Friday, 31 January 2014

முதுமையில் தூக்கம்....!

ஒவ்வொரு மனிதனுக்கும்  முதுமை என்பது ஒருநாள் வரக்கூடிய பருவமாகும். இந்த பருவம்தான் மிகுந்த அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லும் பருவமாகும்.  நம் முன்னோர்கள் முதுமைப்பருவத்தை மீண்டும் ஒரு குழந்தைப் பருவம் என்றனர்.

பண்பாடு நிறைந்த நம் பாரத தேசத்தில் மக்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர்.  அனுபவமிக்க முதியோர் சொல்லும் வழி காட்டுதலில் பிள்ளைகளை வழி நடத்தி வந்தனர்.  இதனால் இவர்கள் ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து குடும்பத்தை ஆலமரமாகத் தழைக்கச் செய்தனர்.
இந்த முதுமைப் பருவத்தில் உடல் பலவகையான பாதிப்புகளை சந்திக்க நேர்வது இயல்பான ஒன்று தான்.  உடலின் சத்துக்கள் குறைதல், எலும்புகளின் வலிமை குன்றல், உறுப்புகளின் செயல்பாடு குறைதல் போன்றவை இக்காலத்தில் ஏற்படும்.  முதியவர்கள் பலர் பல நோய்களில் அவதியுற்றாலும், முக்கால் வாசிப்பேர் தூக்கமின்மையால் அவதியுறுகின்றனர்.  முதுமைப் பருவத்தில் தூக்கமின்மை உடலின் ஆரோக்கியத் திற்குக் கேடாகும்.

முதுமைப் பருவம் என்பது இயற்கை கொடுக்கும் ஓய்வுப் பருவம்.  இளைய தலை முறையினரை  நல்வழிப்படுத்தும் பருவமும் இதுவே.

முதுமையில் அதிக மன உளைச்சல், மனதிற்கு வேதனை தரும் சம்பவங்கள், ஓயாத சிந்தனை இவற்றாலும், அல்லது சர்க்கரை நோய் இரத்த அழுத்த நோய், சிறுநீரக நோய் இவற்றாலும் தூக்கமின்மை ஏற்படுகிறது.

நரம்பு மண்டலத்தில் சரிவர இரத்த ஓட்டமின்மையாலும், இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பதாலும் அதாவது கல்லீரல்  பாதிக்கப் பட்டு அதனால் பித்தப்பை அலர்ஜி உண்டாகி அதிக பித்த நீரைச் சுரக்கிறது. இதனாலும் இரத்தத்தில் பித்த நீர் அதிகரிக்கிறது.

இதனால் தூக்கமின்மை உண்டாகிறது.  பொதுவாக தூக்கமின்மைக்கு பித்தம் அதிகரிப்பு தான் முக்கிய காரணமாகும்.  பித்தத்தை அதிகரிக்கக் கூடிய உணவுப் பொருட்களை உண்பதாலும், அதனால் வயிற்றில் செரியாமை ஏற்பட்டு, வாயு அதிகரித்து, நரம்பு மண்டலத்தை பாதித்து உடலில் நரம்புகள் இறுக்கம் உண்டாகி தசை நார்கள் இறுகிவிடுகின்றன.  இதனால் தூக்கமின்மை உண்டாகிறது.

வயதுக்கு மீறி உடலுக்கு  கடின வேலை கொடுப்பவர்கள், ஓய்வில்லா வேலை இவையாலும் உடல் அசதியுற்று தூக்கமின்மை உண்டாகும்.

அதுபோல் மலச்சிக்கல் இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும்.  மலச்சிக்கலால் குடலில் உள்ள குன்ம வாயு சீற்றம் கொண்டு சிரசைத் தாக்கும் .  இதனால் மூளை வறட்சி உண்டாகி நரம்பு மண்டலத்தை உலரச் செய்து, மனதிற்கு ஒருவித தாக்கத்தை உண்டுபண்ணி தூக்க மின்மையை ஏற்படுத்துகிறது.

முதுமையில் உண்டாகும் அதீத பாசம், ஏக்கம், இயலாமை, பொருளாதார தட்டுப்பாடு, குழந்தைகளால் போதிய கவனிப்பின்மை, தனிமை, போதிய தங்கும் வசதியின்மை, அடுத்தவரின் உதவியை எதிர்பார்ப்பது போன்ற காரணங்களாலும் தூக்கமின்மை உண்டாகும்.

சிலருக்கு நோய்களின் தாக்குதலுக்கு மருந்து, மாத்திரை எடுப்பதால் அவை தூக்கமின்மையை உண்டாக்கும்.  இளம் வயதில் அதிக மது, போதை வஸ்து, புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு முதுமையில் தூக்கமின்மை ஏற்படும்.

மனதளவில் தான் வயது முதிர்ந்தவர் என்ற எண்ணத்தில் எந்த வித வேலையையும் செய்யாமல், உடலுக்கு அசைவு கொடுக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் தூக்க மின்மை உண்டாகும்.

தூக்கமின்மையைப் போக்க

பழங்காலத்தில் அனைவருமே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர்.  அந்த குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் சொல்படிதான் அந்த குடும்பத்து உறுப்பினர்கள் நடந்துகொள்வார்கள்.  முதியவர்கள்  மாலைநேரத்தில் வீட்டுத் திண்ணையிலோ, கோவில்களிலோ அல்லது எதாவது ஒரு பொது இடத்திலோ அமர்ந்து ஒருவருக்கொருவர் கலந்து பேசி மனக் குறைகளையும் நிறைகளையும் பகிர்ந்து கொள்வார்கள்.  இதனால் அவர்கள் தங்களுக்கு உண்டான மனக்குறைகள் தீர்ந்து நல்ல தூக்கத்தை பெற்றார்கள்.

மனம் அமைதி பெற்றால் உறக்கம் தானாக நம்மைத் தழுவிவிடும்.  நம் முன்னோர்கள் அயராது உழைத்து உடலுக்கும் பயிற்சி  கொடுத்து, மாலையில் மற்றவர்களுடன் கலந்து பேசி, மனதிற்கும் அமைதி கொடுத்து வாழ்ந்ததால் சஞ்சலம், சலனம் இல்லா ஆரோக்கியமான வாழ்வைப்  பெற்றனர்.

ஆனால் தற்போது முதுமையிலும், வேலைப்பளு, மன அமைதியின்மை எப்போதும் போராட்டம், பொறுமையின்மையும் ஆட் கொண்டுவிட்டது.  ஒருவருக்கொருவர் மனத் துயரங்களை பகிர்வது என்பது இல்லாமல் போய்விட்டது. அதோடு உணவு முறை, இரசாயனம் கலந்த உணவு போன்றவற்றால் உடல் சீர்கேடு அடைந்து முதுமையில் தூக்கமின்மை ஏற்படுகிறது.

நல்ல தூக்கத்திற்கு முதுமையில் நடைப்பயிற்சி அவசியம்.  மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

தூக்க மாத்திரை உண்பவர்கள் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள்.  இதனால் இவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகிவிடுகிறது.  நாளடைவில் தூக்கமாத்திரையை 1க்கு 2 என்று அதிகரித்தாலும் தூக்கம் என்பது வெறும் கனவாகிவிடுகிறது.  தூக்கமாத்திரை உட்கொள்ளும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

நல்ல தூக்கம் பெற

· நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், இரவு உணவில் காரத்தைக் குறைத்து சாப்பிட வேண்டும்.

· நார்ச்சத்து மிகுந்த பழங்கள், எளிதில் சீரணமாகும்.  மென்மையான உணவுகள் போன்றவற்றை உண்ண வேண்டும்.

· இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் சூடான பால் அருந்தினால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

· படுக்கையறை மிகுந்த காற்றோட்டமானதாக இருக்க வேண்டும்.  மென்மையான இசையைக் கேட்டுக்கொண்டே தூங்கலாம்.

· தியானம் செய்ய வேண்டும்.  இதனால் சிதைந்து கிடக்கும் எண்ணங்கள் ஒருநிலைப்பட்டு மன அமைதியடைந்து, எதையும் தாங்கும் இதயமாக தியானம் உங்களை மாற்றும்.  இந்நிலை அடைந்தால், தூக்கம் தானாகவே உங்களைத் தேடி வரும்.  எனவே தியானம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.

· தாமரை இலையின் மேல் தண்ணீர் போல் பற்றற்று வாழ் என்றார் ராமகிருஷ்ணர்.  அவ்வாறு வாழ்ந்தால் மனம் அமைதியடையும்.  மனம் அமைதி அடைந்தால் நல்ல தூக்கம் தானாகவே வரும்.

· மனம் விட்டு பேசுங்கள், மகிழ்ச்சியான எண்ணங்களை அசைபோடுங்கள், முதுமைப் பருவம் போராட்டமாக இல்லாமல் போற்றுதலாகத் தோன்றும்.

‘ஆனந்த மழை’யில் கலக்கப்போகும் மு.களஞ்சியம் !

ஜி.கே. அறிவுச்சோலை திரைப்பட நிறுவனமும், அப்போலைன் ரியல்டர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஆனந்த மழை’. சுப தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார். இவர் சரண்ராஜ் நடித்த கரிசல்மண் படத்தை இயக்கியவர். ஸ்டீபன் ராயல் இசையமைக்கிறார். கணேஷ் ராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இதில் ஜெய் ஆனந்த், சுப தமிழ்வாணன், சிவா ஆகிய மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மு.களஞ்சியம் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார். இரண்டு கெட்டப்புகளுக்கும் கொஞ்சம் ஒற்றுமையில்லாமல் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். புதுமுக கதாநாயகிகளாக விகீதா, ஸ்ரீஜா நடிக்கிறார்கள். இவர்களுடன் வடிவுக்கரசி, செந்தில், சிங்கமுத்து, லியாகத் அலிகான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும், சாதிப்பதற்காக எப்பவுமே சந்தோஷமாக இருக்கும் கவிஞரின் அறை தோழர்களாக, வாழ்க்கையில் விரக்தியடைந்த இரண்டு இளைஞர்கள் வந்து சேர்கிறார்கள். கவிஞரைச் சந்தித்த பின் புத்துணர்ச்சி பெற்று, புரட்சிகரமான சிந்தனைகளுடன் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். அப்படித் தொடங்கும் புதிய வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் ‘ஆனந்த மழை’ படத்தின் கதை.

தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டப்படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது. 

ராஜூசுந்தரத்தை மிஞ்சப்போகும் கார்த்திகா...?



செலக்டீவ்வாக படங்களை பண்ணக்கூடியவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை என்ற சில படங்களை மட்டுமே இயக்கியவர், பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இப்போது புறம்போக்கு என்ற படத்தை இயக்குகிறார். ஆர்யா, ஷாம், விஜயசேதுபதி என மூன்று நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் கோ பட நாயகி கார்த்திகா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், கோ படம் என்னை தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நல்லவிதமான அடையாளம் காட்டியது. முதல் படமே மெகா ஹிட்டானதோடு, பாரதிராஜாவின் அன்னக்கொடியில் மிகுந்த நம்பிக்கை வைத்து நடித்தேன். ஆனால், படம் காலைவாரி விட்டது. அதையடுத்து, டீல் என்றொரு படத்தில் நடித்திருக்கிறேன்.

இந்த நிலையில், கண்ட படத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, தரமான கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருந்து வந்த நேரம்தான், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. வித்தியாசமான இயக்குனர் என்பதால், நம்பிக்கையுடன் கதை கேட்டேன். நான் எதிர்பார்த்ததை விடவும் அற்புதமான கதையாக சொன்னார். அதிலும் என் கேரக்டர் ரொம்ப வித்தியாசமானது. இதுவரை மென்மையான பெண்ணாக நடித்து வந்த நான், இந்த படத்தில் கரடுமுரடான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

வீடியோ கேம் மூலம் பிரபலமான வீராங்கனை லாரா க்ராப்ட் போன்ற கெட்டப்பில் நடிக்கும் எனக்கு ஆக்சன் காட்சிகளும் உள்ளது. குறிப்பாக, ஒரு பாடலில் டேப் டான்ஸ் ஆடியுள்ளேன். இதற்கு முன்பு தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடன மாஸ்டர் ராஜூசுந்தரம்தான் ஒரு பாடலில் அந்த நடனத்தை ஆடியிருந்தார். அதன்பிறகு தமிழில் நான்தான் ஆடுகிறேன்.

ஆக, டேப் டான்ஸ் ஆடிய முதல் தமிழ் நடிகை என்ற பெருமை எனக்கு இந்த படம் மூலம் கிடைக்கப்போகிறது என்கிறார் கார்த்திகா.

