Wednesday, 26 February 2014

பெண்களுக்கு ஏற்படும் குழந்தைப்பெறுன்மையை போக்கும் வழிகள் .....?

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத்தன்மை. சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியாமல் போனால் அது தான் மலட்டுத் தன்மை.அதே போல் கர்ப்பமான பெண் அந்த சிசுவை சுமக்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டால் அதையும் மலட்டுத் தன்மை என்று தான் கூறுவோம்.

சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் தொடர்ந்து ஒரு வருடம் ஈடுபட்டும் கூட கரு தரிக்கவில்லை என்றால் தான் மலட்டுத் தன்மை இருப்பதாக கருதப்படுகிறது. மலட்டுத் தன்மைக்கு பல காரணங்கள் வழி வகிக்கிறது.

உங்கள் வயது, உணவு, வாழ்க்கை முறை, மன அழுத்தம், மருத்துவ நிலைப்பாடு அல்லது தொழில் ரீதியான வெளிப்படுத்தல்கள் போன்றவைகள் இதற்கு காரணமாக விளங்கலாம். இது உங்களின் ஒட்டுமொத்த உடல்நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மலட்டுத் தன்மையையும் உண்டாக்கி விடுகிறது.

பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட காரணமாக விளங்குவது மரபு சார்ந்த பிரச்சனைகள், சீரில்லாத கருமுட்டை வெளிப்படுதல், ஹார்மோன் சமமின்மை, உடல் பருமன் போன்றவைகள். பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

துரித உணவு மற்றும் ஜங்க் உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். இவ்வகை உணவுகளில் தீவனச் சேர்க்கைப் பொருட்கள் மற்றும் பதப்பொருட்களும் சேர்க்கப்பட்டிருக்கும். இது உங்கள் கருத்தரிப்புத் திறனை வெகுவாக பாதிக்கும். மலட்டுத்தன்மையை தடுக்க காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கருத்தரிப்புத் திறனை பாதிக்கும் மருத்துவ நிலைகளை பற்றி தெரிந்து கொள்ள வல்லுனர்களிடம் இருந்து மருத்துவ ஆலோசனை பெற்று கொள்வது ஒரு சிறந்த வழியாகும். மலட்டுத்தன்மை ஏற்படும் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சனைகளை கண்டறிந்தால் மலட்டுத்தன்மையை தவிர்க்கலாம். பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது உடல் பருமன். உடல் பருமன் ஹார்மோன் சமமின்மையை உண்டாக்கும். அதனால் மலட்டுத் தன்மை ஏற்படும்.

பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பல பிரச்சனைகளை சரி செய்ய உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மையை தடுக்க சரியான உடல் எடையுடன் இருப்பதும் அவசியமானதாகும்.

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்திட வேண்டும். உங்கள் வாழ்க்கை முறையே உங்கள் வாழ்க்கையை பற்றிய அனைத்தையும் கூறி விடும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றி பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுத்திடுங்கள்.

தலைமுடியை அழகு படுத்த சில டிப்ஸ்!

முடி உதிரும் பிரச்சனை, பொடுகுத் தொல்லை, வழுக்கை என்று பலருக்கும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது, குழந்தையின் க்ராடில் க்ராப்பிலிருந்து வயதானவர்கள் வரை தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏராளம். காலம் காலமாக நமது வீடுகளில் பல இயற்கை முறைகளை பின்பற்றி வந்தாலும், தலைமுடி பிரச்சனை இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.


முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள், எனக்கு இந்த தண்ணீர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஓரளவிற்கு தண்ணீரால் முடி கொட்டும் என்பது உண்மையென்றாலும், நாம் சாப்பிடும் உணவு, கடைபிடிக்கும் சில வழிமுறைகள் மூலமாக இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.


தொட்டிலில் தொடர்ந்து படுப்பதால், பிறந்த குழந்தைகளுக்கு பொடுகு தொல்லை ஏற்படும். இதனை போக்க தலையில் எண்ணெய் வைத்து 10 நிமிடம் போல் ஊறவிட்டு பிறகு அலசவேண்டும். தொட்டில் துணியை அடிக்கடி மாற்ற வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ந்து தூங்கினால் சிறிது இடம் மாற்றிப் போடவேண்டும்.


தலைமுடி உதிரும் பிரச்சனைக்கு ஆண்களைப் பொறுத்த வரை பரம்பரையும் ஒரு காரணமாக இருக்கிறது. அதற்கு ஹேர் வீவிங் போன்ற சில சிகிச்சை முறைகளைத்தவிர வேறு எந்த மருந்தும், உணவும் தீர்வாக சொல்லப்படவில்லை. சின்ன வெங்காயம் தடவுவது, மூலிகை எண்ணெய் தடவுவது போன்ற சிகிச்சை முறைகள் சொல்லப்பட்டாலும் அதன் பலன் 100% இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. பெண்களைப் பொறுத்தவரை வழுக்கை என்ற விஷயம் இல்லாவிட்டாலும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது.


 முடி கொட்டுவதற்கு நாம் உட்கொள்ளும் உணவும் நல்ல சமச்சீரான, சத்தான உணவாக இருப்பது அவசியம். தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும், இரத்த சோகை இருப்பவர்களுக்கும் முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். மருத்துவரை கலந்து ஆலோசித்து அவர் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதே இதற்கு நல்ல தீர்வு. நாம் கூந்தலை சரியான முறையில் பராமரிக்கும் போது முடி கொட்டுவதை தவிர்க்கலாம். பொடுகு தலையில் இருந்தாலும் முடி கொட்டும்.


தலையை வாரம் இரு முறை அலசினால் போதுமானது. ஷாம்பூ போட்டு அலசும் போது நமது முடி இழக்கும் ஈரப்பதத்தை மீண்டும் ஈடுகட்டவும், முடியின் pH அளவை சமச்சீராக வைத்திருக்கவும், முடி ஸ்மூத்தாக இருக்கவும் கண்டிஷனர்(conditioner) உதவுகிறது. கண்டிஷனரை வேர்க்கால்களில் படாமல் அப்ளை செய்வது நல்லது. மேலோட்டமாக மண்டையில் படாமல் ( 1 செ.மீ அளவேனும் இடைவெளி விட்டு) முடிக்கு மட்டும் படுமாறு கண்டிஷனர் அப்ளை செய்தால் முடி கொட்டாமல் ஸ்ட்ராங்காக இருக்கும்.


அடிக்கடி அல்லது தினமும் தலை குளிப்பவர்கள் மிகவும் மைல்டான ஷாம்பூ உபயோகிப்பது நல்லது. இப்போது டெய்லி கேர் ஷாம்பூக்கள் (daily care shampoo) பல மார்க்கெட்டில் கிடைக்கின்றன. தினமும் கண்டிஷனர் உபயோகிப்பது நல்லதல்ல. ஆண்ட்டி டாண்ட்ரப் ஷாம்பூக்களை தினமும் உபயோகப்படுத்துவது முடியை பாதிக்கும். வாரம் ஒரு முறை உபயோகப்படுத்தினால் போதுமானது. தலைக்கு அடிக்கடி பெர்மிங் (perming), ஸ்ட்ரெயிட்னிங் (straightening) என்று ப்யூட்டி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வதும் முடியை பாதிக்கும்.


வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.


சீயக்காய்- 1 கிலோ

செம்பருத்திப்பூ- 50

பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்

எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25

பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ

மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்

கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப் அளவு


மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை. வெளிநாட்டில் இந்தப் பொருட்கள் கிடைப்பது அரிது.


பொடுகை நீக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் பெரும்பாலானோர் புலம்புவது ஏன் இத்தனை ட்ரீட்மெண்ட் எடுத்தும் மீண்டும் மீண்டும் பொடுகு வருகிறது என்றுதான். நன்றாக கவனமாக இருந்தோமென்றால் நிச்சயம் பொடுகை அறவே ஒழிக்க முடியும். பொடுக்கு எத்தனையோ ஆண்ட்டி டாண்ட்ரஃப் ஷாம்பூக்கள் இருக்கின்றன. Head & Shoulder, Clinic All clear மற்றும் மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஷாம்பூக்கள் என்று அத்தனையுமே பொடுகை நீக்கினாலும் நாம் கவனமாக இல்லாவிட்டால் மீண்டும் வந்துவிடும். இயற்கையான ட்ரீட்மெண்ட் என்றால் எலுமிச்சை சாறு மிகச்சிறந்த மருந்து. தலையில் தடவும்போது எரிச்சல் ஏற்படும். ஆனால் பொடுகை அறவே நீக்கும். மிளகு அரைத்து தயிரில் கலந்து தடவுவதும் நல்ல பலனை தரும்.


பொடுகுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன் முதலில் அதனை மீண்டும் வர விடாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். சீப்பு, பெட்ஷீட், போர்வை, துண்டு, தலையணை உறை எல்லாவற்றையும் கழுவி அல்லது புதிதாக உபயோகப்படுத்துக்கள். இல்லாவிட்டால் நீங்கள் ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு சீப்பு வழியாகவோ, தலையணை மூலமாகவோ மீண்டும் பரவிவிட வாய்ப்பு அதிகம். தலை மிகவும் வறண்டு இருந்தாலும் பொடுகு வரும். கண்டிஷனரை தலையில் முடி வேர்வரை போட்டாலும் பொடுகு வரும்.


முடியை பெர்மிங் செய்வதாக இருந்தாலும், ஸ்ட்ரெயிட்னிங் செய்வதாக இருந்தாலும், வீட்டில் நீங்களாகவே முயற்சிப்பதற்கு முன்பு, சலோன் (parlour) சென்று ஆலோசனை பெறுங்கள். ஒவ்வொரு முடியும், முக அமைப்பும் வேறு. ஒருவருக்கு பொருந்தின ஹேர் ஸ்டைல் இன்னொருவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. முடியின் தன்மை, முகவெட்டுக்கு தகுந்தாற்போல் ஹேர்ஸ்டைல் செய்துக் கொள்ளுங்கள். நம்மால் பராமரிக்க முடிந்த ஹேர் ஸ்டைல் செய்து கொள்வது நல்லது.


அதிக ஃப்ரிஞ்சஸ், ஸ்டெப் கட், லேயர்ஸ் போன்றவை எல்லோராலும் எளிதாக பராமரிக்க முடியாது. ஒரே ஹேர் ஸ்டைலில் இல்லாமல் வித விதமான ஹேர்ஸ்டல் செய்து கொள்வது எப்போதும் ஒரு புதிதான தோற்றத்தை கொடுக்கும். இழுத்துப் பிடித்து சடை போட்டுக் கொள்வது பிடிக்கிறது. அதையேதான் பின்பற்றுவேன் என்று இல்லாமல் ஒரு வித்தியாசத்திற்கு மாறுதலான ஒரு ஹேர்ஸ்டைல் செய்து பாருங்கள்.


