இந்த கேவலமான மூஞ்சிகளை ஆடவிட்டு அந்த பாடல்களை கெடுத்ததோடு, நமக்கும் வெறுப்பை வரவழைத்திருக்கிறார்கள். அதற்கு பாடல்களே வைக்காமல்கூட இருந்திருக்கலாம்.

கதாபாத்திரங்கள் தேர்வு தொடங்கி, ஒவ்வொரு காட்சி எடுத்தவரைக்கும் படம் முழுக்க சொதப்பல்தான். கிரேன் மனோகர் 4 பேருடன் சேர்ந்து காமெடி என்ற பெயரில் கோபத்தை வரவழைத்திருக்கிறார். தஷியின் பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை. 

எதிர்வீச்சு - திரைவிமர்சனம்!

மலேசியாவில் பிரபலமாக இருக்கும் புட்சால் எனப்படும் இன்டோர் புட்பால் விளையாட்டை பற்றிய படம். மலேசியாவில் நடக்கும் இந்த விளையாட்டில் பிளாக் ஹார்ஸ் சாதாரண அணியாக இருந்து முன்னேறி வருகிறது.


அந்த அணியின் முக்கிய வீரர் ஹீரோ இர்பான். இந்த அணி ஸ்பான்ஸர்ஸ் கிடைக்காமல் தள்ளாடுகிறது. சின்னி ஜெயந்த், சிங்க முத்து அந்த அணிக்காக ஸ்பான்ஸர் பிடிக்க அலைகிறார்கள். அங்கு நடக்கும் போட்டி ஒன்றில் மலேசியாவின் நம்பர் ஒன் அணியோடு இவர்கள் மோதுகிறார்கள்.


அந்த அணியை நடத்தும் மலேசியாவின் பெரிய பணக்காரர் இறுதிப் போட்டிக்கு முன் இர்பானை கடத்தி ப்ளாக் ஹோர்ஸ் அணியை பலவீனமாக்குகிறார். இறுதிப் போட்டியில் பிளாக் ஹோர்ஸ் அணி வென்று மலேசியாவின் சாம்பியனாக ஆனதா? என்பதே முடிவு.

ஹீரோ இர்பான் துடிப்பாக இருக்கிறார். விளையாடும் காட்சிகளில் ஒரு அனுபவம் வாய்ந்த வீரரைப் போல் உற்சாகமாக இருக்கிறார். மற்றபடி பலவீனமான காட்சிகளில் எல்லோரும் ஏதோ நேரத்தை கடத்த வந்து போவதுபோல் இருக்கிறார்கள்.


நாயகி சாய்னா அழகாக இருக்கிறார். இறுதிக் காட்சியில் மட்டுமே நடிக்க வாய்ப்பு. அதிலும் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால், அதுவரைக்கும் தியேட்டரில் யாரும் இருப்பார்களா? என்பது சந்தேகமே.


சின்னி ஜெயந்த், வையாபுரி, சிங்கமுத்து என காமெடி பட்டாளம் இருந்தும் சிரிப்பு வரவில்லை. அவர்களே விழுந்து விழுந்து சிரித்துக் கொள்கிறார்கள். நளினியும் அவ்வப்போது வந்து போகிற மாதிரி கதாபாத்திரம்தான். இவரை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயன்படுத்தியிருக்கலாம்.


மிக மோசமான திரைக்கதை, பலவீனமான காட்சிகள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு மோசமான இயக்கத்தில் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர். பிர்லா போஸ் ஒளிப்பதிவில் பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் மலேசியாவையும், புட்சால் விளையாட்டையும் காட்டியிருக்கிறார்கள். விளையாட்டு காட்சிகளில் மட்டும் பின்னணி இசை கேட்கும்படி இருக்கிறது. 

இப்போதுதான் முன்பைவிட சந்தோசமாக இருக்கிறேன் - ஹன்சிகா!!

எல்லோரும் காதலிக்கும்போதுதான் சொல்லமுடியாத சந்தோசத்தில் பறந்து கொண்டிருப்பார்கள். ஆனால், ஹன்சிகாவோ காதலை முறித்துக்கொண்ட பிறகுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறி வருகிறார். அதோடு, முன்பு கலவரமான முகத்துடனேயே ஸ்பாட்டில் அமர்ந்திருப்பவர் இப்போது, கலகலப்பாக குஷி மூடில் வளைய வருகிறார்.


மேலும், தமிழில் நம்பர்-ஒன் குதிரையாக இருந்தவரின் மார்க்கெட் படிப்படியாக இறங்கி வந்த நிலையில், தற்போது விக்ரமின் ராஸ்கல், ஆர்யாவின் மீகாமன் படங்கள் புக்காகியிருப்பதோடு, அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் ஹன்சிகா.


இப்படி சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்ட மறுகனமே, ஹன்சிகாவின் கால்சீட் டைரி நிரம்பத் தொடங்கியிருப்பதற்கு முக்கிய காரணமே அவரது தாய்குலம் மோனா மோத்வானிதானாம். சிம்பு-ஹன்சிகாவின் காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த அவர், இப்போது காதல் டிராப்பாகிப்போனதும், சில முக்கிய டைரக்டர் மற்றும் ஹீரோக்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரியப்படுத்தியிருக்கிறார்.


அதோடு, வீழ்ந்து கிடக்கும் ஹன்சிகாவின் மார்க்கெட்டை நீங்கள்தான் சீர்படுத்த வேண்டும் என்றும் கனிவான வேண்டுகோளை வைத்தாராம். அதையடுத்துதான், ஹன்சிகா தாய்குலத்தின் வேண்டுகோளை தாழ்பணிந்து நிறைவேற்றும் பணிகளில் மேலும் சில மேல்தட்டு ஹீரோக்களும் சீரியசாக இறங்கியுள்ளார்களாம்.


அதனால்தான், தனது மார்க்கெட் கூடிய சீககிரமே கிடுகிடுவென்று உயர்ந்து தான் விட்ட இடத்தை எட்டிப்படித்து விடுலாம் என்ற நம்பிக்கை ஹன்சிகாவுக்கு இப்போது வந்துள்ளதாம். அதையடுத்துதான் அவர் முகத்தில் இத்தனை சந்தோசமாம். அதனால் காதல் முறிவைப்பற்றி யாராவது துக்கம் விசாரிப்பது போன்று விசாரித்தால், முன்பை விட இப்போதுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று சொல்லி அவர்களின் வாயடைத்து விடுகிறார் ஹன்சிகா.