நவரச நாயகனுக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகிறது...!

பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் சரிந்த பிறகு, தெலுங்கு, இந்தியில் இருந்து சில மெகா படங்களுக்கு வில்லன்களை கொண்டு வந்தனர். ஆனபோதும், அவர்களால் தமிழில் சைன் பண்ண முடியவில்லை. அதனால் இப்போது அப்பா வேடங்களுக்கு மாஜி ஹீரோக்களை அழைத்து வருவது போன்று, வில்லனுக்கும் மாஜி ஹீரோக்களை புது எனர்ஜி கொடுத்து கொண்டு வரலாமே என்று உதித்த யோசனையின் பயனாகத்தான், தனுஷ் நடிக்கும் அனேகன் படத்திற்காக நவரச நாயகன் கார்த்திகை வில்லனாக்கியுள்ளார் கே.வி.ஆனந்த்.

அந்த படத்துக்காக தனது கெட்டப்பை மறுபடியும் யூத்புல்லாக மாற்றியிருக்கும் கார்த்திக், பழைய கார்த்திக்கை நினைவுபடுத்தும் வகையில் நடித்துக்கொண்டிருக்கிறார். தனுஷ் முதன்முறையாக நான்கு கெட்டப்புகளில் நடிக்கும் அப்படத்தில், கார்த்திக்கிற்கும், தனுசுக்குமிடையே பலத்த நடிப்பு போட்டியே நடந்து கொண்டிருக்கிறதாம்.

மேலும், ஹீரோவாக நடித்து வந்த காலத்தில், நினைத்த நேரத்துக்கு ஸ்பாட்டுக்கு வருவது, திடீரென்று இதோ வருகிறேன் என்று ஓட்டம் பிடிப்பதுமாக இருந்து வந்த கார்த்திக், இப்போது முற்றிலும் புதியவராக மாறி விட்டாராம். புதுமுக நடிகர்கள் போன்று 9 மணிக்கே ஸ்பாட்டில் அஜராகி விடுபவர், 6 மணிக்கு டைரக்டர் பேக்அப் சொன்ன பிறகுதான் அவுட் போகிறாராம்.

அவரது இந்த மாற்றத்தைக் கேள்விப்பட்டு இப்போது, அஜீத்தைக் கொண்டு கெளதம்மேனன் இயக்கும் படத்திற்கும் கார்த்திக்கை வில்லனாக கமிட் பண்ணியுள்ளார்கள். அதோடு, அனேகன் படத்திற்கு அவர் காட்டும் ஆர்வம், உழைப்பைக் கேள்விப்பட்டவர்கள், அப்படின்னா, இந்த படத்திலும் அஜீத்துக்கும், கார்த்திக்குமிடையே மிகப்பெரிய பலப்பரீடசை நடக்கும் என்று கூறுபவர்கள், இதே பாணியில் போனால், வில்லன் பஞ்சம் தலைவிரித்தாடும் கோலிவுட்டில் அடுத்து முன்னணி வில்லன் நடிகராகி விடுவார் கார்த்திக் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

கல்யாணத்தை விடவும் காதல்ல இவ்வளவு சுவாரஸ்யம் இதுக்குதுங்க…

கல்யாணத்தை விடவும் காதல்ல இவ்வளவு சுவாரஸ்யம் இதுக்குதுங்க…

காதல் பொழுதில் விரும்பும் குறும்பு, கல்யாணத்தில் கிடைப்பதில்லை…’ என சொல்லப்படுவதுண்டு.

கல்யாணம் செய்து கொள்வதற்காகத் தான் பெரும்பாலானவர்கள் காதலிக்கிறார்கள் என்ற போதும், காதல் வாழ்க்கையே கல்யாணத்திற்குப் பிறகும் தொடர்வதில்லை. இதோ, காதலுக்கும், கல்யாணத்திற்உம் இடையே உள்ள சுவாரஸ்யமான வித்தியாசங்கள் சில…..

காதல் சண்டை….

காதல் என்பது கைகோர்த்த படி உலகைச் சுற்றி வரும் உலா…திருமணம் என்பது நடுத் தெரு என்று கூட பாராமல் போடும் சண்டை.

பார்சல் சாப்பாடு….

காதல் என்பது பிடித்த உணவகங்களில் சேர்ந்து சாப்பிடுவது மாதிரி… திருமணம் என்பது பார்சல் வாங்கி வந்து சாப்பிடுவது

சோபா….

காதல் என்பது சோபாவில் அமர்ந்து சொகுசாக படம் பார்ப்பது… திருமணம் என்பது கோபித்துக் கொண்டு அந்த இருவரில் ஒருவர் சோபாவில் படுத்துத் தூங்கத்தான் உதவும்…

குழந்தைகள்….

காதல் பொழுதுகளில் குழந்தைகளைப் பற்றி கனவு காண்பார்கள்…. திருமணத்திற்குப் பிறகோ குழந்தைகளிடமிருந்து தங்களுக்கு சிறிது தனிமை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தவிப்பார்கள்

பசி….

காதல் பசியைக் குறைக்கும்… திருமணம் உடல் எடையைக் குறைக்கும்… (கவலைகளால்…)

டிவி யுத்தம்….

காதலுக்கு டிவி தேவையில்லை… திருமணத்திற்குப் பிறகோ டிவி ரிமோட்டிற்காக உலகப் போரே நடக்கும்….

இளநீர் தத்துவம்….

காதலில் ஒரு இளநீரில் 2 ஸ்ட்ரா… திருமணத்திற்குப் பிறகோ, ‘நீயே குடிச்சுத் தீர்த்துடலாம்னு ஆசைப்படாத…’

அவ்ளோ தாங்க….

மொத்தத்தில், காதலுக்கு கண்ணில்லை….கல்யாணம் கண்களைத் திறந்து வைக்கும் கருவி….

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்...!

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்????

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்???

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில்
குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும்
போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள்,
பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும்
அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்???

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்!!!!!!

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்..!

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.

தேவையான பொருட்கள்:

முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,  பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: 

நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக  நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.  அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம்  வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும்  ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியிடம் ஸ்ருதிஹாசன் போட்ட கண்டிஷன்..?

இனி சென்னைக்கு நோ, ஹைதராபாத் தான் எப்போவும் ஸ்ருதி முடிவு.. எல்லாவற்றையும் எழுதும் ஸ்ருதிஹாசன் தனக்கு நடந்த ஆபரேஷன் பற்றி மூச்சுகூட விடவில்லை ட்விட்டரில்.

இது இப்படி இருக்க, ஸ்ருதி எப்போதும் தெலுங்குக்கும் இந்திக்கும் முதலிடம் கொடுக்கிறார். அவரை தமிழில் நடிக்க கூப்பிட்டதும் தனது கண்டிஷன் ஒன்றையும் ஹரியிடம் வைத்தாராம். அவரும் ஓகே என்றாராம்.

என்னவென்றால், இந்த படத்திற்காக சில நேடிவிட்டி காட்சிகளை நீங்கள் தமிழ்நாட்டில் எடுக்கிற ஊரில் எடுங்கள். ஆனால் கூடுமானவரை நான் நடிக்கிற காட்சிகளை மட்டும் ஆந்திராவில் வைத்துக் கொண்டால் நல்லது என்றாராம்.

மும்பையிலிருந்து தனது குடியிருப்பை ஐதராபாத்துக்கே மாற்றிவிடும் எண்ணத்திலும் இருக்கிறாராம் அவர். திடீரென அவர் சென்னையை வெறுத்ததற்கு என்ன காரணம் யாருக்கும் தெரியவில்லையாம். 

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் வளைந்த ஸ்மார்ட்போன் ரூ.69,999...!

பிப்ரவரி மாதம் இந்தியாவில் எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் வளைந்த ஸ்மார்ட்போன் ரூ.69,999 விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் வளைந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் நிறுவனத்தின் முதல் வளைந்த டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் ஆகும்.

ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் அடிப்படையில் எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் குவாட் கோர் 2.26GHz ஸ்னாப்ட்ராகன் 800 (MSM8974) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. Adreno 330 ஜி.பீ.யூ., மற்றும் ரேம் 2GB கொண்டுள்ளது. இது 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 2.1 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.

இதில் 3,500 mAh பேட்டரி ஆதரிக்கப்படுகிறது, 177 கிராம் எடையும், மற்றும் அதன் அடர்த்தி 8.7mm, மெல்லிய 7.9mm கொண்டுள்ளது. 6 இன்ச் (1280 x 720 பிக்சல்கள்) HD வளைந்த பிளாஸ்டிக் ஓல்இடி டிஸ்ப்ளே, அல்ட்ரா ஒளி, அல்ட்ரா மெல்லிய மற்றும் நெகிழ்வு கொண்ட பிளாஸ்டிக் ஓல்இடி டிஸ்ப்ளே (POLED), வருகிறது.

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

    6 இன்ச் (1280 x 720 பிக்சல்கள்) HD வளைந்த பிளாஸ்டிக் ஓல்இடி டிஸ்ப்ளே,
    Adreno 330 ஜி.பீ.யூ கொண்ட 2.26GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 800 (MSM8974) பிராசசர்,
    LED ஃப்ளாஷ், 30 FPS 1080p வீடியோ பதிவு கொண்ட 13MP மெகாபிக்சல் பின்புற கேமரா,
    2.1MP முன் எதிர்கொள்ளும் கேமரா,
    2GB DDR3 ரேம், 32 ஜிபி உள் நினைவகம்,
    3500 mAh திறன் கொண்ட பேட்டரி,
    177 கிராம் எடை,
    ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன்.

எஸ் பென் கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ டேப்லட்..!

சாம்சங் இறுதியாக விலை விவரங்கள் வெளிப்படுத்தாமல், அதன் கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட் வெளியிடப்பட உள்ளது. கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட், 3 ஜி மற்றும் கேலக்ஸி நோட் 3 நியோ LTE+ டப், LTE மாடல் ஆகிய இரு வகைகளில் கிடைக்கும் என்று சாம்சங் போலந்து, வழியாக உறுதி செய்யப்பட்டது. மேலும், சாம்சங் போலந்தில் சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ பிப்ரவரி மாதம் உலக சந்தையில் கிடைக்கும் என்று தகவல் அளித்துள்ளது மற்றும் கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ண வகைகளில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி நோட் பேப்லட் தொடர் போல மிகவும் சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ எஸ் பென் கொண்டுள்ளது. LTE variant ஒரு Hexa கோர் பிராசசர் (இரண்டு 1.7GHz கார்டெக்ஸ் A15 + நான்கு 1.3GHz குவாட் கோர் கார்டெக்ஸ் A7) மூலம் இயங்குகின்றது, 3G மாடல் 1.6GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) மூலம் இயங்குகின்றது என்பதை தவிர சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ இரண்டுமே ஒரே மாதிரியான innards  உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட் ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குகின்றது.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட் மற்ற குறிப்புகள்:

5.5 இன்ச் HD (720x1280 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ரேம் 2GB, microSD அட்டை வழியாக 64GB வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடிக்கிய சேமிப்பு, மற்றும் 3100mAh பேட்டரி. சாம்சங்  கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட்டில் எல்இடி ஃப்ளாஷ் மற்றும் BSI சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, மேலும் BSI சென்சார் கொண்ட 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. சாதனத்தில் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, ஜிபிஎஸ், GLONASS, NFC, ப்ளூடூத், இன்ஃப்ராரெட் மற்றும் 3 ஜி ஆகியவை அடங்கும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ சாம்சங் ஆப்ஸ், சாம்சங் ChatON, சாம்சங் WatchON, சாம்சங் Link, ஸ்கிரீன் மிரர்ரிங், எஸ் வாய்ஸ், S ஹெல்த், க்ரூப் ப்ளே, ஸ்மார்ட் Scroll, ஸ்மார்ட் பாஸ், ஏர் வியூ, ஸ்டோரி ஆல்பம் மற்றும் S மொழிபெயர்ப்பாளர் ஆகிய அப்ளிக்கேஷன் ஏற்றப்பட்டு வருகிறது. எஸ் பென், ஏர் கமென்ட் மற்றும் எளிதாக கிளிப் அம்சம் கொண்டு வருகிறது, மேலும் மல்டி விண்டோஸ் மற்றும் S நோட் ஆதரிக்கிறது.