சில ட்ரெஸ்களுக்கு லூஸ் ஹேர் மிகவும் அழகாக இருக்கும். அப்படி லூஸ் ஹேர் வேண்டுமென்றால அதற்கு ஒன்று ஹேரை ஸ்ட்ரெயிட்னிங் செய்து செட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முடி பறக்காவண்ணம் செட் செய்வதற்கென்றே உள்ள ஸ்ப்ரே அல்லது க்ரீம் உபயோகப்படுத்தலாம். ஆனால் வேர்க்கால்களில் படாமல் உபயோகிக்க வேண்டும். தலை குளிப்பதால் இழக்கும் முடியின் ஈரப்பதத்தை பாலன்ஸ் செய்ய இப்போது ஹேர் ஸ்ப்ரே, மூஸ் (mousse) என்று பல ரகங்கள் கிடைக்கின்றன. அவற்றில் உங்களது சலோன் கண்சல்டண்டின் ஆலோசனை கேட்டு உங்கள் கூந்தலுக்கேற்ற தயாரிப்பை வாங்குங்கள்.


சில இயற்கை முறைகளைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். நல்லெண்ணெய் உடல் சூட்டை குறைப்பதுடன் முடியை கருப்பாக்க மிகவும் உதவும். ஆனால நல்லெண்ணெய் முகத்திற்கு போடுவது சரும நிறத்தை கருமையாக்கும். விளக்கெண்ணெய் கண் புருவம், இமை முடிகள் வளர தடவலாம். முட்டை முடிக்கு நல்ல ஷைனிங் தரும். அடிக்கடி உபயோகித்தால் முடி வறண்டு விடும். பேரிச்சை, கீரை போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. நெல்லிக்காயை காயவைத்து பொடி செய்து சீயக்காயுடன் சேர்த்து இயற்கையான கருமை நிறத்துக்கு உபயோகிக்கலாம். மருதாணி முடிக்கு மிகவும் நல்லது. இயற்கையான சாயத்திற்கும், குளிர்ச்சிக்கும் மிகவும் நல்லது. உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் போன்றவை முடிக்கு நல்லதல்ல.


பேன் பிரச்சனைக்கு மருந்து போடுவது நல்லது. பொடுகு ட்ரீட்மெண்ட் போலவே இதற்கும் ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு கவனமாக தலையணை உறை முதற்கொண்டு மாற்றுவது அவசியம். ஏதேனும் விசேஷங்களுக்கு இடிமுடி வைத்து பின்னுவதாக இருந்தாலும் தரமானதாக உபயோகியுங்கள். முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கருவேப்பிலை மூன்றையும் அரைத்து வடைகளாகத் தட்டி நிழலில் காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி கருமையாக நன்றாக இருக்கும். சூடத்தை (கற்பூரம்) தேங்காய் எண்ணெயில் போட்டு தடவி வந்தால் பொடுகு நீங்கும். வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து அதனை தலைக்கு தடவினால் உடல் குளிர்ச்சிக்கு நல்லது.


நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு, நல்ல தண்ணீர், நல்ல பராமரிப்பு தலை முடிக்கு மிகவும் அவசியம். எவ்வளவு அழகான முகமாக இருந்தாலும் ஹேர்ஸ்டைல் நன்றாக இல்லாவிட்டால் எடுப்பாக இருக்காது. நல்ல மேக்கப்பையும் மோசமான ஹேர்ஸ்டைல் பாழ்பண்ணிவிடும். எனவே தலை முடிக்கு தனியான கேர் கொடுப்பது மிக அவசியம். யாருக்கு என்ன ஸ்டைல் நன்றாக இருக்கும் என்று நான் இங்கே குறிப்பிடவில்லை. காரணம், ஸ்டைலை விட அதை மெயிண்டெயின் பண்ணுவது முடியுமா என்ற விஷயத்தை யோசித்துவிட்டு தேர்ந்தெடுப்பது அவசியம்.

மனநிலை பாதிப்பை போக்கும் மருதாணிப்பூ!

மனநிலை பாதிச்சவங்களுக்கு சில வைத்தியம் சொல்றேன்:


இந்த மாதிரி பாதிப்பு உள்ளவங்களை புங்கை மர நிழல்ல இளைப்பாற வையுங்க. அடிக்கிற வெயில்ல எல்லோருமே புங்கை மர நிழல்ல படுத்து தூங்கி பாருங்க. உங்களுக்கே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.


மத்தபடி பொதுவா மனநிலை பாதிச்சவங்கள திருநீற்றுப்பச்சிலையை முகர்ந்து பார்க்கச்சொல்லுங்க. அத்திப்பழத்தை சாப்பிட கொடுங்க. பிறகு கசகசாவை பால் விட்டு அரைச்சி கற்கண்டு சேர்த்து குடிக்க கொடுங்க.


ஆரைக்கீரை தெரியுமா உங்களுக்கு. அதை அப்பப்போ சமைச்சி சாப்பிடலாம். அதேபோல அகத்திக்கீரை சாப்பிடலாம். இதெல்லாம் உங்களுக்கு புதுசா தெரியும்.
தினசரி காலைலயும், ராத்திரி சாப்பாட்டுலயும் கறிவேப்பிலை துவையல் சேர்த்துக்கிறது ரொம்ப நல்லது.


இந்த துவையல்ல எலுமிச்சை சாறு சேர்த்து குழப்பி சாப்பிடுறது நல்லது. மத்தபடி பருத்தி விதை, ஏலக்காய், திப்பிலி, நெல்பொரி எல்லாத்தையும் பொடியாக்கி ரெண்டு கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும்.


ராத்திரி தூங்கும்போது தலையணையில மருதாணிப்பூவை வச்சிட்டு தூங்குங்க. நிம்மதியா உறக்கம் வரும். அதேமாதிரி கால்ல மருதாணி பூசுங்க. அதுவும் பலன் தரும்.


இது எல்லாத்துக்கும் மேல என்ன காரணத்தால மனநிலை பாதிச்சதுன்னு தெரிஞ்சு அதுக்கு சரியான வழியை பாருங்க. சீக்கிரமா குணமாயிருவாங்க.

'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினிகாந்த் அறிமுகம்!

டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.

'அபூர்வ ராகங்கள்' கதை புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும்.

அதில் ஒரு விடுகதை:-

'தந்தையும், மகனுமான இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மணலில் இரண்டு பெண்கள் நடந்து சென்ற கால் தடங்களைப் பார்க்கிறார்கள். அந்த கால் தடங்களை பின்பற்றிச் சென்று அந்த இருவரையும் கண்டுபிடிப்பது என்றும், பெரிய கால் தடத்துக்கு உரியவளை தந்தையும், சிறிய கால் தடத்துக்கு உரியவளை மகனும் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.

அவ்வாறே, கால் தடங்களை பின்பற்றிச் செல்லும் தந்தையும், மகனும் அந்த 2 பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்கு உரியவள் மகள். சிறிய பாதங்களுக்கு உரியவள் தாய்!

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த இரு பெண்களையும் தந்தையும், மகனும் மணந்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு முறை என்ன?' - இதுதான் வேதாளத்தின் விடுகதை.

அதற்கு விடை கூறமுடியாமல் விழிப்பான், விக்கிரமாதித்தன்.

கமல் - ஸ்ரீவித்யா

வேதாளத்தின் விடுகதையை அடிப்படையாக வைத்து, அபூர்வராகங்கள் கதையைப் பின்னினார் பாலசந்தர்.

இதில் ஸ்ரீவித்யா தாய்; ஜெயசுதா மகள்.

மேஜர் சுந்தரராஜன் தந்தை; கமலஹாசன் மகன்.

ஸ்ரீவித்யாவை கமலஹாசன் காதலிப்பார்.

மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதாவை மணக்க விரும்புவார்!

கத்திமேல் நடப்பது போன்ற கதை.

கடைசியில், ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவன் திரும்பி வருவார். அவர்தான் ரஜினிகாந்த்!

கொஞ்ச நேரமே வந்தாலும், கதையை முடித்து வைக்கும் கதாபாத்திரம்!

தாடி -மீசையுடன், ஸ்ரீவித்யாவின் பங்களா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவார், ரஜினிகாந்த்.

'யார் இந்தப் புதுமுகம்?' என்று படம் பார்க்கிறவர்கள் கேட்கும்படியாக அமைந்தது, அக்காட்சி.

கர்நாடகத்தை சேர்ந்தவர். கறுப்பு நிறம். தமிழை லாவகமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவ்வளவாக இல்லை. அப்படியிருந்தும், ரஜினிகாந்த் ஒரு வைரம் என்பதை கண்டுபிடித்து, அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தினார், பாலசந்தர்.

'ரஜினிகாந்த் கண்களில் ஒருவித பிரகாசத்தைக் கண்டேன். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அப்போதே கணித்தேன்' என்று கூறுகிறார், பாலசந்தர்.

ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதோடு பாலசந்தர் நின்றுவிடவில்லை. அவரை பட்டை தீட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

'மூன்று முடிச்சு' படத்தில், முக்கிய வேடம் கொடுத்தார். இதில் கமலஹாசன் நடித்திருந்தாலும், அவர் ஏற்றிருந்தது 'கவுரவ வேடம்' போன்றதுதான்.

ஸ்டைல் மன்னன் என்று பிற்காலத்தில் புகழ் பெற்ற ரஜினிகாந்த், சிகரெட்டை தூக்கிப்போடும் ஸ்டைலை முதன் முதலாகச் செய்து காட்டியது, இந்தப் படத்தில்தான்.

இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றிருந்த ஸ்ரீதேவி, கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.

மூன்று முடிச்சு பெரிய வெற்றிப்படம் அல்லவென்றாலும், ரஜினிகாந்துக்கு கணிசமான ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.

பாலசந்தர் படத்தில் அறிமுகமானது பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-

'திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு, மீண்டும் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை பார்த்துக்கொண்டே பொழுது போக்காகக் கன்னடப் படங்களில் நடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

தமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் நான் எதிர்பாராதவிதமாக பாலசந்தர் சாரை சந்தித்து, அவர் மூலமாக 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமானேன்.

அந்த `அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போதுதான், ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார், அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.

அன்று அவர் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.'

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார். 

பிரசவத்திற்கு பின் வேலைக்குத் திரும்பும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!!!

ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் பெற்றெடுத்தவுடன் பெண்களின் கஷ்டம் தீர்ந்ததா என்றால் அது தான் இல்லை. அந்த குழந்தையை நல்ல படியாக வளர்க்க தன் உயிரை கொடுத்து சிரத்தை எடுக்கிறாள். வேலைக்குத் செல்லாத பெண்களுக்கே இவ்வளவு பொறுப்பு என்றால் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை? அதுவும் குழந்தை பெற்றெடுத்து உடனே வேலைக்குச் செல்ல வேண்டுமானால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கண்கூடு.

மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்கு திரும்பும் பாலூட்டும் தாய்களுக்கு ஒரு நடுக்கம் இருந்தே தீரும். ஏனென்றால் பலவற்றை சமாளிக்க வேண்டும். ஆனால் கவனமாக திட்டமிட்டால், இந்த மாற்றங்கள் சீராக இருக்கும். குழந்தை பெற்றப் பின் அலுவலகம் செல்வது பாலூட்டும் தாய்களுக்கு ஒரு சவாலான விஷயமே. குழந்தை பெற்றப் பின் சீக்கிரமே வேலைக்கு செல்வதினால் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம்.

அவைகளில் சில, குழந்தையை பிரிய வேண்டிய கவலை, அவர்களுக்கு தேவைப்படும் வேளையில் அவர்களுடன் இருக்க முடியாமல் போவதால் ஏற்படும் குற்ற உணர்வு போன்றவைகள். மகப்பேறு முடிந்து வேலைக்கு உடனே திரும்பும் போது, பெண்களை திணறடிக்கும் விஷயம் பல உண்டு.

ஆனால் அந்த சவால்களை வெற்றிக் கொள்ள உங்களுக்காக சில குறிப்புகளை அளிக்கிறோம். குழந்தையை பிரிதலான சவாலை வெற்றிக் கொள்ளுதல்: வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் வரை தங்களின் பச்சிளங் குழந்தையின் நினைப்பாகவே இருப்பார்கள்.

அது அவர்களுக்குள் ஒரு குற்ற உணர்வை கூட ஏற்படுத்தும். இதனால் அவர்கள் ஒரு நல்ல தாய்க்கு உதாரணம் இல்லை என்று சொல்ல முடியாது. அவ்வாறு மனம் நினைக்கும் போது ஆழமாக சுவாசித்து, உங்களை நீங்களே நம்புங்கள். குழந்தையை பிரிதலான சவாலை வெற்றிக் கொள்ள பொறுப்புகளை நன்கு அறிந்து, அதை சரிவர வழி நடத்திச் செல்லுங்கள். தாய்ப்பால் ஊட்டுதலுக்கான சவால்கள்: வீட்டில் தாய்ப்பால் கொடுப்பதையும், அலுவலகம் சென்ற பின் மார்பிலிருந்து பாலை எக்கி எடுக்கவும் ஒரு பெண் படாத பாடுபடுகிறாள். ஆனால் இதை சரிவர செய்ய பழகி விட்டால், இந்த சவாலையும் எளிதில் வெற்றி கொள்ள முடியும். அதிலும் அலுவலகம் வந்த பின்னரும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க விரும்பினால், அலுவலக மேலாளரிடம் சின்ன இடைவேளைக்கு அனுமதி வாங்கிக் கொண்டு பாலை எக்கி எடுக்கவும். சில அலுவலகம் இதற்காக சுத்தமான ஒரு தனிப்பட்ட அறையை ஏற்பாடு செய்து கொடுக்கிறது. சில அலுவலகம் பெண்களின் பரிந்துரையின் பேரில், இதற்காக தற்காலிகமாக அறைகளை ஏற்பாடு செய்து கொடுக்கும்.

புது அட்டவணைப்படி பொருந்திக் கொள்ளும் சவால்: பெண்களின் அட்டவணையானது கண்டிப்பாக குழந்தை பெற்றப் பின், குழந்தைக்கு ஏற்றாற்போல் மாறிவிடும். வேலைக்குச் செல்லும் முன் போதிய கால அவகாசம் இருப்பதால், அதை பயன்படுத்திக் கொண்டு குழந்தையின் அட்டவணையை மெதுவாக, அலுவலக தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும். நம்பிக்கைக்குரிய குழந்தைப் பாதுகாவலரை கண்டுப்பிடித்தல்: குழந்தை பிறப்பதற்கு முன்னரே ஒரு நல்ல உள்ளூர் குழந்தைப் பாதுகாவலரை ஏற்பாடு செய்துக் கொள்ளவும் அல்லது குழந்தையை பாதுகாக்க வேறு ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

வேண்டுமெனில் வீட்டு பெரியவர்களை, வீட்டிற்க்கு வரச் சொல்லி குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் குழந்தையை தங்கள் குழந்தையை போலவே பாசம் காட்டி பார்த்துக் கொள்வர். குழந்தையை பார்த்துக் கொள்ள சரியான ஆட்கள் கிடைக்காவிட்டால், நம்பகத்தன்மையுள்ள ஒரு குழந்தை பாதுகாவலரை நியமித்து கொள்ளலாம். அதிலும் அவர்கள் வீட்டிற்க்கு அருகில் உள்ளவர்களாக, பாதுகாப்பான சூழலை உருவாக்கத் தெரிந்தவர்களாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலாளரிடம் பேசுங்கள்: அலுவலக மேலாளரிடம் முன் கூட்டியே தாய்மைப் பணியின் அட்டவணையை தெரிவித்து வளையுந்தன்மையுடைய வேலை நேரத்தை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.

அதிலும் குழந்தை வளரும் வரை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் குழந்தையையும் கவனித்து, வேலையையும் நிம்மதியாக பார்க்கலாம். 

நீங்கள் எந்த வயதில் அழகாக காணப்படுவீ ர்கள் ?

மனிதர்கள் எந்த வயதில் அழகாக காணப்படுகின்றனர் என்பது குறித்து ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.


இதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மிக அழகாக தெரிகின்றனர் என்பது தெரியவந்தது. ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர்.


அதுவே பெண்களை கவருகிறது. அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில் தான் அழகாக இருக்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை கவரும் உடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர்.


ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும் விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏன் கணவர்கள் மனைவியிடம் பொய்சொல்கின்றார்கள் தெரியுமா ?

உலகம் முழுவதுமே உள்ள கணவர்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பதற்காகத்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மனைவியுடன் பொது இடத்தில் நடந்து செல்லும்போது அம்சமாய் ஒரு பெண் கிராஸ் செய்தால் அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம்.

அப்போது மனைவி கணவரை நோக்கி, இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க என்று கேட்டால். சீச்சீ நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே என்று கேட்பதோடு நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு ‘அதை’ப் பார்க்கணும் என்பார்கள். வீட்டில் ஏதாவது புதிதாக சமைத்தால் முதலில் பரிசோதனை செய்வது கணவரை வைத்துதான்.

மனைவியை சந்தோசப்படுத்த கணவரும் மூச்சுவிட முடியாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார். என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு ஓ, ரொம்ப நல்லா இருந்தது என்று கணவன்மார்கள் பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் விடுவார்களாம். சமைத்த சாப்பாடு நல்லா இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள்.

அன்னைக்கு ஒரு நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக் கொள்வார்கள்.

அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின் குணம். புதிதாக ஒரு புடவையை கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள். உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள்.

அவர்கள் சொல்வது சேலையைத் தான் அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்..!

கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் ஆண்கள்.

இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தானாம்.


இதையே சாக்காக வைத்து எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை கணவர்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

உங்கள் பற்கள் இயற்கையாக வெண்மையாக வர வேண்டுமா ?

அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள்வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலி வோடு வைப்பதற்கு அனை வரும் ஒரு நாளைக்கு இர ண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம்.

இருப்பினும் ஏதாவது உணவு களை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைக ள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக்கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால் பற்கள் வெண்மையுடன் இருக்கும்.

மே லும் ஒருசில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும் , பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வெண்மையு டனும் இருக் கும். சரி, இப்போது அத்தகைய பொ ருட்கள் என்ன வென்று பார்க்காம்.

•எலுமிச்சை துண்டை வைத்துபற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

 • பற்களை வெள்ளையாக்கும் பராம் பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

• பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

• அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

• அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென் றும் மின்னும்.

• ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்கவேண்டுமென்று நினை ப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

• ஈறுகளில் வலி அல்லது சொ த்தை பற்கள் இருப்பவர்களுக் கு கிராம்பு ஒருசிறந்த மருத்துவப்பொருள். அதிலும்தினமும் பற்களை துலக்கும்போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண் ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

• பற்களை வெண்மையாக்கும் பொரு ட்களில்இதுவும் ஒன்று. இதனை வை த்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்ப தோடு, பளிச்சென்றும் மின் னும்.

• பிரியாணி இலையைபொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கல ந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.

உங்கள் காதலில் செய்யக் கூடாதவைகள் !

காதல் செய்யக் கூடாதவைகள் என சில விடயங்கள் இருக்கின்றது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை :

நண்பர்களை கழித்துவிடுதல் :

உமது காதலர் இவ்வளவுக் காலமாக பழகி வந்த தோழர்களையும், தோழிகளையும் வெட்டி விடச் சொல்லுவது.

முதலில் உமது காதலரின் தோழர்கள், தோழிகள் யார் என்பதை கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள். பிறகு அவர்களை ஒரு நாள் சந்தித்து நீங்களும் அறிமுகமாகிக் கொள்ளுங்கள். அவர்களின் குண நலங்கள் நன்மையாக இருந்தாலோ, தீமை இல்லாமல் இருந்தாலோ அவர்களோடு நீங்காளும் நட்பைப் பேணலாம். அவர்களின் குண நலங்கள் தவறாக இருந்தால் உடனடியாக அவர்களை விட்டு விலகு என காதலரிடம் கட்டளை இடாதீர்கள். அது சிக்கல்களை உண்டு பண்ணும். கூடா நண்பர்களை உமது காதலர் கொண்டிருந்தால் அவர்களிடம் இருந்து படிப் படியாக காதலரை விலச் சொல்லலாம். அது குறித்து காதலரிடம் உங்களது நிலைப்பாட்டை விலக்குங்கள்.

நம்பிக்கைகளை அழித்துவிடுதல் :

காதல் என்றதும் தான் சார்ந்த அதே சமூகத்தில் இருக்கும் பெண்ணிடம் தான் காதல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு லவ்வர் கிடைப்பது கடினமானக் காரியமாகும். காதல் என்பதே எந்த வித பின்புலம் பாராமல் மனதோடு ஒன்றிப் போகும் உன்னத நட்பு ஆகும். ஆகவே உமதுக் காதலர் வேறு பின்புலத்தில் இருந்தால் அவரது நம்பிக்கைகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவற்றை கைவிடும் படி கட்டளை இடாதீர்கள். உங்களுக்கு அவரது நம்பிக்கைகள் பிடித்து இருந்தால் நீங்களும் பழகிக் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்றால் அவரது நம்பிக்கைகளை கிண்டலோ, கேலியோ செய்யாதீர்கள். அவரை அவரதுப் போக்கிலே விட்டுவிடுவது நல்லது. வேண்டும் என்றால் ஒரு முறை கூறிப்பார்க்கலாம். அவர் விரும்பினால் தமது நம்பிக்கைகளை மாற்றட்டும். நீங்களே மாற்றும் படி கட்டளையிடாதீர்கள். காதலில் ஒருவரு மற்றவரை அடிமையாக நடத்துதல் கூடாது.