மேலும், கேலக்ஸி நோட் 3 நியோ கூகுள் சேர்ச், ஜிமெயில், Google+, கூகுள் மேப்ஸ், ப்ளே புக்ஸ், ப்ளே மூவிஸ், ப்ளே ஸ்டோர், ப்ளே கேம்ஸ், ப்ளே ஹேங்கவுட்ஸ், வாய்ஸ் சேர்ச் மற்றும் YouTube போன்ற கூகுள் அப்ளிக்கேஷன்கள் கொண்டுள்ளது. பேப்லட்டில், பரிமாணங்கள் 148.4x77.4x8.6mm மற்றும் 162.5 கிராம் எடையுடையது.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட் குறிப்புகள்:

    5.5 இன்ச் HD (720x1280 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே,
    ரேம் 2GB,
    microSD அட்டை வழியாக 64GB வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடிக்கிய சேமிப்பு,
    எல்இடி ஃப்ளாஷ் மற்றும் BSI சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
    BSI சென்சார் கொண்ட 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
    எஸ் பென்,
    Wi-Fi,
    ஜிபிஎஸ்,
    GLONASS,
    NFC,
    ப்ளூடூத்,
    இன்ஃப்ராரெட்,
    3 ஜி,
    ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன்,
    162.5 கிராம் எடை,
    3100mAh பேட்டரி.

பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள்

பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள்

* காந்தி இறக்கும்போது ' ஹே ராம் ! ' என்றார் .

* ஜூலியஸ் சீஸர் ' யூ டூ புரூட்டஸ் ? ' என்றார் .

* கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் ) : தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம் சொன்னான் , " நான் இன்னும் இறக்கவில்லை ! "

* தாமஸ் ஆல்வா எடிசன் : " விளக்கை எரியவிடுங்கள் . என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் ! "

* பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் : " இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது ! "

* பாபர் ( மொகலாயப் பேரரசர் ) : தன் மகன் ஹுமாயூனிடம் .... " இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே ! "

* ஜுல்ஃபிகர் அலி புட்டோ ( பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ) : " இறைவா .....நான் ஒரு குற்றமும் செய்யாதவன் ! "

* டயானா : " கடவுளே ! என்ன நடந்தது எனக்கு ? "

* ஜொன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் ) : தீயில் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் சொன்னது . " ஜீஸஸ் ! "

* வால்டேர் : தூக்கு தண்டனைக்கு முன் ' சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிடு ' என்று சொன்ன பாதிரியாரிடம் , " எதிரிகளை உருவாக்கிக்கொள்வதர்கான நேரம் இது அல்ல ! "

* கிளியோபாட்ரா : பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , " ஆஹா... இதோ ... என் முடிவு இங்கே இருக்கிறது ! "

* பீத்தோவன் : " நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது ! "

* ஆன் ( இங்கிலாந்து ராணி ) ; தன் உதவியாளரிடம் , " மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள் ! "

* நெப்போலியன் : " ஃபிரான்ஸ் ... ஆர்மி...ஜோஸஃபின் ! "

* மேரி க்யூரி : " என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள் ! "

* எழுத்தாளர் ஜேன் ஆஸ்டஸ் : ' வேறு எதுவும் வேண்டுமா ' என்று கேட்ட தங்கையிடம் , " இறப்பைத் தவிர எதுவும்

* வின்ஸ்டன் சர்ச்சில் : " எனக்கு எல்லாமே போர் அடிக்குது ! " இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று , ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார் .

* பெருந்தலைவர் காமராஜர் : தன் உதவியாளரிடம் , " வைரவா ! விளக்கை அணைத்துவிடு ! "

டாப்சியும் பேட்மின்டன் வீரரும் டும்..டும்.. டும்.....?

டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போய்க்கும் நடிகை டாப்சிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

டாப்சியும் மத்தியாஸ் போயும் ஐதராபாத்தில் நடந்த இந்தியன் பேட்மின்டன் லீக் போட்டியில்தான் முதன் முதலாக சந்தித்துக் கொண்டனர். அந்த போட்டிக்கு டாப்சி விளம்பர தூதுவராக இருந்தார். மத்தியாஸ் போயின் ஆட்டம் டாப்சியை மிகவும் கவர்ந்தது. இருவரும் நண்பர்களாயினர். அதன் பிறகு இருவரும் ஒன்றாக சுற்றினர்.

விருந்துகளிலும் ஜோடியாக பங்கேற்றார்கள். அப்போது இதுபற்றி கேட்ட போது நண்பர்களாக பழகுகிறோம் என்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக இவர்களிள் நெருக்கம் வலுவாகியுள்ளதாக பட உலகினர் கிசுகிசுக்கிறார்கள்.

மத்தியாஸ் போயிவுடனான தொடர்பு குறித்து டாப்சியிடம் கேட்ட போது என் சொந்த வாழ்க்கை எந்த கேள்விக்கும் பதில் அளிக்க விரும்பவில்லை என்று சொல்லி முற்றுப் புள்ளி வைத்தார்.

 ஆனால் மத்தியாஸ் அவரது டுவிட்டரில் டாப்சியுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு என்னுடைய அழகான தோழி என்று குறிப்பிட்டு உள்ளார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் மறைமுகமாக நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

"அனாமிகாவில்" அடம்பிடிக்கும் நயன்தாரா!

இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஓடியப படம் கஹானி. இப்படத்தை தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள் இந்தியில் வித்யா பாலன் கர்ப்பிணியாக நடித்தார். ஆனால் ரீமேக்கில் நடிக்கும் நயன்தாரா கர்ப்பமாக நடிக்க தயக்கம் காட்டினாராம்.

 இதனால் இயக்குனர் சேகர் கம்முலா ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்திருக்கிறார். படத்தின் முக்கிய அம்சமே நயன்தாராவின் கேரக்டர்தான், அதில் மாற்றம் செய்ய சொல்லி நயன்தாரா குளறுபடி செய்ததால் இயக்குனர் அப்செட் ஆகிப்போனாராம்.

ஆனாலும் கேரக்டர் பாதிக்காத வகையில் அவர் சில மாற்றங்களை செய்திருக்கிறாராம். இந்த படம் தமிழிலும் அனாமிகா என்ற பெயரிலேயே வெளியிடுவதா அல்லது பெயரை மாற்றுவதா என முடிவு செய்யப்படவில்லையாம். இன்று இப்படத்தின் டிரைலர் காட்சி ஐதராபாத்தில் வெளியிடப்பட்டது . 

தேசியக்கொடி ஏற்றும் போது, அதில் பூக்கள் வைப்பது ஏன்...

தேசியக்கொடி ஏற்றும் போது, அதில் பூக்கள் வைப்பது ஏன்...


நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன், அதில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து நாம் கை தட்டுகிறோம்.

ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது... அது என்ன தெரியுமா....?

நமது தேசியக்கொடி மேலே ஏற, அதாவது நாம் சுதந்திரம் பெற, எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது, மலர்கள் கீழே விழுந்து, அதனை ஞாபகப்படுத்துகிறது.

இனி ஒவ்வொரு முறையும் நமது தேசியக்கொடி ஏற்றத்தைக் காணும் போதும், இதை உங்களது மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்று அந்த நல்ல உள்ளங்கள், தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்குஅனுப்பாமல் இருந்திருந்தால், நாம் இன்று எங்கேயாவது செக்கு இழுத்துக் கொண்டு தான் இருந்திருப்போம்...!

ஒற்றுமையுடன் பெற்ற சுதந்திரத்தை
ஒற்றுமையுடன் பாதுகாப்போம்...

இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை
இரத்தம் சிந்தாமல் பாதுகாப்போம்...

நமது சுதந்திற்க்காக உயிர் தியாகம் செய்த
நமது முன்னோர்களை நினைவு கூறுவோம்..

"இந்தியனாய் பிறந்தமைக்கு பெருமை படுவோம்"

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இல்லையெனில் ஓங்கிடும் தாழ்வு.

நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறுவோம்.

தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!

ஐஸ்வர்யாவுடன் ஸ்ருதிஹாசன் !

இயக்குனர் மணிரத்னம் தமிழ், தெலுங்கில் இயக்கவிருக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு, நாகார்ஜுனா, பஹத் பாசில் நடிக்க உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யாராய் இப்படம் மூலம் ரீ என்ட்ரி ஆக உள்ளார். இளம் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசனை மகேஷ்பாபுக்கு ஜோடியாக நடிக்க கேட்டிருக்கிறாராம் மணிரத்னம்.

இதுபற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது அவர் அதை மறுக்கவும் இல்லை ஒப்புக்கொள்ளவும் இல்லை. ஆனால் அவர் தனது பதிலை கூறும்போது, ஒவ்வொருவருக்கும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது கனவு. எனக்கும் அந்த கனவு உண்டு என்றார்.

ஸ்ருதியின் நெருக்கமான வட்டாரங்கள் மணிரத்னம் படத்தில் நடிக்க கேட்டு அவரது தரப்பில் அணுகினார்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரை புது படத்தில் நடிப்பது பற்றி ஸ்ருதி எப்போதும் வெளியே சொல்வதில்லை. தற்போது 4 படங்களில் நடித்து வருகிறார். நேரம் வரும்போது மணிரத்னம் படத்தில் நடிப்பது பற்றி தெரிவிப்பார் என்றனர் 

வெள்ளித் தட்டுக்களை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

வெள்ளித் தட்டுக்களை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

வெள்ளி என்பது பிரகாசமாக இருப்பதை விட பளபளப்பாக இருந்தால் தான் அழகே. வெள்ளி என்பது இருக்கும் வரை, அது பாத்திர வடிவில் இருந்தாலும் சரி, அசல் வெள்ளியாக இருந்தாலும் சரி, அது மின்னிக் கொண்டே தான் இருக்கும். ஆனால் அதற்கு, அதனை சீரான முறையில் துடைத்து பராமரிக்க வேண்டும்.

பாத்திர வடிவில் இருந்தும் சரி அல்லது அசல் வெள்ளியாக இருந்தாலும் சரி, அதனை சுத்தப்படுத்தும் வழிமுறை ஒரே மாதிரியானவை தான். அதனால் இந்த இரண்டு வகையிலும் உங்களிடம் வெள்ளி இருந்தால் அவைகளை சுத்தப்படுத்த சில அடிப்படையான பொருட்களில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் வெள்ளியை துடைப்பது ஒருஎன்பது சோர்வடையச் செய்யும் ஒரு வேலையாகும். அதற்கு அதிகளவில் பொறுமை தேவைப்படும். அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்.

வெள்ளி பொருட்களை சுத்தப்படுத்த மென்மையான பொருட்கள் தேவை என்பதையும் மறந்து விடக்கூடாது. கடுமையான மற்றும் திடமான பொருட்களை கொண்டு வெள்ளியை சுத்தப்படுத்த கூடாது. அது உங்கள் வெள்ளிப் பொருட்களை பாழாக்கி விடும். வெள்ளிப் பொருட்களை சுத்தப்படுத்த உங்களுக்காக சில டிப்ஸ்:

சீரான முறையில் சுத்தப்படுத்துதல்

சீரான முறையில் சுத்தப்படுத்துவது என்றால் வெள்ளி பாலிஷ் போடுவது என்று அர்த்தமில்லை. அது உங்கள் வெள்ளிப் பொருட்களை பாழாக்கி விடும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு மென்மையான துணி அல்லது மென்மையான முட்களை கொண்ட பிரஷ்ஷை கொண்டு வெள்ளிப் பொருட்களை துடைக்க வேண்டும். அப்பப்போ, வெதுவெதுப்பான சோப்பு நீரிலும் அவைகளை துடைக்கலாம். இதனால் அவைகளில் காணப்படும் கறைகள் நீங்கும். கழுவிய பின்பு மென்மையான துணியை கொண்டு ஈரத்தை துடைத்திடுங்கள்.

பேக்கிங் சோடாவின் பயன்பாடு

வெள்ளியை துடைக்க பேக்கிங் சோடாவையும் கூட பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை ஒரு கை எடுத்து வெதுவெதுப்பான நீரில் போடுங்கள். அது நீரில் கரையும் வரை காத்திருக்கவும். கரைந்த பின்பு, உங்கள் வெள்ளி தட்டுக்களை உலோகத்தகடு மூலம் மூடுங்கள். பின் அதனை அந்த பேக்கிங் சோடாவின் கலவையில் போட்டு ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின், உலோகத்தகடை எடுத்து, வெள்ளி தட்டை மென்மையான துணியை கொண்டு துடைத்திடுங்கள்.