சொன்னதை செய்தல் :

காதல் என்றதும் சில விடயங்களில் பொது உடன்பாடு கொள்ளுதல் ஆகும். அப்படி உடன்பாடுகள் இல்லாத விடயங்களில் உமது ஆதிக்கத்தை நிறுவ வேண்டாம். பொது உடன்பாடுகளில் நீங்கள் கட்டளையிடாதீர்கள். நான் சொன்னதை நீ செய்யவில்லை என கட்டளையிடாதீர்கள். இருவரும் அமர்ந்து ஒரு காரியம் செய்ய முன் பேசுங்கள். குறிப்பாக காதலர் ஆனதும் நீங்கள் ஒரு வாகனம் வாங்க விரும்புகிறீர்கள். உங்களது ரசனையும், உமது காதலரின் ரசனையும் மாறுப்படும் என்றால் - முதலில் இருவரும் பேசி எப்படி வாங்கலாம் ஒருவர் ஒருவரின் விருப்பங்களை அறிந்துக் கொண்டு வாங்குதல் அவசியம்.

பின்புலம் பார்த்தல் :

காதலின் புனிதமே அது காதலரின் பின்புலத்தை ஆராய்வதில்லை. பின்புலம் என்ன என்று தெரிந்துக் கொள்ளுதல் அவசியம். ஆனால் தனது பின்புலம் உயர்வானது என்ற செருக்கு காதலில் வந்துவிட்டால் அது காதலாகாது. உங்களது காதலர் வேற்று மதம், சாதி, மொழி, நாட்டவராய் இருந்தால் அவற்றை அரவணைத்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களது தோழர்களிடமும், பெற்றோரிடமும் கூறும் போது எடுத்துக் கூறுங்கள். காதலரின் பாசிட்டவான விடயங்களை முன்வையுங்கள். பின்புலத்தைத் தாண்டியும் நீங்கள் மகிழ்ச்கியான குடும்பம் ஒன்றை நிறுவ ஏதுவான நபர் இவர் தான் என காதலரைப் பற்றி உயர்வாகக் கூறுங்கள்.

உடல் ரீதியான உறவு :

காதல் என்றதுமே பீச், சினிமா, பார்க் சென்று உரசுதல் மட்டுமே என்று பலர் நினைத்திருக்கிறார்கள். காதல் என்பது வெறும் மனம் சம்பந்தம் மட்டுமில்லாமல் உடல் சம்பந்தமானதும் கூட. அதற்காக உங்களது இச்சைகளைத் தீர்க்கும் மெசினாக காதலரைப் பார்க்க வேண்டாம். அவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டாம். நிச்சயம் திருமணத்துக்கு முன் உடலுறவில் ஈடுபட வேண்டாம்.


கையைப் பிடித்தல், அணைத்துக் கொள்ளுதல், முத்தமிடல் இவை யாவையும் காதல் சொன்ன அடுத்த நாளே செய்ய வேண்டாம். இந்த மூன்றும் காதலில் இன்றியமையாதவைகள் தான். ஆனால் அதற்கான நேரம், பக்குவம், மன நிலையை தயார்ப்படுத்துதல் அவசியம். உங்களது காதலர் வெறும் உடலுறவுக்குத் தான் உங்களை உட்படுத்த முயல்கிறார் என்றால் அது குறித்து அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். உடலுறவில் ஈடுப்பட்டு விட்டால் பலருக்கு மன ரீதியான அழுத்தங்களும், குற்ற உணர்வும் ஏற்படும் இது காதலில் விரிசல்களையும், தேவையற்ற கர்பங்களைக் கூட ஏற்படுத்தலாம். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதும் நினைவுக் கொள்ளத் தக்கது.


காதலரோடு வெளி இடங்களுக்கு செல்லும் போது தனிமையான இடங்களுக்குப் போக வேண்டாம். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்துக்குச் செல்லுங்கள். தனிமையான இடங்கள் பல நேரம் பல்வேறு பிரச்சனைகளை உண்டு பண்ணும்.


சில வேளைகளில் உமது காதலருக்கு மூன்றாம் நபர்களால் ஆபத்தும் நிகழக் கூடும். காதலரை வருங்கால கணவன்/மனைவியாகப் பார்க்கப் பழகினால் அவரது பாதுக்காப்பையும், கௌரவத்தையும், கண்ணியத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.


குறிப்பாக இந்த சமூகம் காதலர்கள் பொது இடங்களில் முத்தமிடுவதையும், கையைப் பிடிப்பதையும், அணைப்பதையும் அனுமதிக்க வேண்டும். இவற்றை அனுமதிக்காமல் தடுப்பதால் தான் பெரும்பாலான காதலர்கள் தனிமையான இடங்களுக்குச் சென்று பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு பசி எடுக்கவில்லையா ? கவலை வேண்டாம் !!!

சாப்பாட்டுக்கு வழியின்றி வாடுவோர் ஒருபுறம் என்றால், விதவிதமான சாப்பாடு இருந்தாலும் பசியின்றித் தவிப்போர் இன்னொரு புறம். ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் பசியின்மை. இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பிச் சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இதோ.

01-நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவசியம்.

எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே வகை உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாகச் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

02-சமைக்கும் உணவு சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பிச் சாப்பிட முடியும்.

எனவே வழக்கமான காய்கறிகள் என்றாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள்.

3-ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொதுவாகச் சாப்பிடப்படும் உணவு நமக்கு ஒத்துக்கொள்ளுமா என்று யோசித்தபிறகே சாப்பிட வேண்டும்.

4-உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களைச் சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையைப் பராமரிப்பதே உடல் நலத்துக்கும், உணவுப் பழக்கவழக்கத்துக்கும் நல்லது.

5-உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாகச் சாப்பிடுவதுதான் சரியான நேரத்துக்குப் பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாகச் சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்குத் தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

6-சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும்.

அடிக்கடி புதிய உணவுகளைச் சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசியெடுப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான செரிமானத்துக்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.

7-சேர்க்க வேண்டிய உணவுகளைச் சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளைத் தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும்.

உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளைச் சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளைக் குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.

8-எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல.

ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்துக்கு உங்கள் ஆரோக்கியத்துக்கு பக்கபலமாக இருக்க வேண்டுமல்லவா?

உடற்பயிற்சிக்குப் பிறகு தக்காளி ஜூஸ் அருமை!

உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு பலர் சக்தி பானம் என்று எதைஎதையோ குடித்து உடலைத் தேற்றி வருகின்றனர். ஆனால் தக்காளி ஜூஸ் அருமையான எனெர்ஜி டிரின்க் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


கடுமையாக உடற்பயிற்சி விளையாட்டு வீரர்கள் உட்பட சாதாரண மனிதர்களுக்கும் தேவைதான், ஆனால் அதன்பிறகு தேவைப்படும் எனெர்ஜியக் கொடுக்க, அதாவது இறுகிய தசைகள் ரிலாக்ஸ் ஆகவும், ரத்த ஓட்டம் மீண்டும் நார்மலாகவும் தக்காளி ஜூஸ்தான் சிறந்தது என்கிறது இந்த ஆய்வு.


மேலும்....கிரீஸில் 15 தடகள வீரர்களை வைத்து இந்த பரிசோதனை செய்யப்பட்டதில் தக்காளி ஜூஸ் உடனடி எனெர்ஜி கொடுப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.


தக்காளி ஜூஸ் குடித்தவுடன் குளூக்கோஸ் அளவு விரைவில் நார்மலடைவதை இந்த ஆய்வு கண்டு பிடித்துள்ளது.


தக்காளியில் உள்ள 'லைக்கோபீன்' என்ற ரசாயனம் அதன் சிகப்பு நிறத்தைக் கொடுக்கிறது. சிகப்பு நிறமான எதுவும் உடலுக்கு நல்லதுதான்.


வைட்டமின்கள் பல அடங்கிய தக்காளி புற்று நோய், இருதய நோய்கள் மற்றும் பிற உடல் உபாதைகளை தடுக்கவல்லது.


தசை மற்றும் மூளை பழுதடைவதற்குக் காரணமாகும் சில சுரப்பிகளின் தீமையான அளவை தக்காளி ஜூஸ் குறைக்கிறது.


உடலின் நச்சுத் தன்மையை தக்காளி ஜூஸ் கடுமையாகக் குறைப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு? - ரஜினி ரசிகர்கள் ஆலோசனையா?

மக்களவைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ரஜினி ரசிகர்கள் சென்னையில் கூடி ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் சேலத்திலும் கூடி ஆலோசனை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்திகளை ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் மறுத்துள்ளது.

ரஜினி வாய்ஸ்

தேர்தலுக்குத் தேர்தல் ரஜினி வாய்ஸ் குறித்து அரசியல் கட்சிகள், பத்திரிகைகள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருப்பது வழக்கம்.

1996, 1998, 2004- தேர்தல்களில் மட்டும் இந்தக் கட்சிக்கு ஆதரவு என ரஜினி வாய்ஸ் கொடுத்தார். ஆனால் அதன் பிறகு, ரசிகர்கள் தங்கள் விருப்பப்பட்ட கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று கூறிவிட்டார்.

இதனால் ரசிகர்களை வளைப்பதில் திமுக, அதிமுக இரண்டுமே தீவிரமாக வேலை பார்ப்பது வழக்கும். குறிப்பாக திமுக.

பாஜக கோரிக்கை

கடந்த சட்டமன்ற தேர்தலில் நல்லாட்சி அமைக்கும் கட்சிக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினி எந்த கட்சியை ஆதரிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடியுடன் நெருக்கமான நட்பு கொண்ட அவர், பாஜகவுக்கு ஆதரவு ஆதரவு தெரிவிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

பாஜகவினரும் ரஜினியின் ஆதரவை மேடை தோறும் கோரி வருகின்றனர்.

சென்னையில்

இந்நிலையில்தான் தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், ரஜினி ரசிகர் மன்ற பட்டதாரிகள் பேரவை, இளைஞர் பேரவையினர் ஆகியோர் சென்னையில் கூடி தேர்தலில் ஆதரவு யாருக்கு என ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.