ஸ்பாஞ்சை வைத்து சுத்தப்படுத்துதல்

கடுமையானதாக இல்லாத குறைந்த அளவிலான பொருட்களை கொண்டு வெள்ளிப் தட்டுக்களை சுத்தப்படுத்தலாம். மென்மையான ஈர ஸ்பாஞ்சை மென்மையான சோப்பில் முக்கி வெள்ளி தட்டின் மீது தேய்க்கவும். செராமிக் அல்லது கண்ணாடியை கொண்டு செய்யப்பட்ட வெள்ளிப் பாத்திரம் என்றால் ஸ்பாஞ்சை மிதமான சோப்பு கலந்த சுடுநீரில் நனைக்கலாம்.

மிதமான சோப்பை கொண்டு சுத்தப்படுத்திய பிறகு, வெதுவெதுப்பான நீரில் அதனை கழுவுங்கள். பின் ஒரு மென்மையான துணியை கொண்டு தட்டை துடைத்திடுங்கள். நீங்கள் பயன்படுத்தும் மென்மையான துணி பருத்தியால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கம்பளி கலந்த துணியை பயன்படுத்தாதீர்கள். கழுவும் போது கையுறை அணிய விரும்பினால் அவை பிளாஸ்டிக் அல்லது பருத்தியால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ரப்பர் கையுறையை பயன்படுத்தினால் அது தட்டை பாழாக்கி விடும்.

நன்றாக பாலிஷ் செய்யுங்கள்

வெள்ளி தட்டை சுத்தப்படுத்த மற்றொரு வழியாக விளங்குகிறது வெள்ளி பாலிஷ். நல்ல பாலிஷ் மூலம் தட்டை பளபளக்க செய்யலாம். ஈர ஸ்பாஞ்சை கொண்டு துடைத்த பின்னர், தட்டின் மீது வெள்ளி பாலிஷ் க்ரீமை தடவுங்கள். இந்த க்ரீமை மென்மையான துணியை கொண்டு தடவுங்கள். தட்டை ரொம்பவும் அழுத்தி துடைக்காதீர்கள். பாலிஷை தட்டை சுற்றி மெதுவாக தடவுங்கள். பருத்தி அல்லது முட்களை கொண்ட பிரஷ்ஷை வைத்து பாலிஷை தடவலாம். பாலிஷ் செய்த பின்பு உங்கள் வெள்ளித் தட்டு பளபளப்பாக இருப்பதை நீங்கள் காணலாம்.

வெள்ளித் தட்டை கழுவ போடுவதற்கு முன் அதில் படிந்திருக்கும் உணவு கறைகளை முதலில் நீக்க வேண்டும். தட்டின் தேய்மானத்தை இது தடுக்கும். சீரான முறையில் இப்படி செய்து வந்தால் வெள்ளிப் பொருட்களை அடிக்கடி கழுவ வேண்டியதை தவிர்க்கலாம்.

வெள்ளிப் பாத்திரங்கள் பாதுகாக்க ஐடியா!

இன்றைக்கு தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த அளவிற்கு மதிப்பு மிக்க வெள்ளிப் பொருட்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. வெ‌ள்‌ளி‌ப் பா‌த்‌திர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் நகைகளை எ‌வ்வளவுதா‌ன் பாதுகா‌ப்பாக வை‌த்‌திரு‌ந்தாலு‌ம் ‌சில நேர‌ங்க‌ளி‌ல் அவை கறு‌ப்பாக மா‌றி ‌விடு‌கி‌ன்றன. இதற்கு காரணம் அவற்றின் தர‌த்‌தி‌ல் குறை இல்லை. காற்று பட்டாலே வெள்ளியானது கருத்துவிடுவது இயல்புதான். எனவே வெ‌ள்‌ளி‌ப் பொரு‌ட்களை‌ப் எ‌வ்வாறு பாதுகா‌ப்பது எ‌‌ன்பதை அ‌றி‌‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

பாலீதின் கவர்

மரப்பெட்டிக‌ளி‌ல் வெ‌ள்‌ளி‌ப் பொரு‌ட்களை வைக்கவேண்டாம். ஏனெனில் மரத்தில் இருக்கும் அமிலம் வெள்ளியின் மேல்பகுதியை பாதிக்கும். அ‌ப்படி மர‌ப்பெ‌ட்டி‌யி‌ல்தா‌ன் வை‌க்க வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்ப‌ட்டா‌ல் வெ‌ள்‌ளி‌ப் பொருளை பா‌லி‌த்‌தீ‌ன் கவ‌ரி‌ல் போ‌ட்டு ந‌ன்கு மூடி வை‌க்கவு‌ம்.

நகைப்பெட்டிகளில் ஒவ்வொரு நகைகளையும் தனித்தனியாக வையுங்கள். வெள்ளியின் மீது செ‌ய்‌தி‌த்தாளோ, ரப்பர் பேண்டோ அல்லது பிளாஸ்டிக் பொரு‌ட்களோ படும்படி வைக்க வேண்டாம்.

காற்றுப் படக்கூடாது

ஒ‌வ்வொரு முறையு‌ம் வெ‌‌ள்‌ளி நகையை பய‌ன்படு‌த்‌து‌ம் போது நம் உடலில் சுரக்கும் எண்ணெய் பசையால் வெள்ளியின் ஒளி மங்க வாய்ப்பிருக்கிறது. எனவே பய‌ன்படு‌த்‌திய ‌பிறகு அதனை ந‌ன்றாக துடை‌த்து ‌பி‌ன்ன‌ர் பாதுகா‌‌ப்பாக எடு‌த்து வை‌க்க வே‌ண்டு‌ம்.

பயன்படுத்திய வெள்ளி பொருட்களை மென்மையாக சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கழு‌வி உடனேயே காயவைத்தால் கூட போதுமானது. நீண்ட நேரங்களுக்கு அதை வெளியில் வைக்க வேண்டாம். வெள்ளியை குளிர்ச்சியான, வறண்ட இடங்களில், காற்றுபுகாத பெட்டிகளில் வைக்கவேண்டும்.

மங்கிப்போகும்

ஒரு சிலர் வீடுகளில் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர் போன்றவைகளை உபயோகிப்பார்கள். வெள்ளித்தட்டுகளில் உணவுகளை போட்டு வைத்து நீண்ட நேரம் வைக்க வேண்டாம். ஏனெனில் சில உணவுப் பொருட்களில் உள்ள அமிலங்கள் வெள்ளித்தட்டை மங்கச் செய்யும். அதேபோல் பாத்திரம் கழுவும் மெஷின்களில் வெள்ளிப் பாத்திரங்களைப் போட வேண்டாம் அவை நசுங்கிவிடும்.

பூஜை சாமான்கள்

 குத்துவிளக்கு, ஆரத்தி தட்டு போன்றவைகளை வெள்ளியில் வைத்திருப்பது வாடிக்கை. அவற்றை வாரம் ஒருமுறையாவது எடுத்து வெள்ளியை சுத்தம் செய்யும் பொருளைப் போட்டு துடைத்து சுத்தம் செய்து வைக்கவும். இல்லையெனில் அவை கருத்துவிடும்.

அசினுக்கு பாலிவுட்டில் அதிர்ச்சி !

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த அசின் கஜினி ரீமேக்கில் ஆமீர்கானுக்கு ஜோடியாக நடிக்க அந்த படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து மளமளவென அசினுக்கு வாய்ப்புகள் குவிந்தன. அவரை பார்த்து த்ரிஷா, காஜல் அகர்வால், இலியானா என தென்னிந்திய ஹீரோயின்கள் வரிசையாக பாலிவுட்டுக்கு படையெடுத்தனர். வேகமாக வளர்ந்து வந்த அசினுக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் அவர் நடித்த 3 இந்தி படங்கள் கடைசியாக திரைக்கு வந்தன.

கடந்த வருடம் முழுவதும் ஒரு படம் கூட அவருக்கு வரவில்லை. இந்த ஆண்டில் "ஆல் இஸ் வெல்" என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். தென்னிந்திய நடிகைகள் மீது கவனம் செலுத்திவந்த பாலிவுட் ஹீரோ மற்றும் டைரக்டர்கள் மீண்டும் கேத்ரினா கைப், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா, அலியா பட், பரினீதி சோப்ரா என சீனியர் மற்றும் இளம் நடிகைகளையே தேடிச் சென்றனர். இதனால் பாலிவுட்டை நம்பி பறந்த தென்னிந்திய ஹீரோயின்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பாலிவுட்டில் இயக்குனர்களால் அசின் ஓரம்கட்டப்பட்டுவிட்டாலும் விளம்பர படங்களை நம்பி அங்கேயே தங்கி இருக்கிறார். சமீபத்தில் அழகு சாதனம் பொருட்கள் நிறுவனம் ஒன்றின் தூதராக அவர் அமர்த்தப்பட்டு இருக்கிறார்.

தோல்வி என்பது அபிப்ராயம்தான் ...!

தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர். தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம்தான் என்பது ஒரு வகை அபிப்பிராயம். இது ஒரு முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம். ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.

வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும் வரை எந்தத் தோல்வியும் பொருட்படுத்தத் தக்கதல்ல. சிலர் சின்ன தோல்விகளுக்கே எல்லாவற்றையும் இழந்துவிட்டதாய் எண்ணிக் கலங்குவார்கள். மனிதன் உயிருடன் இருக்கும்வரை, எல்லாவற்றையும் இழந்ததாய் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கும்வரை, இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒருவர் வெற்றி நோக்கி முழு மூச்சோடு முயன்றார் என்பதற்கான ஆதாரம்தான் தோல்வி. ஒரு மனிதனை உலுக்கும் விதமாகத் தோல்வி வரும்போது எப்படித் தாங்குவது என்ற கேள்வி எழலாம். உலுக்கப்படும்போது, மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காய்ந்த இலைகள் விழுகின்றன. கனிந்த பழங்கள் விழுகின்றன. இலைகள், மனிதனின் பலவீனங்களுக்கு அடையாளம்.

தோல்வியில் நமது பலவீனங்களை உதிர்ப்பதும், சோதனைக் காலங்களிலும் பிறருக்குப் பயன்படுவதும் வெற்றியாளர்களின் அம்சங்கள்.

தோல்வியின் காரணத்தை உண்மையாக ஆராயும்போதே வெற்றிக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஒரு விஷயத்தில் தோல்வி ஏன் வருகிறது?

சிந்திக்காமல் ஒன்றைச் செய்வதாலும் தோல்வி வருகிறது. நன்கு சிந்தித்த ஒன்றைச் செய்யாமல் கைவிடுகிறபோது, ஒன்றை நன்கு சிந்திக்கவும் சிந்தித்ததை செயல்படுத்தவும் தேவையான தெளிவு வருகிறது.

ஒரு செயலின் விளைவு எதிர்மறையாக ஆகுமென்றால் அப்போதைக்கு அது தோல்வியின் கணக்கில் இருந்தாலும் அசைக்க முடியாத வெற்றிக்கு அடித்தளமாகவும் அதுவே அமைகிறது.

நெருக்கியடிக்கிற தோல்விகளின் நிர்ப்பந்தங்களால் தங்களையும் அறியாமல் தங்கள் பாதையை சீர்ப்படுத்திக்கொண்டு நிகரற்ற வெற்றியைக் குவித்த பலரையும் வரலாறு பெருமையுடன் பாராட்டி வருகிறது. எதிலாவது தோல்வி ஏற்பட்டாலோ, அல்லது தோல்வி வருமோ என்ற பயம் ஏற்பட்டாலோ பதட்டமில்லாமல் உங்கள் திட்டங்களை மறுபடி கவனமாகக் கண்காணியுங்கள். அதனை ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான்.

தமிழ் படங்களின் மீது இயக்குநர்களுக்கு திடீர் பற்று!

அதென்னமோ தெரியவில்லை இப்போது தமிழ் பட டைரக்டர்களுக்கு தமிழ் பற்று பொங்கி வழிகிறது. சங்க இலக்கியத்திருந்தெல்லாம் சொற்களை கண்டுபிடித்து படத்துக்கு டைட்டிலாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாரணம் ஆயிரம், பொன்மாலை பொழுது, விண்ணைத்தாண்டி வருவாயா என கவுதம் மேனன்தான் அழகு தமிழில் பெயர் வைப்பார். இப்போது அவரையும் மீறி சங்கத் தமிழ் வரைக்கும் சென்று விட்டார்கள்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஞ்சான் என்றால் எதற்கும் அஞ்சாதவன், பயப்படாதவன் என்ற பொருள்.

கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனேகன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். அனேகன் என்றால் அனைத்தும் அறிந்தவன் என்று பொருள் அதாது ஆல் இன் ஆல் அழகுராஜா.