கூட்டத்தில், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்து சேலம்

மேலும் சென்னையை அடுத்து சேலத்தில் கூட்டம் நடத்தி ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தீர்மானம் நிறவேற்றி ரஜினியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

மறுப்பு

ஆனால் இந்த தகவல்களை அடியோடு மறுத்துள்ளனர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற சென்னை நிர்வாகிகள். இதுகுறித்து சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ராமதாஸிடம் கேட்டபோது, "இப்படியொரு நிகழ்வு நடக்கவே இல்லை. தேர்தல் குறித்து எந்த முடிவையும் தலைவர்தான் எடுப்பார். ரசிகர்கள் எடுக்க முடியாது. இப்படியொரு கூட்டம் எங்கே நடந்ததென்று எங்கள் யாருக்கும்தெரியாது. சேலம் மாவட்ட நிர்வாகிகளைக் கேட்டபோது, அப்படியொரு நிகழ்ச்சியை நடத்தும் திட்டம் இல்லை என்றுதான் சொன்னார்கள். யாராவது தனிப்பட்ட முறையில் பேசினார்களா என்று தெரியவில்லை. அதிகாரப்பூர்வமான நிர்வாகிகள் யாருக்கும் இதுபற்றிய தகவலே இல்லை," என்றார்.

சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!

சூது கவ்வும் படத்தில் நடித்த சிம்ஹா மற்றும் அதிதி நடிக்கும் புதிய ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்.


ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் டாக்டர் எல்.சிவபாலன் மற்றும் காபி சினிமாஸ் இணைந்து தயாரித்து வழங்கும் புதிய திரைப்படம் 'உறுமீன்'.


சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!


இது ஒரு ஆக்ஷன், திரில்லர் கதை. இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். அச்சு இசையமைக்கிறார். ஸ்ரீசரவணன் ஜி.மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார்.


சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!


சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக அதிதி நடிக்கிறார்.


முக்கியமான கதாபாத்திரத்தில் காளி, வெங்கட், கலையரசன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.


படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முன்னனி நடிகர் ஒருவருடன் பேச்சு நடத்தி வருகின்றனர். இப்படத்தின் பூஜை இன்று ஜீரோ ரூல்ஸ் அலுவலகத்தில் நடந்தது.


தயாரிப்பாளர் சிவி குமார் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இதில் கலந்து கொண்டனர்.


சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!


கார்த்திக் சுப்பாராஜ் கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார். இப்படப்பிடிப்பு மார்ச் மாதம் 5-ஆம் தேதி சென்னையில் தொடங்கி, கோவை, ஹைதரபாத் ஆகிய இடங்களில் நடக்கிறது.

இன்று ரஜினி - லதா 34வது திருமண நாள்! - வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி - லதா தம்பதியரின் 34வது திருமண நாளுக்கு வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள் திரண்டனர்.


திரையுலகில் பிற நடிகர்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் உதாரணமாகத் திகழும் தம்பதியர் ரஜினிகாந்த் - லதா.


இருவருக்கும் கடந்த 1981-ம் ஆண்டு இதே நாளில் திருப்பதியில் திருமணம் நடந்தது. நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் சிலரைத் தவிர வேறும் யாருக்கும் திருமணத்துக்கு அழைப்பு தரவில்லை.


இன்று ரஜினி - லதா 34வது திருமண நாள்! - வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்


பத்திரிகையாளர்கள் நிச்சயம் வரவேகூடாது என பிரஸ் மீட் வைத்தே கூறிவிட்டார். அப்படியும் மீறிச் சென்ற பத்திரிகையாளரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பினார் ரஜினி.


அதன் பிறகு சென்னையில் அனைவரையும் அழைத்து திருமண வரவேற்பு நடத்தினார்.


ரஜினி பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், திரையுலகைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர் திகழ்ந்தாலும், குடும்பத்தைப் பொருத்தவரை ஒரு எளிய தலைவனாக, மனைவிக்கு மரியாதை கொடுத்து, அதற்கேற்ப நடக்கும் ஒரு கணவனாக, பிள்ளைகளுக்கு அன்பான தகப்பனாகத் திகழ்கிறார்.


இந்த ஆண்டு திருமணம், அடுத்த ஆண்டு விவாகரத்து, அதற்கடுத்த சில மாதங்களில் மறு திருமணம்.. என்பதே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முறையாகிவிட்ட இந்த திரையுலகில்... ரஜினி- லதா உதாரணத் தம்பதியராகத் திகழ்கின்றனர்
.

இந்த ஆண்டு இருவருக்கும் திருமணமாகி 33 ஆண்டுகள் முடிந்து, 34 ஆவது ஆண்டு பிறக்கிறது. ஆண்டு தோறும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 மட்டுமல்ல, திருமண நாளான பிப்ரவரி 26-ம் தேதியும் வாழ்த்துச் சொல்ல அவர் வீட்டுக்கு ரசிகர்கள் செல்வது வழக்கம். அவர்களை வரவேற்று இனிப்பு வழங்குவார் லதா ரஜினிகாந்த்.


இந்த ஆண்டும் ஏராளமான ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலிருந்து ரஜினிக்கும் லதாவுக்கும் மலர்க் கொத்துகள், பரிசுகள் கொடுத்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். அவர்களை வரவேற்று நன்றி கூறி இனிப்பு வழங்கினார் லதா ரஜினி.

பாக் மில்கா பாக் - ஓடு மில்கா ஓடு!

 தடகள வீரனைப் பற்றி நகைச்சுவையாகச் சொல்லி கடந்த ஆண்டு வெற்றி கண்ட படம் எதிர்நீச்சல். அழுத்தமான பதிவாக வெளியானது ஹரிதாஸ். இந்தி சினிமாவில் தடம்பதித்தது பாக் மில்கா பாக். இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரரான மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தைத் தழுவி உருவான பயோபிக் திரைப்படம் இது. 187 நிமிடங்கள் ஓடும் இந்த படம், இந்தியாவில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்தது. உலக ரசிகர்களையும் கவர்ந்தது.


மூன்று மணிநேரப் படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை உடைத்தெறிந்த இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர், அக்ஸ், ரங்க் தே பசந்தி டெல்லி-6 போன்ற படங்களுக்காகத் தேசிய விருதுகளையும், பிலிம்ஃபேரின் பல விருதுகளையும் பெற்ற ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா. ரங்க் தே பசந்தி (2006), ராகேஷ் மெஹ்ராவுக்குப் பாலிவுட்டில் பெரிய அடையாளத்தைத் தந்தது என்றால் பாக் மில்கா பாக் அவரை இந்தியாவின் முதன்மையான இயக்குநர்களில் ஒருவராக ஆக்கியது.


படத்தின் கதை என்ன?


ரோமில் 1960இல் நடைபெறும் ஒலிம்‌பிக்ஸில் மில்கா சிங் ஓடத் தயாராகும்போது, அவரின் பயிற்சியாளர் “ஓடு மில்கா ஓடு” என்கிறார். மில்காவின் ஓட்டத்தை, அவரின் சிறு வயது அனுபவங்களும் துயரங்களும் தடை செய்து, அவரை நான்காவது இடத்துக்குத் தள்ளுகின்றன.


மில்கா சிங்கின் வாழ்க்கையைச் சிறு வயதிலிருந்து நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம். 1947இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் பிரிவினை கலவரங்களில் மில்கா சிங்கின் பெற்றோர்கள் கொல்லப்படுகிறார்கள். கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அகதிகளோடு பெற்றோரை இழந்த சிறுவன் மில்கா சிங் டில்லி வந்து சேர்கிறான்.


சில நாட்களில் தப்பி வந்த தன் அக்காவையும் அவள் கணவனையும் காண்கிறான். அகதிகள் முகாமில் மில்காவுக்கு நண்பர்கள் கிடைக்கிறார்கள். அக்காள் கணவனுடன் ஒரு சிறிய பிரச்சினையில் அங்கிருந்து வெளியேறுகிறான். தனியாக நண்பர்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறான். ஓடும் ரயிலில் நிலக்கரி திருடிச் சம்பாதிக்கிறான்.


காலம் கரைகிறது. இளைஞனாகும் மில்கா (பர்ஹான் அக்தர்) நண்பர்களுடன் நிலக்கரித் திருட்டைத் தொடர்கிறான். அப்பகுதியில் வசிக்கும் பீரூவை (சோனம் கபூர்) காதலிக்கிறான். அவளும் காதலித்தாலும், அவனுடைய திருட்டுத் தொழிலை அறிந்து, அவன் நல்ல பாதைக்குத் திரும்பினால் மட்டுமே அவனுடன் வாழ விரும்புவதாகச் சொல்கிறாள்.இதனால் மில்கா ராணுவத்தில் சேர்கிறான். அங்கே அவன் ஓட்டத்தைப் பார்த்து, ஹவால்தார் குருதேவ் சிங் (பவன் மல்ஹோட்ரா) அவனை ஊக்கப்படுத்துகிறார்.


ஒலிம்பிக் போட்டிக்காக இந்தியப் பெயர் பொறித்த மேல் அங்கியின் மீது ஆசைப்படும் மில்காவைக் கண்டு மூத்த பணியாளர்கள் நகைக்கிறார்கள். அந்த மேல் அங்கியை அடையப் பல பயிற்சிகளை எடுக்கிறான். பயற்சியாளர் ரன்வீர் சிங்கின் (யோகராஜ் சிங்) பார்வை அவன் மேல் படுகிறது. ஒலிம்‌பிக்ஸ் போட்டிக்குச் செல்லும் அணிக்கான தேர்வில், கால் அடிபட்ட நிலையிலும் ஓடி தேசிய சாதனையை முறியடிக்கிறான். ஒலிம்பிக் குழுவில் இடம் பிடித்து அங்கியைப் பெறுகிறான். அந்தப் பெருமையுடன் பீரூவைக் காணச் செல்கிறான். ஆனால் அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மில்கா ஏமாற்றத்துடன் திரும்புகிறான்.


மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் (1956) அவன் ஓடத் தயாராகிறான். அங்கே, ஆஸ்திரேலியப் பயிற்சியாளரின் பேத்தி ஸ்டெல்லா (ரெபேக்கா ப்ரீட்ஸ்), எனும் இளம் பெண் பழக்கமாகிறாள். அவளுடன் இரவைக் கழிக்கிறான். அந்தக் களைப்பில் மறுநாள் தோற்கிறான். வந்த நோக்கத்தை மறந்து சந்தோஷத்தில் திளைத்து, நாட்டை ஏமாற்றியதற்கு வருந்துகிறான்.


 400 மீட்டர் ஓட்டத்தில், உலக சாதனை நேரமான 45.9 விநாடிகளை இலக்காகக் கொண்டு, கடுமையான பயிற்சிகளை எடுக்கிறான். 1958இல் டோக்கியோவில் ஆசியப் போட்டியில், 200 மீட்டர் பந்தயத்தில், 21.6 விநாடிகளில் ஓடி, வெற்றி அடைகிறான். 1958இல் காமன்வெல்த் போட்டியில், 45.8 விநாடிகளில் 400 மீட்டர் ஓடி உலக சாதனை படைக்கிறான்.