மகிழ்திருமேனி டைரக்டஷனில் ஆர்யா நடிக்கும் படத்திற்கு மீகாமன் என்பது டைட்டில். மீகாமன் என்றால் கப்பல் தலைவன் என்று பொருள். அதாவது கேப்டன், மாலுமி.

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் டைரக்ஷனில் ஜீவா நடிக்கும் படத்திற்கு யான் என்ற டைட்டில். யான் என்றால் நான் என்று பொருள்.

விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை டைரக்ட் செய்த பரதன் இப்போது காக்டெயில் மலையாளப்படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். அதற்கு அதிதி என்று டைட்டில் வைத்துள்ளார். இதற்கு அழையா விருந்தினர், அல்லது திடீர் விருந்தினர் என்று பொருள்.

வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி ஒரு படம் டைரக்ட் செய்ய இருக்கிறார். அதற்கு குறோணி என்று டைட்டில் வைத்திருக்கிறார். குறோணி என்றால் அசுரன் என்று பொருளாம்.

இன்னும் நிறைய சங்கத்த தமிழ் பெயர்கள் வரப்போகிறது. வாழ்க டைரக்டர்களின் தமிழ்த் தொண்டு

மாத்தி யோசிக்க வைத்த நயன்தாரா..?

 பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் படத்திற்கு 'இது நம்ம ஆளு' என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. சிம்புவிற்கு ஜோடி யார் என்பது குறித்து பெரிய விவாதம நடைபெற்று வந்தது.

நயன்தாரா தான் நாயகி என்று ட்விட்டர் தளத்தில் இயக்குநர் பாண்டிராஜ் அறிவிக்க, அன்றிலிருந்தே படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு எகிறியது.

சிம்பு - நயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தன. படப்பிடிப்பு தளத்தில் இருவருமே நண்பர்களாகவே வலம் வந்தார்கள். தங்களுக்குள் பிரச்சினை எதுவுமே நடக்காதது போல் இருவருமே நடந்து கொண்டதை படக்குழு ஆச்சர்யத்தோடு பார்த்தது.

கதைப்படி சிம்புவுக்கு லவ் ஃபெயிலியர். அவருக்கு வீட்டுல பார்த்த பொண்ணு தான் நயன்தாரா. நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்காக அஞ்சு, ஆறு மாசம் காத்திருக்காங்க. அப்போ ரெண்டு பேருக்கும் இடையில் பூக்கும் காதல் தான் கதை. காதல் தரும் எதிர்பார்ப்புகள், அதன் பிறகான ஏமாற்றங்கள், அது உண்டாக்கும் பிரச்னைகள்... இது தான் படத்தோட அவுட்லைன்.

இப்படத்தில் நயன்தாராவை நாயகி ஆக்குவதற்கு முன்பு, 'கதவைத் திற காதல் வரட்டும்’ அல்லது 'லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு’ என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து இருக்கிறார் பாண்டிராஜ். நயன்தாரா நாயகி ஆனவுடன் தற்போது 'இது நம்ம ஆளு' என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். ஏனென்றால் படத்தில் நயன்தாராவைப் பார்க்கும் போது எல்லாம் 'இது நம்ம ஆளு சார்' என்று கூறிக்கொண்டே இருப்பாராம் சிம்பு. அது தான் தலைப்பிற்கு காரணமாம்.

ஹன்சிகா அப்படினு ஒருத்தங்க இருக்காங்களா.....? 

'சதுரங்க வேட்டை' சிறப்பு!

 ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிப்பில், வினோத் இயக்கி வரும் 'சதுரங்க வேட்டை' என்ற படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் மனோபாலா.

'நாளை', 'சக்கர வியூகம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்தி திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ். தற்போது 'சதுரங்க வேட்டை' என்ற படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கிவரும் இப்படத்தை தயாரிக்கிறார் நடிகர் மனோபாலா.

இயற்கையோட சமநிலை தவறும் போது நடக்கிற அழிவு மாதிரி, மனுஷனோட சமநிலை தவறும் போதும் அழிவு நடக்கும், இதுதான் இப்படத்தோட மையக் கரு.

இப்படம் குறித்து இயக்குநர் வினோத், "இங்க பணம் இருந்தால் ஹீரோ ஆகலாம், எம்.பி. ஆகலாம். எவனையாவது பிடிக்கலைன்னா அடிக்கலாம். பணம் இருந்தால் என்ன வேணா பண்ணலாம்னா, பணம் சம்பாதிக்க என்ன பண்ணால் என்னன்னு நினைக்கிற ஒருத்தனோட கதைதான் இந்த ‘சதுரங்க வேட்டை’.

நல்லவனா வாழ்ந்தால் செத்த பிறகு சொர்க்கத்துக்குப் போகலாம். கெட்டவனா வாழ்ந்தால் வாழும் போதே சொர்க்கத்துல வாழலாம்னு சொல்ற ஹீரோவோட கதையை முழுக்க முழுக்க காமெடியா சொல்றோம்.

புதுமையான வசனங்கள் கலந்து , ஆறு எபிசோடுகளாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கு. ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும்.

மொத்தத்துல நம்ம சமூகத்து முன்னாடி வைக்கப்படற கண்ணாடி இந்த படம். சிரிக்கவும் வைப்போம், அதே சமயம் சிந்திக்கவும் வைப்போம். உங்களை நீங்களே ‘சதுரங்க வேட்டை’ல பார்க்கலாம்,” என்று கூறியிருக்கிறார். 

நாகேஷ் – நினைவுக் குறிப்புகள்!

தமிழ் திரைஉலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ் (76). கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தாராபுரத்தில் வசித்தார். இயற்பெயர் குண்டுராவ். சிறு வயதில் நாடகத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கடந்த 1956ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 1958ம் ஆண்டு, முதல் முதலாக சினிமாவில் கால் பதித்தார். அப்போதிருந்து அவரது வெற்றிப்பாதை துவங்கியது. இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு, எல்லா கதாநாயகர்களுடனும் நடித்தார்.”நான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “அம்மனோ சாமியோ’ என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள்.

ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவு, “பிசி’யாக இருந்தவர். நகைச்சுவை காட்சி என்றாலே, நாகேஷ் என்ற அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். 1974ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. “நம்மவர்’ படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. நீர்க்குமிழி, எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவே வாழ்ந்துள்ளார். இவரது மனைவி ரெஜினா, இவரது நடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர். 10 வருடங்களுக்கு முன், உடல்நிலை காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு ஆனந்த் பாபு (43), ரமேஷ் பாபு (40), ராஜேஷ்பாபு (37) என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனந்த் பாபு மட்டும் சினிமாத் துறைக்கு வந்தார். நாகேஷுக்கு நான்கு பேரன் மற்றும் மூன்று பேத்திகள் உள்ளனர்.

நகைச்சுவை நாயகன் நாகேஷ்!: தமிழ் சினிமாவில், ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் நாகேஷ், இன்று அவர்களை கண்ணீர் விட வைத்து இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.நாகேஷ் போன்ற நடிகரையோ, அவருக்கு இணையான ஒரு நடிகரையோ இனி தமிழ் சினிமாவில் பார்ப்பது மிக அரிது. கலை பொக்கிஷமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் குண்டுராவ். கடந்த 1933ம் ஆண்டு செப்., 27ம் தேதி கிருஷ்ணராவ் மற்றும் ருக்மணி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். தமிழகத்துக்கு வந்த இவர்கள் தாராபுரத்தில் தங்கியிருந்தனர்.

இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை “கம்ப ராமாயணம்’ நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார். ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

 “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்’ என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்.”மேக்அப்’ போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை., பார்த்ததில்லை.

தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. “தாமரைக்குளம்’ இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.”திருவிளையாடல்’ படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. “காதலிக்க நேரமில்லை’ படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, “சியர்ஸ்’ சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர்.

“தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை இப்போதே செய்பவர் கமல்’ என்று, அவர் பற்றி நாகேஷ் பெருமையாக கூறினார். நடிகர் கமல் தனது படங்களில் நாகேஷை தவறாமல் இடம்பெற செய்வார். “அபூர்வ சகோதரர்கள்’ “மைக்கேல் மதன காமராஜன்’ “மகளிர் மட்டும்’ ஆகிய படங்களில் துவங்கி சமீபத்தில் வெளியான “தசாவதாரம்’ வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம் பெற்றார். மகளிர் மட்டும் படத்தில் “பிணமாக வாழ்ந்த’ நாகேஷ் நடிப்பு, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எல்லாரையும் கவர்ந்தது.நவக்கிரகம், யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?’ என்றார்.சிரித்தபடியே நாகேஷ், “உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா… அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா… மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் “அம்மை’ என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது’ என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. “சிரித்து வாழ வேண்டும்’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார்.

ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு.சென்னை காமராஜர் அரங்கில், 2007, ஜூன் 17ல் “என்றென்றும் நாகேஷ்’ பாராட்டு விழா நடந்தது. இதில், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல், பாக்யராஜ், குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார். இவருக்கு நடிகர் ஆனந்த் பாபு உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர். திரையில் சாதித்த அவர் விருதுகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்தில் எந்த ஒரு விருதும் அலங்காரப் பொருளாக இடம்பெற்றது இல்லை.

இயக்குநர் சிகரம் கே. பால்சந்தர் நாகேஷ் பற்றி சொன்ன விஷ்யங்களில் சில:

தமிழில் மட்டுமல்லாது பிறமொழிக் கலைஞர்களுக்கும் ஆதர்ச ஆசானாக விளங்கியவர் நாகேஷ். ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தை இந்தியில் எடுத்தபோது, நாகேஷின் பாத்திரத்தில் நடித்த மகமூத் அவர் காலில் விழுந்து வணங்கினார். கலைவாணருக்கு அடுத்த சிறந்த கலைஞன் சந்தேகமே இல்லாமல் நாகேஷ்தான்! அவருக்காகவே நான் எழுதிய நாடகம் தான் ‘சர்வர் சுந்தரம்’. அதற்குள் அவர் மூன்று படங்களில் காமெடியனாக நடித்துப் பிரபலமாகிஇருந்தார்.

‘சர்வர் சுந்தரம்’ முழுக்க மெல்லிய சோகம் இழையோடும் கதாபாத்திரம். காமெடியனாகப் பிரபலமாகிவிட்ட நாகேஷ் இப்படியரு சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் எங்கள் இருவருக்கும். ஆனால், எங்களுக்கு நாங்களே நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக்கொள்வோம். நாடகம் பெருவெற்றி பெற்றது. ‘நீர்க்குமிழி’ படத்தில் தொடர்ச்சியாக சிகரெட் குடிப்பதால் கேன்சரால் பாதிக்கப்படும் கதாபாத்திரம் அவருக்கு. அப்போது நானே செயின் ஸ்மோக்கர். ஆனாலும், புகைப்பழக்கத்துக்கு எதிராகப் பேச வேண் டும் என்று தோன்றியதால் அந்தப் படத்தை இயக்கினேன்.

நாகேஷூக்கும் எனக்கும் ‘வெள்ளிவிழா’படத்தின் போது பிரிவு ஏற்பட்டது. அவரால் அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. கோபத்தில் நான் ‘தேங்காய்’ சீனிவாசனை வைத்து அந்தப் படத்தை இயக்கினேன். பாதி படத்தின்போதே எனக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் சர்ஜரி முடிந்து மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தேன். மனத்தாங்கல் இருந்தபோதும் என்னை மருத்துவமனையில் நாகேஷ் வந்து பார்த்து, என் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். அப்போதுதான் நான் சிகரெட் குடிப்பதை நிறுத்தினேன். சிகரெட்டையும் நாகேஷையும் பிரிந்திருந்த காலகட்டம் அது!

நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும். கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு போட்ட நாகேஷ், ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்றதும் செட்டில் எல்லோரும் வேலையில் கவனம் தொலைத்து விழுந்து விழுந்து சிரித்தோம். அது ஸ்க்ரிப்ட்டில் இல்லாத டயலாக்.

டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கற்பித்ததே நாகேஷ்தான். அதற்குப் பின் இன்று வரை அது எவருக்கும் கை வரவில்லை! ஆனால், அரசின் சார்பாக இதுவரை நாகேஷூக்கு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தாதது, நம் அனைவருக்கும்தான் அவமானம்.

‘அந்த நாகேஷ் இல்லை’ என்ற நினைப்பே ஏதோ ஒரு தனிமை உணர்வுக்கு என்னை ஆட்படுத்துகிறது. ‘நீர்க்குமிழி’ பாடலின் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடல்தான் இப்போதைக்கு எனக்கு ஆறுதல் மருந்து

ராமனின் விளைவு கைகொடுத்தது! மருத்துவத்தில் அரிய சாதனை!

மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம்.

ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனின் மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளுக்கு மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் ராமனின் விளைவை பயன்படுத்தும் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

ஹென்றி போர்டு மருத்துவமனையில் இன்னோவேஷன் அமைப்பின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இது 99.5 சதவீதம் துல்லியம் வாய்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மனித மூளையில் நரம்பு செல்களை சுற்றி திசுக்கள் உள்ளன. இதனை சுற்றி கிளையோபிளாஸ்டோமா மல்டிபோர்ம் (ஜி.பி.எம்.) எனப்படும் புற்று கட்டிகள் அதன் மீது படர்கிறது. இக்கட்டிகளை நீக்கி சிகிச்சை மேற்கொள்வது மருத்துவர்களுக்கு கடினமான பணியாக உள்ளது.

 இந்த கட்டிகள், சீரான முனைகள் கொண்டு இருக்கும். மூளை திசுவிற்கும் இக்கட்டிகளுக்கும் வேறுபாடு இருக்கும். இது ஆரோக்கியமான திசு மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்கு கடினம் என்பதால் அவற்றை நீக்குவதில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பது அரிதாக உள்ளது. அத்தகைய நோயாளிகளுக்கு கதிரியக்கம் மற்றும் கீமோதெரபி முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், இது சரியான பலனளிக்கவில்லை. எனவே, மிக துல்லியமாக, திறமையாக மற்றும் குறைந்த செலவில் மூளை திசுவில் இருந்து புற்று கட்டிகளை உருவாக்கும் திசுக்களை விரைவாக வேறுபடுத்தி அறுவை சிகிச்சை அறையில் அதனை கண்டறிவதற்காக ஹென்றி போர்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அவர்கள் இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற ராமன் ஒளி விளைவு சோதனையை அடிப்படையாக கொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் முடிவில் உள்ளனர்.

குறிப்பிட்ட பரப்பில் ஒளிகளை சிதற செய்து அவற்றில் தேவையற்ற திசுக்களை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேம்பட்ட முறையில் இந்த ஆய்வு முடிவு உலக அளவில் மூளையில் உருவாகும் கட்டிகளை குணப்படுத்த முதல் முயற்சியாக இது அமையும். மேலும், தொடர்ந்து ராமன் விளைவு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று ஆய்வின் தலைவரான ஸ்டீவன் என். கல்கானிஸ் தெரிவித்துள்ளார்.

சும்மா டிப்ஸ்....?


மக்களே.... நிலாவை தொட்டது யாருன்னு கேட்டா டக்குன்னு பதில் சொல்லுவது போல, கிருமிகள் எங்க அதிகமாக இருக்கும்? அப்படின்னு கேட்டா சும்மா யோசிக்காம டக்குன்னு பதில் சொல்லிடுவிங்க...டாய்லெட்டில் தான் இருக்குமுன்னு.  ஒரு விளம்பரத்தில் நம்ம விஜய் ஆதிராஜ் ஒரு பிகர் கூட வந்து ஒரு அக்கா வீட்டுல உள்ள பாத்ருமை கிளின் பண்ணிட்டு போவாங்க...ஆனால் அந்த டாய்லெட்டை விட மோசமான அதிக கிருமிகள் இருக்கும், நாம அதிகமா பயன்படுத்தும் இடங்கள் எது எதுன்னு பாக்கலாமா?.

1. ஹோட்டல்களின் மெத்தை விரிப்புகள்: சில ஹோட்டல்களில் மெத்தை விரிப்புகளை தினமும் மாத்த மாட்டாங்க. இதுக்கு பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்கள் கூட விதிவிலக்கு இல்லை. லேட்டஸ்டா இது போல ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தான் ரொம்ப நாளைக்கு பின்ன பாக்ஸர் மைக் டைசனின் டி என் ஏ வை ஒரு மெத்தை விரிப்புலருந்து எடுத்தாங்க. அந்தளவுக்கு துவைக்காத மெத்தை விரிப்புகளில் மோசமான கிருமிகள் இருக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லத்தான் இந்த உதாரணம். அதனால ஹோட்டலுக்கு போனா துவைக்காத மெத்தை விரிப்புகள் இருந்தா உடனே மாத்த சொல்லுங்க.

 2. டாய்லெட் இருக்கும் அறையின் தரை: நாம வெளி இடங்களுக்கு போகும் போது..நம்ம பையை பக்கத்துலையே வச்சுப்போம்..சில சமயம் டாய்லெட் போனா கூட அங்கயும் எடுத்துட்டு போயி டாய்லெட் பக்கத்துல தரையில் வச்சுப்போம். அதுமாதிரி செய்யாதிங்க...ஏன்னா? டாய்லெட்டை விட டாய்லெட் தரையில்தான் அதிக கிருமிகள் இருக்காம்.

3. ஏ டி எம் மெசின்: கிருமிகள் அதிகமா இருக்கதுல மூனாவது இடம் ஏ டி எம் மெசினின் தொடு திரையும் key போர்டுதான். இந்த  key போர்டுல பூசப் பட்டிருக்கும் வேதிப் பொருள் ஒரு ஸ்லொவ் பாய்சனாம். மெசினை பயன்படுத்திய உடன் விரலை கண்ணு காது வாயில வச்சுடாம உடனே கழுவும் வேலைய பாருங்க.

4. ஆபீஸ் டெலிபோன்: பல பேர் பயன்படுத்தும் ஆபீஸ் டெலிபோனில் 25000 வரையான எண்ணிக்கையில் கிருமிகள் இருக்கிறதா அமெரிக்கா பல்கலை கழகம் நடத்திய ஆய்வு சொல்லுது.

5. ஹோட்டல் மெனு கார்ட்ஸ்: இந்த மெனு கார்ட்சை அப்போபோ ஆன்டி பாக்டீரியா திரவம் வச்சு தொடைக்கணும்...ஆனால் யாரும் செய்யவதில்லை. அதை தொட்டுட்டு சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிட்டா கிருமிகள் நேரா வயித்துக்குத்தான்.

6. ஹோட்டல் டேபிள் வேர்ஸ்: சாப்பாட்டு மேசையில்  உப்பு, சக்கரை,ஊறுகா வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது டப்பாக்களில் ஏகப்பட்ட கிருமிகள் இருக்காம்.

7. ட்ராலிகள்: பெரிய பெரிய சூப்பர் மார்கெட்டில் அல்லது ஏர்போர்டில் ட்ராலிகள் வச்சுருப்பாங்க...அந்த ட்ராளிகலிலும் கிருமிகள் அதிகம்.சில பேர் குழந்தைகளை அதுல உக்கார வச்சு தள்ளிகிட்டு போவாங்க அதுமாதிரி செய்யாதிங்க.

8. கார்: காரில் உள்ள ஸ்டியரிங் வீலில் கிருமிகள் அதிகம். சில பேர் சாப்பிட்டுக்கிட்டே வண்டி ஓட்டுவாங்க. பின்ன ஸ்டியரிங் வீலில் இருக்கும் கிருமிகள் அப்படியே வயித்துக்குத்தான் ஸ்ட்ரெயிட்டா...

9. சமையல் அறை: சமைக்கற இடம், பாத்திரம் கழுவும் பேசணில் அதிகமா கிருமிகள் இருக்குமுன்னு எல்லாருக்கும் தெரியும். சுத்தமா வச்சுக்கணும் என்பதும் தெரியும்தானே..

10.ஜிம்: பல பேர் பயன்படுத்தும் உடற்பயிற்சி உபகரணங்களில் கிருமிகள் இருப்பது இயற்கைதானே.

11. பூங்கா: பறவைகள் எச்சம் இருக்கும்... பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும்...ஊஞ்சல், சறுக்கு மரம், சாய்ந்தாடும் பலகைகளில் கிருமிகள் எப்போதும் இருக்கும்.

இதுல சொன்ன நிறைய இடங்களுக்கு நாம போயித்தான் ஆகணும். நாம போகும் அந்த இடங்களையும் அந்த இடத்தில் உள்ள பொருள்களையும் நாம கழுவிக்கிட்டே இருக்க முடியாது. ஆனால் பயன்படுத்துவதற்கு முன்னரும் பயன் படுத்திய பின்னரும் நம்ம கைய கழுவிக்கலாம்தானே....        

விஜய் இரட்டை வேடம் பலனளிக்குமா...?

‘துப்பாக்கி’ ஹிட்டுக்குப் பிறகு விஜய் – முருகதாஸ் மீண்டும் இணைகிறார்கள்.

சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில்’எதிர்நீச்சல்’ சதீஷ் காமெடியனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘வாள்’ என்று டைட்டில் வைத்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அது இல்லையாம்.

‘அதிரடி’, ‘வாள்’ என்று படத்துக்கு டைட்டில் வைக்கவில்லை. கூடிய விரைவில் அறிவிக்கிறோம் என்று படக்குகுழுவினர் சொல்கிறார்கள்.

இந்தப் படத்தில்  விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

ஆக்ஷன் ஹீரோ, காமெடி ஹீரோ என இரு வேடங்களிலும் பட்டையக் கிளப்பப் போகிறாராம்.

‘தலைவா’, ‘ஜில்லா’ படங்களில் விட்டதை இதில் பிடிக்க வேண்டும் என்பதற்காக பன்ச் வசனங்கள் அதிகம் இடம்பெறுகிறதாம்.

தல கொடுத்த ஷாக்...!

தல போல வருமா! தல போல வருமா! என்ற வரும் பாடலை போலவே கோடம்பாக்கத்தில் தலயை பத்தி தான் இன்று பேச்சு.
தலயை வைத்து பில்லா, ஆரம்பம் படத்தை எடுத்த விஷ்ணுவர்தன் இப்போது தலயின் மிக நெருங்கிய நண்பர்.

ஆரம்பம் படம் மிக பெரிய வெற்றி விஸ்வரூபத்தை எடுத்தாலும் விஷ்ணுவர்தனுக்கு சொல்லும் படியாக வாய்ப்புக்கள் வரவில்லை என்பது உண்மை.

சரி நமக்கு தான் ஆர்யா இருக்கானே என்று அவருக்கு கதை பண்ணி கொண்டு இருக்க, சமிபத்தில் தல விஷ்ணுவர்தன்யை கூப்பிட்டு மறுபடியும் நம்ம ஒன்னு சேரலாம் விஷ்ணு  என்று சொல்லி ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து ஒரு ஷாக் ட்ரீட்மென்ட்டை கொடுத்தார்.

என்ன தல சொல்றிங்க என்று அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லையாம் விஷ்ணுவர்தன்

Thursday, 30 January 2014

ரஜினி ரகசிய பயணம் சென்றுள்ளார்!

 கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூர் வந்த ரஜினிகாந்த் தனது அண்ணன், நெருங்கிய நண்பர்களை சந்தித்தார். தான் படித்த பள்ளிக்கூடம் உள்பட பிடித்த இடங்களுக்கு ரகசியமாக சென்று வந்தார்.

நேற்று காலை அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். இந்த‌ தகவலறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திடீரென வீட்டின் முன்பு குவிந்து, ஆரவாரம் செய்தனர். ரஜினி வீட்டின் பால்கனியில் நின்று, ரசிகர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.

பிறந்து வளர்ந்த பெங்களூருக்கு ரஜினி காந்த் அடிக்கடி ரகசியமாக வந்துபோவது வழக்கம். கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெங்களூர் வருவதை குறைத்துக்கொண்டார். சில மாதங்களுக்கு முன்னர் அவர‌து அண்ணன் சத்தியநாராயணா பெங்களூரில் கட்டிய புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்தார். அப்போது நெருங்கிய நண்பர்களை கூட சந்திக்காமல், உடனே சென்னைக்கு கிளம்பிவிட்டார்.

இந்நிலையில் கடந்த 27-தேதி ரஜினி தனது நண்பர்கள் 3 பேருடன் ரகசியமாக பெங்களூர் வந்தார். வழக்கமாக அனுமந்த் நகரில் உள்ள சத்திய நாராயணா வீட்டில் தங்கும் ரஜினி, இந்த முறை பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தன‌து இல்லத்தில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். இருப்பினும் முதல் வேலையாக, 28-ம் தேதி காலை சத்திய நாராயணா வீட்டிற்கு சென்றார்.