இந்தியா பாகிஸ்தான் இடையே நட்புறவை வளர்க்க ஓட்டப் பந்தயம் நடத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், பாகிஸ்தான் அதிபர் அயுப் கானும் முடிவு செய்கிறார்கள். மில்கா சிங் பழைய அனுபவங்களால் பாகிஸ்தான் செல்ல மறுக்கிறார். நேரு அவரைச் சந்தித்துப் பேசுகிறார். மில்கா பாகிஸ்தான் சென்று தன் சிறு வயதில் வசித்த கிராமத்திற்குச் சென்று நினைவுகளில் மூழ்கி அழுகிறார்.


ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு போட்டியில் வெல்கிறார். அதிபர் ஆயுப் கான் 'பறக்கும் (ஃ ப்ளையிங்க்) சீக்கியர்' என்று மில்காவைப் புகழ்கிறார். அவர் வெற்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடுமையான உழைப்பும் மனோபலமும் ஆழ்ந்த ஈடுபாடும் இருந்தால் உலகை வெல்ல முடியும் என்ற செய்தியுடன் படம் முடிகிறது.


படத்தின் சிறப்புகள்


மில்கா சிங்கும் அவர் மகள் சோனியா சான்வால்காவும் எழுதிய 'த ரேஸ் ஆஃப் மை லைஃப்' புத்தகத்தின் பாதிப்பில், பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி திரைக்கதையை எழுதினார். திரைக்கதையை எழுத 30 மாதங்களாயின. 30 கோடியில், 12 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த படம், உலக அளவில் 160 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. பல மாநிலங்களில் இதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. உலகெங்கிலும் பல பாராட்டுகளைப் பெற்றது.


இது ஒரு விளையாட்டு வீரனின் வெற்றிக் கதை மட்டுமல்ல. ஒரு தனி மனித ஆன்மாவின் வெற்றி. வணிக சமரசம் இல்லாமல் உண்மையாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இருந்த ஜீவனால் உலக அளவில் மாபெரும் வெற்றிப்படமானது. இந்திய விளையாட்டு அரங்கில் எவ்வாறு மில்கா சிங்கின் பெயர் காலம் காலமாக நிலைத்து இருக்குமோ, அதே போல், மில்கா சிங்காக வாழ்ந்திருக்கும் பர்ஹான் அக்தரின் கடின உழைப்பிலும் பிரமாதமான நடிப்பிலும் வந்திருக்கும் பாக் மில்கா பாக் படமும் ரசிகர்கள் மனத்தில் என்றும் இருக்கும். 

ப‌சி‌யி‌ன்மையை‌ப் போ‌க்கு‌ம் க‌றிவே‌ப்‌பிலை!

க‌றிவே‌ப்‌பிலை, சு‌க்கு, ‌மிளகு, ‌தி‌ப்‌பி‌லி, காய‌ம், இ‌ந்து‌ப்பு சம அளவு எடு‌த்து பொடி செ‌ய்து, சுடுசாத‌த்‌தி‌ல் கல‌ந்து நெ‌ய் ‌வி‌ட்டு ‌பிசை‌ந்து சா‌ப்‌பிட ‌ப‌சி‌யி‌ன்மை, உண‌வி‌ல் வெறு‌ப்பு, பு‌ளியே‌ப்ப‌ம், வா‌ய் கும‌ட்ட‌ல் ஆ‌கியவை குணமாகு‌ம்.


குழ‌ந்தைகளு‌க்கு‌ம் இ‌ந்த சாத‌த்தை ‌சி‌றிய அள‌வி‌ல் கொடு‌த்து வரலா‌ம்.


க‌றிவே‌ப்‌பிலை ஈ‌ர்‌க்குட‌ன் சே‌ர்‌த்து இடி‌த்து சாறு ‌பி‌ழி‌ந்து ‌கிரா‌ம்பு, ‌தி‌ப்‌பி‌லி பொடியை சே‌ர்‌த்து குழை‌த்து தர குழ‌ந்தைகளு‌க்கு உ‌ண்டாகு‌ம் வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ந‌ன்கு ப‌சியெடு‌க்கு‌ம்.


க‌றிவே‌ப்‌பிலை, ‌மிளகு, ‌சீரக‌ம், வெ‌ந்தய‌ம், சு‌ண்டை வ‌ற்ற‌ல், சூரண‌த்து உ‌ப்பு சே‌ர்‌த்து உ‌ண‌வி‌ல் கல‌ந்து சா‌ப்‌பி‌ட்டு வர ம‌ந்த‌ம் ‌நீ‌ங்‌கி ப‌சி உ‌ண்டாகு‌ம்.


க‌‌றிவே‌ப்‌பிலையை துவையலாகவோ, பொடியாகவோ செ‌ய்து ‌தினமு‌ம் உ‌ட்கொ‌ண்டு வர, செ‌ரியாமை, ப‌சி‌யி‌ன்மை, க‌ழி‌ச்ச‌ல் இவ‌ற்றை‌ப் போ‌க்கு‌ம். தலைமுடியை ‌நீ‌ண்டு வளர‌ச் செ‌ய்யு‌ம். 

மூலிகைகளின் அற்புதங்கள்!

கீழாநெல்லி :

தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் பிழிந்து சாறு எடுத்து சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டுவர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்ல மருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்றகல்லீரலை மீட்கிறது.


துளசி:

மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரûஸ எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி, ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, சீரணத்தை அதிகரிக்க, அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு சிறந்த மருந்து நோய் எதிர்ப்பு திறன் கொண்டது.


ஆஸ்துமா நோயாளிகளின் நண்பன். 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை மாலை வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் பல் கூசுதல் தொண்டை புண் தொண்டைச்சளி குணமடையும்.


கரிசலாங்கண்ணி:

கல்லீரலில் ஏற்படும் புண், வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதில் உள்ள இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண், தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது. ஜீரணத்தை அளிக்க வல்லது. ஹெபடைடில் ஏ.பி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் இருமலை மட்டுப்படுத்தும் அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உள்ளோர் பச்சையாகவோ அல்லது வற்றலாகவோ வாரமிருமுறைஉண்டு வர சளி பிடிக்காது.


தொண்டை வலி இதய பலவீனத்தைப் போக்கும். இலைகள் கைப்பிடியளவு சிறிது உப்பு சேர்த்து மண் பானையிலிட்டு வதக்கி நாய் கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுத்து அதே இலையை வைத்து கட்டினால் நஞ்சு முறிந்து விடும்.


பிரண்டை:

பிரண்டை சாறு கருப்பைக் கட்டிக்கு மருந்து. பைலோரி என்னும் கிருமி உண்டாக்கும் வயிற்றுபுண்னை ஆற்ற வல்லது. பசியை தூண்டும்.


அதிமதுரம்:

நாவறட்சி தொண்டைக்கட்டு வறட்டு இருமலுக்கு “டாக்டர்” குடல் புண்னை ஆற்றும். இனிப்பு, சர்க்கரைக்கு பதிலாக அதிமதுரத்தை பயன்படுத்தலாம்.


அருகம்புல்:

ரத்த கொலஸ்டிராலைக் குறைக்க, உடல் எடை குறைய உதவும் நச்சுக்களால் உடலில் ஏற்படும் திடீர் அரிப்பு நோய் ஒவ்வாமை நோய்க்கு அருகம்புல் சாறு 100மி தினமும் 2 வேளை சாப்பாட்டுக்கு முன் சாப்பிட 15 நாளில் பலனுண்டு.

பல குரல்களில் டப்பிங் பேசும் விக்ரம்?


ஐ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. பொதுவாக படப்பிடிப்பு முடிந்த பிறகே போஸ்ட் புரொடக்சனை வைத்துக் கொள்வார்கள்.


படப்பிடிப்புக்கு ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும் ஐ போன்ற பிரமாண்டப் படங்களுக்கு இப்படி வேலைகளை அடுத்தடுத்து முடிப்பதென்றால் மேலும் ஒரு வருடம் பிடிக்கும். படப்பிடிப்புடன் சேர்த்து போஸ்ட்புரொடக்சன் வேலைகளையும் ஷங்கர் நடத்தி வந்தார்.


இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியும் முன்பே முதல்பாதி படத்தின் டப்பிங்கை விக்ரம் முடித்துவிட்டார். விரைவில் இரண்டாவது பாதிக்கான டப்பிங்கை தொடங்குகிறார்.


பலவித தோற்றங்களில் நடித்திருப்பதால் அந்தந்த தோற்றங்களுக்கு ஏற்ப குரலில் மாறுதல் செய்து விக்ரம் டப்பிங் பேசவுள்ளதாக தெரிவிக்கிறது படயூனிட்.


ஐ யில் எமி ஜாக்சன், சுரேஷ் கோபி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். பீட்டர் ஜாக்ஸனின் வீட்டா ஸ்டுடியோ படத்தின் மேக்கப் பணிகளை மேற்கொண்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


தயாரிப்பு ரவிச்சந்திரனின் ஆஸ்கர் ஃபிலிம்ஸ்.

ஆஹா கல்யாணம் வெளிநாடுகளில் வசூல் நிலவரம்!


ஆஹா கல்யாணம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் முதல் தென்னிந்திய தயாரிப்பு. ஒரே நாளில் தமிழ் தெலுங்கில் வெளியானது.


இரண்டு மொழிகளிலும் படம் ப்ளாப். எதிர்பார்த்த கலெக்சன் கிடைக்காதது மட்டுமின்றி எதிர்பார்க்காத தோல்வியும் அடைந்துள்ளது படம்.


வெளிநாடுகளிலும் நிலைமை சொல்லும்படி இல்லை.


யுஎஸ்ஏ யில் இப்படம் முதல் மூன்று தினங்களில் எட்டு திரையிடல்களில் 2.21 லட்சங்களை வசூலித்துள்ளது. தழிழ் பரவாயில்லை.


இதன் தெலுங்குப் பதிப்பு இங்கு 2 திரையிடல்களில் 86,000 ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.


கனடாவில் ஆஹா கல்யாணம் முதல் மூன்று தினங்களில் ஒரு திரையிடலில் 22,800 ரூபாயை வசூலித்துள்ளது.


யுகே மற்றும் அயர்லாந்தில் ஐந்து திரையிடல்களில் 90,000 ரூபாய். நியூசிலாந்தில் ஒரு திரையிடலில் 16,100 ரூபா‌ய்.


யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்பதால் வழக்கமாக தமிழ்ப் படங்கள் வெளியாகாத நாடுகளிலும் ஆஹா கல்யாணம் வெளியானது. ஆனால் வரவேற்புதான் சரியில்லை.