ரஜினியின் வருகையொட்டி அவரின் உறவினர்கள் அனைவரும் சத்திய நாராயணா வீட்டில் கூடினர். அனைவரோடு பேசி மகிழ்ந்த அவர், தனது அண்ணனுடன் நீண்ட நேரம் தனியே பேசி கொண்டிருந்தார்.

படித்த பள்ளியை வலம் வந்தார்

ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் கவிப்புரம் குட்டஹள்ளி மண்ணை மிதிக்காமல், திரும்ப மாட்டார். ஏனென்றால் அவர் படித்த மாதிரி கன்னட தொடக்கப்பள்ளி, அவரின் இஷ்ட தெய்வமான கவிகங்காதேஷ்வர் கோயில், உயிர் நண்பன் ராஜ் பகதூர் வீடு என அனைத்தும் அங்குதான் உள்ளது. மாறுவேடத்தில் வலம்வந்ததால் நெருக்கமானவர்களால்கூட ரஜினியை அங்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

நண்பர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது, கவிப்புரம் மாதிரி கன்னட தொடக்கப்பள்ளியை ரஜினி பார்த்தார். இந்த‌ பள்ளிக்கூடத்தை கர்நாடக அரசு ரூ.1.53 கோடி செலவில் நவீன வசதிகளோடு புதுப்பித்து வருகிறது.

வறுமையில் வாடிய தனது ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிற்கு சமீபத்தில் பெரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தி, அவரது கண்ணீரை ரஜினி காந்தி துடைத்தார். அப்போது ஆசிரியையிடம் தொலைப்பேசியில் பேசிய ரஜினி,' பெங்களூர் வரும்போது நிச்சயம் வீட்டிற்கு வருகிறேன்'என உறுதியளித்தார்.

இப்போது பெங்களூர் வந்த ரஜினி உங்களை சந்தித்தாரா என்று ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிடம் கேட்டோம். 'இல்லை. சிவாஜிக்கு(ரஜினியின் இயற்பெயர்) நிறைய வேலைகள் இருக்கும். அதனால்தான் வரவில்லை.அடுத்தமுறை நிச்சயம் வருவார். இல்லாவிட்டால் பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு வருவார்''என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் அவருடைய நிழலாக இருப்பவர், உயிர் நண்பர் ராஜ் பகதூர் தான். ரஜினியோடு பள்ளியில் ஒன்றாக படித்தது, பேருந்தில் அவர் நடத்துநராக இருந்த போது ஓட்டுநராக இருந்தது ராஜ் பகதூர் தான்.

இந்த முறை கன்னட படமான 'ஒன்வே' வெளியூர் படப்பிடிப்பில் ராஜ்பகதூர் மிகவும் பிஸியாக இருந்தார். அதனால் அவரால் ரஜினியோடு நேரத்தை செலவிட முடிய‌வில்லை.

அதிகாலையிலேயே ரசிகர்கள்!

வழக்கமாக ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் வீட்டில் தங்காமல், வெளியே சுற்றுவார்.ஆனால் இந்த முறை அதிகமாக வீட்டிலே இருந்தார். நேற்று அதிகாலை 6 மணிக்கே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீட்டு முன்பு கூடி 'தலைவா..தலைவா..'' என உற்சாகமாக ஆரவாரமிட்டனர். மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பல ரசிகர்கள் ரஜினி வீட்டின் மதில் சுவருக்குள் ஏறிக் குதித்தனர்.

மந்த்ராலயத்திற்கு கிளம்பிய ரஜினி

ஒரு கட்டத்தில் ரசிகர்க‌ளின் குரல் அக்கம் பக்கத்து வீட்டாரையும் விழித்தெழ செய்தது. இதனால் ரஜினி தனது வீட்டின் பால்கனிக்கு வந்தார். குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து வணங்கினார். அனைவரையும் பத்திரமாக வீட்டுக்கு போகுமாறு சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டார். ரசிகர்கள் கூட்டத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாததால் ரஜினி வீட்டை விட்டு காரில் புறப்பட்டார். அப்போது கன்னட தொலைக்காட்சி செய்தியாளர் அவரை மறித்து பேட்டி கேட்டார். 'பேட்டியெல்லாம் வேண்டாம்.வழக்கம்போல சும்மாதான் பெங்களூர் வந்தேன்'' என கூறிவிட்டு தனது நண்பர்களுடன் கிளம்பி சென்றார்.

ரஜினி மந்த்ராலயத்திற்கு சென்று இருப்ப‌தாக அவருடைய வீட்டில் இருந்தவர்கள் கூறினர். 

போலீஸ் ஸ்டோரிக்காக ஜாக்கிசான் பாடிய பாட்டு..!




ஜாக்கிசான் தயாரித்து நடிக்கும் படம், போலீஸ் ஸ்டோரி 2013. முந்தைய போலீஸ் ஸ்டோரி கதைகளின் ஆறாம் பாகம் இது. இதில் முதன்முறையாக ஜாக்கி சான் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

டிங் ஷெங்க் இயக்கி உள்ள இந்தப் படம் சீனா மற்றும் ஹாங்காங்க்கில் வெளியாகி அதிக வசூலை அள்ளி உள்ளது. ஒரு கும்பல் 33 பேரை கடத்தி பணய கைதிகளாக வைத்திருக்கின்றனர்.

அதில் ஒருவர் ஜாக்கி சானின் மகள். பணய கைதிகளில் ஒருவராக, அவர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து எல்லோரையும் ஜாக்கிசான் எப்படி மீட்கிறார் என்பது பரபரக்கும் திரைக்கதை.

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், ஆங்கிலத்தில் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை சுரபி பிலிம்ஸ் மோகன் வெளியிடுகிறார்

ஹீரோவாக மாறிய டெக்னீஷியன்கள் ..!



டெக்னீஷியன்களே ஹீரோக்களாக நடிக்கும் படம் கள்ளப்படம். இதுபற்றி இயக்குனர் ஜெ.வடிவேல் கூறியதாவது: 

புதுமுக நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு கோலிவுட்டில் வாய்ப்பு கிடைப்பது அரிது. அந்த வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். தமிழ் கலாசாரத்தின் அடையாளமாக கருதப்படும் கூத்து உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகள் தற்போது நலிவடைந்து வருகிறது.

முன்பெல்லாம் ஊர் திருவிழா என்றால் கூத்து நடக்கும். இப்போது பாட்டுக்கச்சேரி, குத்தாட்ட நிகழ்ச்சி தான் நடக்கிறது. பாரம்பரிய கலைக்கு முக்கியத்துவம்தரும் வகையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இது டாக்குமென்ட்ரி படமாக இல்லாமல் கமர்ஷியல் அம்சத்துடன் த்ரில்லராக கதை கரு அமைந்துள்ளது.

சினிமாவில் முன்னேற புதியவர்கள் எப்படி போராட வேண்டி இருக்கிறது என்ற பின்னணியில் இக்கதை அமைந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குனரான நான், ஒளிப்பதிவாளரான ஸ்ரீராம் சந்தோஷ், இசை அமைப்பாளரான கே, எடிட்டராக பணியாற்றும் காகின் ஆகிய நான்குபேரும் அந்தந்த கதாபாத்திரங்களாக படத்தில் வேடமேற்றிருக்கிறோம்.

ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கிறார். திருவண்ணாமலை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து நிஜகூத்து கலைஞர்களை வரவழைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன. இயக்குனர் மிஷ்கின் ஒரு பாடல் பாடி இருக்கிறார். சுட்டகதை பட ஹீரோ யின் லக்ஷ்மி ப்ரியா, நரேன், சிங்கம் புலி ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடம் ஏற்றிருக்கின்றனர்.

‘அஞ்சான்’ ஆகஸ்ட் 15-ந்தில் வருகிறான்!

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. அடுத்தகட்டமாக கோவா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்த்திரை காணாத பல இடங்களிலும் படமாக்க உள்ளனர். தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் முழு படத்தின் படப்பிடிப்பை நடத்தத் முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா குத்துப்பாடல் ஒன்றுக்கு சூர்யாவுடன் நடனம் ஆடுகிறார். இப்படத்திற்காக ரெட் டிராகன் என்ற அதிநவீன கேமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக ரெட் டிராகன் கேமராவை பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் படம் என்ற பெயரை இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

‘கோலி சோடா’ - 2–ம் பாகம் தயார்!

‘கோலி சோடா’ சினிமா தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பசங்க திரைப்படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கோலி சோடா படம் ஈரோட்டில் ஸ்ரீனிவாசா, ஆனூர், அபிராமி தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

கோலி சோடா படத்தில் நடித்த நடிகர் குழுவினர் நேற்று இரவு ஸ்ரீனிவாசா, ஆனூர் அபிராமி திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.

நடிகர்கள் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோருடன் நடிகைகள் சாந்தினி, சீதா மற்றும் பட டைரக்டர் விஜய்மில்டன், சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் ஆகியோரும் ரசிகர்களை சந்தித்தனர்.

நடிகர்களை பார்த்ததும் படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுக்கு நடிகர்கள் நன்றி தெரிவித்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதில் அளித்தனர்.

டைரக்டர் விஜய்மில்டன் பேசும் போது, ‘‘இதே நடிகர் குழுவினரை வைத்து கோலி சோடா படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளேன். இந்த நடிகர்களை எனது கதைக்கு தேர்வு செய்த இயக்குனர் பாண்டிராஜ்–க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

முன்னதாக அபிராமி தியேட்டருக்கு வந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை தியேட்டர் மேலாளர் பாலு தலைமையில் இதயம் நற்பணி இயக்கம் அறக்கட்டளை தலைவர் எஸ்.வி.மகாதேவன் மற்றும் திரையரங்க ஊழியர்கள் வரவேற்றனர்.

இதேபோல் ஸ்ரீனிவாசா தியேட்டர் சிவக்குமார், விஜயன், மற்றும் ஆனூர் தியேட்டர் ராமசாமி ஆகியோரும் வரவேற்றனர். 

பார்வதி ஓமனக்குட்டன்! இந்தி பீட்சா நாயகி!

உலக அழகிப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பார்வதி ஓமனக்குட்டன் இந்திய சினிமாவில் முதல் இடம்பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறார். தமிழில் பெரும் எதிர்பார்ப்போடு பில்லா-2வில் நடித்தார். பில்லா-2 பிளாப் ஆகவே பார்வதியின் கனவு கலைந்தது. இப்போது பேஷன் ஷோக்கள், நடன நிகழ்ச்சிகள் என்று உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் ஹிட்டடித்த பீட்சாவின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் எதையும் தேடிப்போவதில்லை. கிடைக்கிற வாய்ப்புகளை முழு மனநிறைவோடு செய்கிறேன். இப்போது உலகம் முழுவதும் பேஷன் ஷோக்களுக்கு போய் வருகிறேன். ரசிகர்களை நேரடியாக சந்தோஷப்படுத்தி பார்க்கிற அனுபவம் அது. உலக நாடுகளையும் சுற்றிப் பார்க்கலாம்.

தமிழ் படங்களில் வாய்ப்புகள் அமையாதது வருத்தம்தான். ஆனாலும் பில்லா-2 எனக்கு ரொம்ப பிடித்த படம். ஸ்ரீகாந்த் நடிக்கும் நம்பியார் படத்தில் நானும் ஆர்யாவும் இணைந்து கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறோம். அடுத்து பீட்சா இந்தி ரீமேக்கில் நடிக்கிறேன். விரைவில் தமிழ் படத்தில் நடிப்பேன் என்கிறார் பார்வதி.

இது நம்ம ஆளு - சிம்பு - நயன்தாராவின் புதிய படம்!

சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் படத்தை பசங்க பாண்டிராஜ் டைரக்ட் செய்து வருகிறார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் படத்தை தயாரிக்கிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார். சிம்புவின் குடும்ப படத்தில் நயன்தாரா நடிப்பது பற்றி பரபரப்பான பேச்சு நிலவி வருகிறது. இந்த நிலையில் இப்போது படத்துக்கு இது நம்ம ஆளு என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

இதுபற்றி படத்தின் டைரக்டர் பாண்டிராஜ் கூறியிருப்பதாவது: இந்தப் படத்திற்கு முதலில் கதவை திற காதல் வரட்டும், லவ்வுன்னா லவ்வு அப்படியொரு லவ்வு இந்த இரண்டு தலைப்பில் ஒன்றைத்தான் வைக்க முடிவு பண்ணியிருந்தேன். ஆனால் படத்துல நயன்தாரா நடிக்கிறதுன்னு முடிவானதும் இதைவிட பெட்டரா ஒரு தலைப்பு வைக்கணும்னு தீவிரமா யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதான் அதுக்கான ஐடியா கிளிக் ஆச்சுது. சிம்பு ஒவ்வொருமுறையும் நயன்தராவை பார்க்குறப்போ "இது நம்ம ஆளு சார்"னு ஃபீல் பண்ணுற மாதிரி படத்துல நிறைய காட்சிகள் இருக்கு. அதையே படத்துக்கு டைட்டிலா வச்சிட்டா என்ன என்று யோசித்தேன். அதுதான் டைட்டில் இது நம்ம ஆளு.

சிம்புவுக்கு ஒரு லவ் பெயிலியராயிடும். கல்யாணமே வேண்டாமுன்னு சொல்லிக்கிட்டிருப்பாரு. அவருக்கு நயன்தாராவை நிச்சயம் பண்ணிடுறாங்க. கல்யாணத்துக்கு 6 மாசம் இருக்கிற நிலையில இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிஞ்சுக்கிட்டு லவ் பண்றாங்க கல்யாணத்துக்கு பிறகு என்னென்ன பிரச்னைகள் வருதுங்கறதுதான் படத்தோட கதை.

சிம்புவும் சரி, நயன்தாராவும் சரி எந்த பிளாஷ்பேக்குக்கும் போகாமல் அவுங்கவுங்க கேரக்டரை அழகா நடிச்சிடுறாங்க. சூட்டிங் ஸ்பாட்டுல நல்ல பிரண்ட்லியா பழகிக்கிறாங்க. சில காட்சிகள் அவுங்களோட பழைய நினைவுகளை கிளர்ற மாதிரி இருந்தாலும் சிரிச்சிக்கிட்டே சின்சியராக நடிச்சுடுறாங்க. சில காட்சிகள்ல எப்படி நடிக்கிறதுன்னு கேட்பாங்க. அதான் நிறைய பண்ணியிருக்கீங்களே அதையே பண்ணிடுங்கன்னு சொல்வேன். சிரிச்சிக்கிட்ட நடிச்சு கொடுத்துடுவாங்க என்கிறார் பாண்டிராஜ்.

ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு! டி.டே இந்திப் படம் தமிழில் வெளியாகாது..?

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் டி டே. ஸ்ருதிஹாசன் இதில் பாலியல் தொழிலாளியாக துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகளும், போட்டோக்களும் அதிர வைத்தது. ஸ்ருதியுடன் அர்ஜுன் ரம்பால், இர்பான் கான், ரிஷி கபூர், சந்தீப் குல்கர்னி, ஹியூமா குரேசி ஆகியோர் நடித்திருந்தனர். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார். நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார். இப்போது இந்தப் படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள்.

இதற்கு ஸ்ருதி ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியில் நான் நடித்த டி.டே படம் தமிழில் தாவூத் என்ற பெயரில் வெளியிடப்பட இருப்பதாக அறிகிறேன். இதற்கு என் அனுமதியை பெறவில்லை. என்னிடம் தகவலும் சொல்லவில்லை. இது ஒப்பந்தததை மீறுவதாகும். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். இதற்கான ஏற்பாடுகளை இப்போது செய்து வருகிறேன். அதுபற்றி விரிவாக பின்னர் சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

தமிழ் நாட்டில் கமலஹாசன் மகள், குடும்பபாங்கான நடிகை என்ற நல்ல பெயர் ஸ்ருதிக்கு இருக்கிறது. இந்தப் படம் வந்தால் அந்த இமேஜ் மாறும் என்பதால் படம் தமிழில் வெளிவருவதை ஸ்ருதி விரும்பவில்லை என்கிறார்கள்.

Wednesday, 29 January 2014

ஹீரோக்களிடையே போட்டி - 'ஜில்லா உனக்கா? எனக்கா?

 'ஜில்லா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

விஜய் - மோகன்லால் என இரண்டு பெரிய ஹீரோக்கள் நடிப்பில் வெளியான படம் 'ஜில்லா'. விஜய்யின் போலீஸ் வேடம், மோகன்லாலின் தாதா நடிப்பு என மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படம் வெளியான உடன், ரீமேக் உரிமைக்கு போட்டி நிலவியது.

ஆனால், படத்தினைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தெலுங்கிலும் படங்களைத் தயாரிப்பதால் ரீமேக்கையும் நாங்களே தயாரிக்க இருக்கிறோம் என்று கூறிவிட்டார்கள்.

சூப்பர் குட் நிறுவனமே தயாரிக்கவிருப்பதால் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி நாயகர்கள் தான் நடிப்பார்கள் என்று செய்திகள் வெளியாகின.

இது குறித்து விசாரித்த போது, "படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேசி வருகிறார்கள். ஆனால் யார் நடிக்க போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் ஓரிரு மாதத்தில் முடிவாகிவிடும்.

ராம்சரண், சீரஞ்சிவி இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்ற செய்தியிலும் உண்மையில்லை. விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டியிடும் நிலையில், மோகன்லால் வேடத்தில் நடிப்பதற்கும் சரியான நடிகர் ஒருவர் வேண்டும்." என்று கூறினார்கள். 

'ஐ' இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள் - ஷங்கர்!

 'ஐ' படத்தினை விளம்பரப்படுத்த இயக்குநர் ஷங்கர் படம் உருவான விதத்தின் வீடியோவே போதுமானது என்று திட்டமிட்டு இருக்கிறார்.

விக்ரம், ஏமிஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தமிழ் சினிமாவில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஷங்கர் இயக்கியிருக்கிறார்.

படத்தில் விக்ரம் என்ன லுக்கில் வருகிறார் என்பதை கூட ஷங்கர் வெளியிடவில்லை. இப்படத்தினைப் பற்றிய செய்திகள் எல்லாமே மர்மமாகவே இருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. பிரம்மாண்ட அரங்கில் பாடல் காட்சி ஒன்றை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இந்நிலையில், படத்தினை விளம்பரப்படுத்த படம் உருவான வீடியோ பதிவே போதும் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர். பேட்டிகள் எல்லாம் கொடுத்துவிட்டு, படம் உருவான விதத்தினை டிவி சேனல்களில் கொடுத்தாலே போதும், மக்கள் ஆச்சர்யப்பட்டு விடுவார்கள் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.

ஏனென்றால், விக்ரமின் உழைப்பு, பாடல்களுக்காக செட்கள் போடப்பட்ட விதம், பாடல்களுக்கு விக்ரமிற்கு போடப்பட்ட மேக்கப், சண்டைக் காட்சிகள் உருவான விதம் என எல்லாவற்றையுமே வீடியோவாக எடுத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள். ஆகையால் பேட்டி கொடுத்துவிட்டு, இந்த வீடியோவை கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம். 

’சிந்துபாத்’ - சிம்புவுக்கா? விக்ரமுக்கா? குழப்பத்தில் செல்வராகவன்!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘இரண்டாம் உலகம்’ எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், இயக்குனர் செல்வராகவன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார்.

இவர் அடுத்து இயக்கும் படத்தை ’ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனம் சார்பில் வருண் மணியன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார்.

செல்வராகவன்– சிம்பு முதன் முதலாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.

விக்ரமை வைத்து இயக்குவதற்காக செல்வராகவன் ’சிந்துபாத்’ என்ற கதையை ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்தார்.

அந்த கதையை தான் இப்போது சிம்புவை வைத்து இயக்க இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

இது என் கதை இது என் அடையாளம் - விஜய்மில்டன்!

ஒரு படம் நன்றாக ஓடுகிறது என்று தெரிந்தவுடன் எங்க இருந்த தான் வரங்களோ தெரியவில்லை. இது என் கதை என் கதை என்று சொல்லி சில குரூப் கோடம்பாக்கத்தில் கும்மி அடிக்க தொடங்கியுள்ளனர்

இந்த காலத்தில் சினிமாவை வெறும் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில் மட்டுமே என்ற நோக்கில் பெரிய பெரிய ஹீரோக்கள் பின்னாடி அலையும் சில பல தயாரிப்பாளர்கள் மத்தியில் விஜய்மில்டன் தனக்கும் தன் உயிராய் நேசிக்கும் சினிமாக்கும் இந்திய அளவில் ஒரு நல்ல அடையாளத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இரவு பகலாக பாடுபட்டு எடுத்த கோலி சோடா படத்தை இது என்னுடைய கதை என்று சொல்லி சில விஷமிகள் சொந்தம் கொண்டாட ஆரம்பித்து உள்ளனர் .அது மட்டும் இல்லாமல் கடந்து சில நாட்களாக பேஸ்புக்கில் இதை பற்றி ஒரு பட்டிமன்றமே நடந்து உள்ளது .

இதை கேள்விப்பட்ட விஜய் மில்டன் தன்னுடைய மறுப்பையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து விஜய் மில்டன் கூறுகையில், எதிர்தரப்பு சொல்வது உண்மை என்றால் என்னை பற்றி கோர்ட்டிலோ அல்லது இயக்குனர் சங்கத்திலோ புகார் கூறி இருக்கலாம். அதை விட்டு பொய்யான செய்தியை இணையதளம் முலம் பரப்பி மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறாகள். ஏதுவாக இருந்தாலும் சரி நான் சந்திக்க தயார்,

படம் நன்றாக ஓடுகிறது என்று தெரிந்தவுடன் எங்க இருந்த தன வரங்களோ தெரியவில்லை.

இந்த கதையோடு நான் கடந்த இரண்டு வருடகாலம் பயணித்து உள்ளேன். பல துயரங்களுக்கு இடையே இந்த படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்து இருக்கிறேன். நான் ஒன்றை மட்டுமே கூறி கொள்கிறேன் தயவு செய்து விஷமிகள் சொல்லும் விஷயத்தை நம்பாதிர்கள்.

மாதக்கணக்கில் தாடி வளர்க்கிறார் கே.பாலசந்தர்! - உத்தமவில்லனுக்கு!

விஸ்வரூபம்-2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளில் தீவிரமடைந்திருக்கும் கமல், அடுத்தபடியாக, ரமேஷ்அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தனது நிஜவயது கேரக்டரிலேயே நடிக்கிறார் கமல். அதாவது நிஜத்தில் அவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா என்ற இரண்டு மகள்கள் இருப்பது போன்று, இந்த படத்தில் அவருக்கு நான்கு டீன்ஏஜ் மகள்களாம். அதனால் தனது இயல்பு தன்மையோடு இப்படத்தில் நடிக்கப்போகிறாராம் கமல்.

அதோடு, இதேபடத்தில் தனது குருவான கே.பாலசந்தரும் நடிப்பதால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் கமல். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று சுற்றிக்கொண்டிருந்த கமலை, ஹீரோவாகும்படி அறிவுறுத்தியவரே பாலசந்தர்தான். சினிமாவில் இயக்குனராக நினைத்தால் ஆட்டோவில்தான் செல்ல முடியும். ஹீரோவானால் காரில் செல்ல முடியும். காரா? ஆட்டோவா? ரெண்டில் எது வேண்டுமென்று நீயே முடிவெடுத்துக்கொள் என்று கமலிடம், அவர் சொன்ன பிறகுதான், தீர யோசித்த கமல், தனது இயக்குனர் கனவை ஓரங்கட்டி வைத்து விட்டு, கதாநாயகனாக ஒரே மனநிலையுடன் களமிறங்கியிருக்கிறார்.

ஆனால், அப்போது தன்னை வைத்து பாலசந்தர் இயக்கும் படங்களில் அவரை நடிக்குமாறு கேட்டுக்கொள்வாராம் கமல். ஆனால், திரைக்குப்பின்னால் இருந்து உங்களையெல்லாம் இயக்கும் வேலையே எனக்கு போதும் என்று மறுத்து விடுவாராம் கே.பாலசந்தர்.

அப்படிப்பட்டவரை இப்போது தான் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிக்க வைக்கிறார் கமல். அதோடு, இந்த படத்திற்காக இப்போதைய நடிகர்கள் முன்கூட்டியே தங்களது கெட்டப்பை சேஞ்ச் பண்ணுவது போல், பாலசந்தரும் மாதக்கணக்கில் தாடி வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவர் வளர்த்திருக்கும் தாடியைப்பார்த்தால், பெரியார், திருவள்ளுவர் போன்றிருப்பதாக சொல்கிறார்கள். ஆக, ஏதோ ஒரு பெருமை வாய்ந்த கதாபாத்திரத்தில் கே.பி நடிக்கப்போகிறார் என்பது மட்டும் தெரிகிறது.