போச்சுடா... விமலும் இப்போ பாடகர்!

கமல், சிம்பு, ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா, கார்த்தி, சிவ கார்த்திகேயன்.... என்ற நீண்ட வரிசையில் இப்போது விமலும். இந்த நல்ல (அல்லது கெட்ட) காரியத்தை செய்தவர் டி.இமான்.


இப்போதெல்லாம் நடிகர்களை பாட வைப்பது அவர்களின் குரலுக்காக கிடையாது. சும்மா ஒரு பாடலை பதிவு செய்தால் மீடியா திரும்பிப் பார்க்காது. இதுவே ஒரு நடிகர் அல்லது நடிகை பாடினால் நாலு காலத்துக்கு செய்தி போட்டு நாறடித்து...


ஸாரி விளம்பரப்படுத்துவார்கள். தவிர இப்போது வருகிற டாஸ்மாக் கானா பாடலுக்கோ, ஈவ்டீஸிங் பாடலுக்கோ குரல் முக்கியமில்லை.


வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவ கார்த்திகேயனை பாடகராக்கிய டி.இமானுக்கு விமலின் மீது ஒரு கண் போலிருக்கிறது. ஒரு ஊர்ல ரெண்டு ராஜாவில் அதனை தீர்த்துக் கொண்டார்.


கண்ணன் இயக்கத்தில் விமல், ப்ரியா ஆனந்த் நடித்து வரும் இந்தப் படத்துக்கு டி.இமான்தான் இசை. அதில் வரும் ஒரு பாடலை விமலிடம் தந்து பாட வைத்துள்ளார். சும்மா சொல்லக் கூடாது சூப்பராகவே பாடியிருக்கிறார் என்கிறார்கள் உடனிருந்தவர்கள்.


குளோபல் இன்போடெய்ன்மெண்ட் மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரிக்கிறார். 

ஹன்சிகா கடந்த காலம் - பிரேக்கப்பை அறிவித்த சிம்பு !


சிம்பு, ஹன்சிகா காதலிக்கிறார்களா இல்லை கா விட்டு பிரிந்துவிட்டனரா?


 இரண்டு வாரமாக அல்லாடிக் கொண்டிருந்தவர்களை தனது அறிவிப்பு மூலம் ஆஃப் செய்துள்ளார் சிம்பு.


வேட்டைமன்னன், வாலு படங்களில் நடித்த போது சிம்பு - ஹன்சிகாவிடையே காதல் மலர்ந்தது.


 இருவரும் அதனை ட்விட்டரில் உறுதி செய்தனர்.


சிம்பு, ஹன்சிகா பற்றி அறிந்தவர்கள் இந்த ட்விட்டர் காதல் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும் என ஆருடம் கூறினர்.

நடிகையை மெய் மறந்து ரசித்த - வெங்கட்பிரபு!

இயக்குனர் வெங்கட்பிரபு தனது சகாக்களான ஜெய், வைபவ், சிவா, தம்பி பிரேம்ஜி உள்ளிட்ட நடிகர்களுடன் எந்த விழாக்களுக்கு வந்தாலும், விழா களை கட்டுமாம் . அந்த அளவுக்கு அங்கு வந்திருப்பவர்களைப்பற்றி ஏதாவது சொல்லி கலாய்த்துக்கொண்டேயிருப்பார்கலாம்.


அப்படிப்பட்ட வெங்கட்பிரபு, சமீபத்தில் ஒரு சினிமா விழாவுக்கு வந்திருக்கிறார் , அப்படத்தின் நாயகியான ரம்யா நம்பீசனின் பெயரை மேடையில் பேசுபவர்கள் குறிப்பிட்டாலே கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


இதனால் எதிரே இருக்கும் ரசிகர்களை விட, மேடையில் தனக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பார்கள் போலிருக்கே என்று பெருமையாக அமர்ந்திருந்தார் ரம்யா நம்பீசன். ஆனால், அதைப்பார்த்து அவர்கள் ரம்யாவை கலாய்க்கிறார்கள் என்றுதான் மற்றவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.


ஆனால், வெங்கட்பிரபு பேசுகையில், ரம்யாவை குறிப்பிட்டு, நான் சாதாரணமாக எல்லா நடிகைகளையம் ரசிக்க மாட்டேன். ஆனால், ரம்யாநம்பீசனின் பியூட்டியும், பர்பாமென்சும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த குள்ளநரிக்கூட்டம் படம் பார்த்ததில் இருந்தே நான் அவரது ரசிகனாகி விட்டேன்.


இப்போதும் அவர் நடித்த படங்களென்றால அவருக்காகவே அந்த படங்களை ஆர்வமாக பார்த்து ரசித்து வருகிறேன் என்று பேசினார்.


இதை கேட்டுக்கொண்டிருந்த ரம்யா நம்பீசன், ஒரு பிரபல டைரக்டரே தனது பர்பாமென்ஸ் பற்றிமேடையில் பெருமையாக சொன்னதோடு, அவரை தனது ரசிகர் என்றும் சொன்னதால், சொல்ல முடியாத சந்தோசத்தில் திளைத்துப்போயிருந்தார்

யுவன் மதம் மாறியது குறித்து கேட்காதீங்க! - இளையராஜா!

இயக்குனர் மகேந்திரன் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் . இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கை கோர்த்து களமிறங்குகிறார் இயக்குனர் மகேந்திரன். நடிகர் நடிகையர் தேர்வு மட்டும் இன்னும் முடியவில்லை. படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.


இதனிடையே படத்திற்கான பிரஸ்மீட் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது. இந்த பிரஸ்மீட்டில் இளையராஜாவும், மகேந்திரனும் கலந்து கொண்டனர். ஆனால் பிரஸ்மீட்டை ஏற்பாடு செய்த பி.ஆர்.ஓ., முகத்தில் ஒரே டென்ஷன் காணப்பட்டிருக்கிறது.


காரணம், இரண்டு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கிடையாது. சில வாரங்களுககு முன் இஸ்லாமியராக மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா பற்றி பத்திரிகையாளர்கள் அவரின் தந்தை இளையராஜாவிடம் ஏடாகூடமாக எதுவும் கேட்டுவிடக் கூடாது என்று தான்.


 இது குறித்து முன்னதாகவே சுதாரித்துக் கொண்ட பி.ஆர்.ஓ., பிரஸ்மீட்டில் கேள்வி கேட்கும் வழக்கமுடைய முக்கிய பத்திரிகையாளர்களை அழைத்து மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம்.


அவருடைய இந்த பரிதாப நிலைமையை உணந்த பத்திரிகையாளர்கள் இளையராஜாவிடம் யுவன் பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லையாம். இதன்பிறகே சம்மந்தப்பட்ட அந்த பி.ஆர்.ஓ., நிம்மதி பெருமூச்சிவிட்டிருக்கிறார்.

அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்களின் இயக்குநர்கள்!

'ஆரம்பம்' , 'வீர்ம்' படங்களின் ஹிட் அலைவரிசை தொடரவேண்டும் என்பதே அஜித்தின் ஆசை. அதற்காகவே பார்த்துப் பார்த்துப் படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார் அஜித்.


கௌதம் மேனன் இயக்கும் அஜித் படம் மார்ச் மூன்றாம் வாரத்தில் தொடங்குகிறது.


அதற்கடுத்து அஜித் யார் படத்தில் நடிப்பார் என்பதுதான் கேள்வியாக இருந்தது.


கௌதம் படத்தை முடித்த பிறகு, அஜித் தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க இருக்கிறார்.


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 56வது படம்,


விஷ்ணுவர்தன்  இயக்கத்தில் 57வது படம்,


சிவா இயக்கத்தில் 58வது படம் என அஜித் நடிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.


ரஜினி நடிப்பதாக இருந்த கே.வி.ஆனந்த் கதையில் அஜித் நடிக்கப் போவதால், அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.


விஷ்ணுவர்தன் இயக்கும் படம் 'பில்லா' அளவுக்கு மாஸ் படமாக இருக்குமாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் - முழு விளக்கமளித்தார்..இன்று...?

துப்பாக்கியைத் தொடர்ந்து விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டாவில் தொடங்கி சென்னை, ராஜமுந்திரி என்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


ஆரம்பத்தில் விஜய், வங்காள மொழி வில்லன் நடிகர் டோட்டா ராய் செளத்ரி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்த ஏ.ஆர்.முருகதாஸ், இப்போது விஜய்-சமந்தா சம்பநதப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறார்.


இதற்கிடையே முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியபோது அப்படம் பற்றி மீடியாக்களில் பேட்டி கொடுத்த டோட்டா ராய் செளத்ரி அதில் தனது வில்லன் கதாபாத்திரம் பற்றி சொன்னவர், விஜய் இரண்டு வேடம் என்பதையும், தன்னை ஜெயிலுக்குள் தள்ளும் அவரை பழிவாங்க தான் விஸ்வரூபம் எடுப்பது போன்றும் படத்தின் சில முக்கியத்துவம் வாய்ந்த ட்ராக்கை அவுட் பண்ணினார்.


இதனால் அதிர்ச்சியடைந்த முருகதாஸ், கதையின் மையத்தை அவர் மீடியாக்களில் உளறி விட்டதால், அவசரகதியில் கதையில் திருத்தம் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.


ஆனால், இப்போது அதை மறுத்துள்ளார் முருகதாஸ். என் படத்தின் கதையை அத்தனை எளிதில் எல்லோரிடமும் நான் சொல்லி விடுவதில்லை. மேலும், இந்த படத்தைப்பொறுத்தவரை டோட்டா ராய் முக்கிய வில்லன் இல்லை.


அவர் ஒரு சிறிய வில்லன்தான். அதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே விளக்கினேன். மற்றபடி படத்தின் முழுக்கதை அவருக்கு சொல்லவே இல்லை. அதனால், அவர் என் படத்தின் கதையை அவுட் பண்ணி விட்டார் எனவும், அதற்காக நான் கதையில் திருத்தம் செய்து வருவது போலவும் வெளியாகும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என்று தற்போது மீடியாக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார் முருகதாஸ்.

கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்துவது எப்படி?

கோபமாக இருக்கும் மனைவியை சமாளிப்பது சற்றே கடினமான காரியம் தான். மனைவியை சமாளிப்பது தவிர மற்ற எல்லா துறைகளிலும் ஆண்கள் முன்னணயில் உள்ளனர் என்பதும் உண்மை!

ஆமாம் கணவன்மார்களே! நாங்கள் குறை சொல்லவில்லை, உண்மையை சொல்கிறோம். உங்களில் சில பேர் மட்டுமே உங்களுடைய தந்தை, அம்மாவை சமாளிப்பதை கவனித்திருப்பீர்கள்.

இந்த விஷயத்தை சமாளிக்கும் குறிப்புகளை சொல்லத் தொடங்குவதற்கு முன்னர், ´தவறு´ செய்வது மனைவிகள் மட்டுமல்ல என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். கோபமாக இருக்கும் மனைவினை சமாளிக்க முடியவில்லையெனில், அதற்கு சம அளவு காரணமாக நீங்களும் இருப்பீர்கள்.

கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க விரும்பும் நீங்கள், அவள் உங்களுடைய குடும்பத்தை நடத்துவதற்கு எவ்வளவு முயற்சிகள் எடுக்கிறாள் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அவளுக்கும் சொந்தமான வாழ்க்கை உள்ளது. எனவே, நாம் உண்மையில் உட்கார்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது தான். கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தும் சில வழிமுறைகளை இங்கே காணலாம்.

உண்மையில் அவள் மன அழுத்தத்துடன் இருக்கிறாள், அவளுக்கு உங்களுடைய அன்பு தேவைப்படுகிறது. அவளை முத்தமிடுங்கள், அவளை எந்த அளவிற்கு விரும்புகிறீர்களோ அந்த அளவிற்கு முத்தமிடுங்கள். கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த இதைவிட சிறந்த டிப்ஸ் எதுவும் இல்லை.

பெரும்பாலான பெண்கள்,தங்களுடைய கணவன்மார்கள் தங்களுடைய பிரச்னைகளை புரிந்து கொள்வதில்லை என்று நினைக்கிறார்கள். ஆண்களுடைய ஆண்மை குணம், பெண்கள் பேசும் போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு விடுகிறது. மாறாக, அவளை ஓய்வெடுக்கச் செய்யுங்கள் மற்றும் அவளுடைய பிரச்னைகளை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று புரிய வையுங்கள்.

அவள் சமைக்கிறாள். மேலும்,நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். எனவே, அவளை சமாதானப்படுத்த வேண்டிய வேலை உங்களுடையது தான். அவளுக்கு துணிகளை துவைக்க நீங்கள் உதவி செய்யுங்கள் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இவ்வாறு செய்தால் அவள் உண்மையிலேய சமாதானமடைவாள்.

நீங்கள் செய்த விஷயங்களை அவள் கவனிக்க மாட்டாள் மற்றும் மேலும் மேலும் ஏதாவது செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டிருப்பாள். இந்த வேலைகளை செய்த குறிப்புகளை படுக்கை, சமையலறை மற்றும் டைனிங் டேபிளில் விட்டுச் செல்லுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை அவளுக்கு சொல்லுங்கள். இதை அவள் புரிந்து கொள்வாள் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.

கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த உங்களுக்கு உள்ள மற்றொரு சிறந்த வழி நன்றி சொல்வது! அவள் செய்த விஷயங்கள் பற்றி பேசத் தொடங்குங்கள். ஆவற்றிற்காக நன்றி தெரிவியுங்கள். இப்படி செய்தால் உங்களுக்கு சுவை மிக்க டின்னர் கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய நாட்களின் ஆண்களுக்கு பெண்களும் சமம் என்பதை நாம் அறிவோம். உங்கள் மனைவி நன்கு படித்தவராகவும் மற்றும் வேலை செய்ய விரும்புபவராகவும் இருக்கலாம். ஆனால், அவளுக்கு பிடித்த வேலையை அவளையே தேர்ந்தெடுக்க செய்யுங்கள். உங்களுடைய பண சுமையை குறைப்பதற்காக என்றில்லாமல், அவளுடைய திருப்திக்காக அவளை வேலை செய்ய விடுங்கள்.

கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த இதுவும் ஒரு சிறந்த வழியே! உங்கள் மாமியாரை வீட்டுக்கு அழைத்து,அவரை உங்களுடைய அம்மாவிற்கு சமமாக மதித்து நடந்து கொள்ளுங்கள். இந்த செயலின் பலன் சிறப்பாக இருக்கும்.

ஆண்கள் மனரீதியாக உறுதியாக இருக்க வேண்டும். கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தும் வழிகளை தேடுவதை விட்டு விட்டு,அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ள முன்னணியில் இருந்து தயாராக இருங்கள்! முன்னணிக்கு சென்று உங்கள் குடும்பத்தின் அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்ளுங்கள்.

எதுவுமே நடக்கவில்லையென்றால் இதை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை மற்றும் அவள் உங்களை சுரண்டுகிறாள் என்றும் நீங்கள் நினைக்கும் போது இதை செய்யுங்கள். அவளுடைய நடவடிக்கைகளை நீங்கள் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்று அவளிடம் பொறுமையாகவும், உறுதியாகவும் சொல்லுங்கள். இது அவளை சமாதானப்படுத்திவிடும்.

அழகான புருவம் வேண்டுமா?

புருவங்கள் தான் பெண்களின் கண்களிலேயே அழகை மிகைப்படுத்தி காட்டும் பகுதியாக உள்ளன. இவை முகத்தின் அழகை வெளிப்படுத்தும் பாகமாகவும் உள்ளன.

விளையாட்டிற்கு கூட நமது அழகை நாம் பாழ்படுத்த விரும்புவதில்லை. டிரிம் செய்யாத புருவமும் இப்படித்தான், தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இருந்து நமது அழகை பாழாக்கும்.

நமது உடல் அமைப்பிற்கேற்ப நமது புருவங்களும் இருப்பது அவசியம். இது நமது அழகையும் அமைப்பையும் மிகைப்படுத்தும். இதை பெறுவதற்கு ஏதேனும் இரசாயன மருந்துகளையும் சிகிச்சையும் நீங்கள் பெற விரும்பினால் அது தவறு.

இதை எல்லாம் முயற்சி செய்து நம்மை நாமே பாழாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. எனவே, இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் கொண்டு சரி செய்ய முடியும்.

இதை வைத்து நாம் அடர்த்தியான புருவங்களை பெற முடியும். கொஞ்சம் கூட இரசாயனம் இல்லாமல் சிறப்பான முறையில் மற்றும் பாதுகாப்பான வழியில் பெறும் வழியாகும். கீழ் வரும் பகுதியில் உள்ள இயற்கையான முறைகளை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் புருவத்தை பெற முடியும்.

குறைந்த செலவில் மிகுந்த பலன் தரக்கூடியது ஆமணக்கு எண்ணெயாகும். தடியான புருவங்களை பெற இதை பலரும் பின்பற்றி வருகின்றனர். ஆமணக்கு எண்ணையை உங்களுடைய புருவங்களில் தொடர்ந்து தடவி வந்தால் புருவங்களின் அடர்த்தி அதிகரிக்கும். இந்த எண்ணெய் நிச்சயம் உங்களுக்கு சிறந்த பலனை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாசலீன் பயன்படுத்துவது உலர்ந்த புருவங்களை ஈரப்பதமூட்டி அதில் உள்ள வெடிப்புகளை சரி செய்கின்றது. இதனால் அங்குள்ள தசைகள் ஊட்டம் பெறுகின்றன. இதை நாம் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவ வேண்டும். இதனால் புருவம் நீளமாகவும், உறுதியாகவும் காணப்படும். அது மட்டுமில்லாமல் புருவத்தையும் நன்கு பெருகி வளரச் செய்யும்.

தேங்காய் எண்ணெய் நிச்சயம் முடி வளர்ப்பிற்கு உதவும் என்பது நமக்கு மிகவும் தெரிந்த உண்மைகளில் ஒன்று. இதுவும் புருவங்களை வளர்ப்பதற்கு ஏற்ற சிறந்த திரவமாக உள்ளது. இந்த எண்ணைய் முடியை விரைவாக வளரச் செய்வது மட்டுமல்லாமல் புருவத்திற்கு நல்ல வடிவத்தையும் தருகின்றது.

சினிமாவுக்கு குட்பை - நடிகை அஞ்சலி!

சென்னையில் இருந்து தமிழ்ப் படங்களில் நடித்தபோது தனது சித்தியுடன் ஏற்பட்ட தகராறினால் தனது சொந்த ஏரியாவான ஆந்திராவுக்கு ஓடினார் அஞ்சலி.

அங்கே பாதுகாப்பாக இருந்து படங்களில் நடிக்கலாம் என்று கணக்கு போட்டவர் தமிழ்ப் படங்களுக்கு குட்பை சொன்னார். பல படங்கள் அவரைத் தேடி வந்தும் கூட ‘மசாலா’ என்ற ஒரே ஒரே தெலுங்கு படத்தில் தான் அவர் நடித்தார். கடந்த 2013-ஆம் வருடம் ரிலீசான அந்தப்படம் தான் அவருக்கு கடைசிப்படம். அதற்குப் பிறகு தெலுங்கிலும், தமிழிலும் எந்த ஒரு புதிய படத்திலும் அவர் நடிக்கவில்லை.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ஷகிலாவின் சுயசரிதையை மையமாக வைத்து வெளிவர இருக்கும் படத்தில் அஞ்சலி நடிக்கப் போகிறார் என்றும், அதில் அஞ்சலிதான் ஷகிலாவாக நடிக்கப் போகிறார் என்று செய்தி வெளியாகின.

ஆனால் தற்போது அஞ்சலி அந்தப்படத்தில் நடிக்கவில்லை என்றும், கூடவே இந்த நிமிடம் வரை அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை இல்லை என்றும் சீக்ரெட் தகவல் கசிந்திருக்கிறது.

சென்னையிலும் இல்லை, ஆந்திராவில் எந்த ஒரு பட விழாவிலும் அஞ்சலியை பார்க்க முடிவதில்லை, அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர் வைத்திருக்கும் இரண்டு மொபைல் எண்களை தொடர்பு கொண்டால் இரண்டிலுமே எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.

அப்படியானால் அஞ்சலி எங்கே போனார்? யாருடைய பிடியில் இருக்கிறார்? என்பது மர்மமாகவே உள்ளது.

இதனால் அஞ்சலியை தங்கள் படங்களில் நடிக்க வைப்பதற்காக யோசிக்கும் டைரக்டர்கள் அவரை யார் மூலம் எப்படி தொடர்பு கொள்வது? என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் அஞ்சலியோ சினிமாவுக்கு நிரந்தரமாக முழுக்கு போட்டு விட்டு ஒரு ‘பெரிய புள்ளி’யின் அன்புப் பிடியில் அடைக்கலமாகி விட்டார் என்றும், இனிமேல் அஞ்சலி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் கூடுதல் தகவல்களை அவரது நெருங்கிய வட்டாரங்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ அஞ்சலி அதே பெரிய புள்ளியுடன் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதெல்லாம் உண்மையா? பொய்யா? என்ன என்பதை அஞ்சலியே நேரில் வந்து சொன்னால் தான் உண்டு. சொல்லுங்க எங்க இருக்கீங்க அஞ்சலி?